Thursday 19 March 2015

இசை ராட்சஷன் - 8






                                                     இசை ராட்சஷன் -  8
                                                 
                                                   (  The  Musical Legend  )

                     
                                      தமிழ்த் திரையிசைக்குள்  இளையராஜா பிரவேசித்தபோது   நாட்டுப்புற இசை மட்டுமே  கொடுத்து வந்ததாக பலர் நினைத்தனர் .   ஆனால்  தனது முதல் திரைப்படத்திலிருந்தே கர்னாடக இசை , மேலை நாட்டு செவ்வியல் இசை , நாட்டுப்புற  இசை மூன்றையும் கலந்துதான்  கொடுத்து வந்திருக்கிறார் . ' கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக ' என்ற தெய்வப் புலவரின் வாக்கினுக்கேற்ப தான் பயின்ற கர்னாடக இசை , மேலை நாட்டு இசையை அதன் வர்ணம் மாறாதபடி கலந்து கலப்பிசையாக கொடுத்த பாடல்கள் ஏராளம் . மேலோட்டமாக பார்த்தால் இளையராஜாவின் பாடல்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் .  கூர்ந்து நோக்கும்போது கற்றுத் தேர்ந்த வித்தைகளைக்  கலவையாக்கி  சுவை குழைத்து இனிமை கூட்டி புதுமை சேர்த்துக் கொடுத்திருப்பார்.  மண் வாசமும் மக்கள் நேசமும் கொண்ட பல பாடல்கள் அவர் படைப்பாற்றலின் சிகரங்கள் ; நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணிகள் ; வார்த்தைகளில் வடிக்க இயலா பிரமிப்புகள்.

                                                     


                                  1968 இல் பிழைப்பிற்காக  பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு சென்னையை அடைந்து , மாஸ்டர் தனராஜிடம் மேலைநாட்டு செவ்வியல் இசை பயின்று , டி .வி . கோபாலகிருஷ்ணனிடம்  கர்னாடக இசை கற்று டிரினிட்டி இசைக் கல்லூரி நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று,  கிடார் கருவி பயின்றதில் தங்கப்பதக்கம் பெற்று ,  ஜி . கே. வெங்கடேஷ்  என்ற இசையமைப்பாளரிடம் துணை  இசையமைப்பாளராய் பணியாற்றி அதன் பிறகே  ' அன்னக்கிளி '  படத்திற்கு இசையமைப்பாளராய் பஞ்சு அருணாசலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்.  முதல் படமே மிகப் பெரிய வெற்றி . அந்த வெற்றியை அடைய அவர் பல மேடு பள்ளங்களை தாண்டி வரவேண்டியிருந்தது.  ஒரே படத்திலேயே தனது மொத்த ஆற்றலையும் அவர் வடித்துவிடவில்லை.  அவரது இசை வற்றாத ஊற்று , நிற்காத நதி ,  இறைக்காத கேணி , சறுக்காத ஏணி ,  மாறாத அமுதசுரபி ,  தீராத அட்சய பாத்திரம் . இளையராஜாவின் இசை நம் மக்களின் கலாச்சாரத்தோடு கலந்து நிற்கின்ற பண்பாட்டு அடையாளம் . அதனால்தான் ஆயிரம் படங்களையும் தாண்டி போய்க் கொண்டேயிருக்கிறார்.

                     
                            இத்தனை சிறப்புகளை பெற்ற மனிதராக விஸ்வரூபம் எடுத்து இசை ராஜ்ஜியத்தில்  பல இசை விநோதங்களை  படைக்கப் போகிறார் என்பது தெரியாமலே நான் அவர் இசை கேட்டு ரசித்து வளர்ந்து வந்திருக்கிறேன்.

                       1978 இல் எனக்கு கிடைக்கக் கூடிய ' பாக்கெட் மணி ' சேமிக்கும் பழக்கம் என்னிடம் இருந்தது . எனது அண்ணனிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனது மூத்த அண்ணன் என்னையும் இளைய அண்ணனையும் அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க கிளம்பினார். சினிமா முடிந்து மாலை வேளையில் ஹோட்டல் , பிறகு நடையோரக் கடைகளில் ஷாப்பிங் என்று அது ஆனந்தமான நேரம்.  ஒரு முறை நானும் எனது சேமிப்பை எடுத்துக் கொண்டு அண்ணன்களை  அது போலவே அழைத்துக்கொண்டு சென்றேன் . அண்ணன் காட்டிய வழியில் சினிமா, ஹோட்டல் , பிளாட்பார ஷாப்பிங் இத்யாதி என்று அதைப்  போலவே செய்தேன் . அண்ணன் என்ன வாங்கினாரோ அதைப் போலவே சின்னச்  சின்ன பொருட்கள் வாங்கினேன் . அவர் என்ன செய்தாரோ அதையே நானும் செய்தேன் . என் பிள்ளைகளும் இப்போது அப்படித்தான் இருக்கிறார்கள். மூத்தவள் என்ன செய்தாலும் இளையவள் பின்பற்றுவாள். அவளுக்குப் பிடித்தால் இவளுக்கும் பிடிக்கும் . இது என்ன பரம்பரை குணமா !?  பிள்ளைகளின் செய்கைகள் எனக்கு பின்னோக்கிப் போக தூண்டுகிறது .

                         
                                    அப்படி நான்  அண்ணன்களை  அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள  குளிரூட்டப்பட்ட ஒரு திரையரங்கிற்குச் சென்றேன் . ஒரு சில ஏ.சி தியேட்டர்களே அப்போது இருந்தன .  அந்தக் காலகட்டத்தில் ஏ .சி  அரங்கத்தில் படம் பார்ப்பதை பெரிய கௌரவமாக நினைப்போம் .  நான் ஏ.சி தியேட்டரில் படம் பார்த்தேன் என்பதை எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொள்வேன் . அதை ஆச்சரியமாக கேட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்.   ஏ.சி தியேட்டரில் அந்தப் படம் பார்த்து மிரண்டு போனேன் . படமும் இசையும் என்னை வெகுவாக மிரட்டியது.  அந்தப் படம்,  '  சிகப்பு ரோஜாக்கள் ' .


                         பாரதிராஜாவின் மூன்றாவது படம். ' கிராமத்துப் பின்னணியை விட்டால் பாரதிராஜாவிற்கு ஒன்றும் தெரியாது ' என விமர்சனம் வந்தவுடன் , 'எனக்கு நகரச் சூழல் வைத்தும் படம் எடுக்கத் தெரியும் ' என சவாலாகவே எடுக்கப்பட்ட திரைப்படம் . அதை முதல் படமாக பாரதிராஜா எடுக்க நினைத்தார். ராஜ்கண்ணு அவர்கள் வேறு கதை எதிர்பார்த்ததால் பதினாறு  வயதினிலே நமக்கு கிடைத்தது .  இல்லாவிட்டால் காலத்தின் கோலம்  மாறியிருக்கும் .  சிகப்பு ரோஜாக்கள் ஏறக் குறைய ஆங்கில சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்ட திரைப்படம் . வெற்றிப்படம். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பங்கு 50 சதவீதம் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது . அப்பப்பா ! என்ன ஒரு இசை ஆக்ரமிப்பு !

                     
                            அந்த  நேரத்தில் உள்ளடக்கமான குளிரூட்டப்பட்ட அரங்கில் படம் பார்த்து மிரண்ட அனுபவம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கிறது. இளையராஜாவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு படம் பார்த்தால் எந்த மிரட்டுலும் தெரியாது.  படத்திற்கு உயிரே இளையராஜாவின் இசைதான்!  இந்தப் படத்திலிருந்துதான் ராஜாவின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரு குறிப்பிட்ட  இசைத்துணுக்கை  பின்னணியாக படம் முழுவதும் ஆங்காங்கே வருமாறு இசைத்திருப்பார். கமலஹாசன் சாதாரணப் பார்வை கொண்டு பார்க்கையில் மென்மையாகவும் விஷமப் புன்னகையுடன்
பார்க்கையில் வித்தியாசமான மிரட்டல் இசையும் கொடுத்திருப்பார். ஒரு திகில் படம் பார்க்கும் அனுபவம் இசையினால் ஏற்பட்டது.  படத்தின் பிற்பாதியில் மிரட்டும் இசையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்லும் .
                                                 

                              கிளைமாக்ஸ் காட்சிகளில் படபடப்பும் பரபரப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது. தோட்டத்தின் மண்ணுக்குள்ளிருந்து கை ஒன்று நீள்வதைப் பார்க்கும் நாயகி அலறிக்கொண்டே ஓடுவதும்  ரத்த வெறி கொண்ட பூனை துரத்துவதும்  நாயகனும் அவளை கொலை செய்ய விரட்டுவதுமான பரபரப்பான காட்சிகளில் பூனையின் அலறல் சப்தம் கலந்து நூறு  வயலின்கள்  வாசிக்கப்படும்  பின்னணி இசை கொடுத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா. மனதை விட்டு நீங்காத அனுபவம் . திகில் படங்கள் பார்த்தால் கால்களைத் தூக்கி மேலே வைத்துக் கொள்வேன் . காலை ஏதோ ஒன்று பிடித்து இழுத்து விடுமென்று நான்தான் அப்படி பயப்படுகிறேன் என்று பார்த்தால் பக்கத்தில் அண்ணன்களும் காலை தூக்கி வைத்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

                                அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்  மட்டுமே !  ' இந்த மின்மினிக்கிக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது ...'  என்றொரு அழகான உற்சாகமான டூயட் பாடல். வாசுதேவனும் ஜானகியும் சேர்ந்து பாடி கலக்கியிருப்பார்கள். இனிமையான மெலடி . கேட்பவருக்கு உற்சாகம் உடனே தொற்றிக் கொள்ளும்  .இசையமைப்பு. வயலினால் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். கண்ணதாசனின் வார்த்தைச் சிக்கல் இல்லா வரிகள் . சங்கராபரணம் என்ற ராகத்தை அடிப்படியாகக் கொண்டு ஏக தாளத்தில்  வடிவமைக்கப்பட்டப் பாடல் . பாட்டின் இசைக்கேற்றவாறு காட்சியமைப்பிலும் பாரதிராஜா பின்னி எடுத்திருப்பார். இளமை கொலுவிருக்கும் கமலஹாசன், ஸ்ரீதேவி இருவரின் காதல் ஆட்டமும் ஓட்டமும் பேசுவதும் சிரிப்பதும் சுற்றுவதும் அழகிய காட்சியாக விரிக்கப்பட்டிருக்கும். பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்தால் மக்களையெல்லாம் இன்பக்கடலில் மூழ்க வைத்து எழ வைப்பதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் . அப்போது இருவரும் இணைந்தால் வெற்றி ஒன்றைத் தவிர வேறில்லை .


                               '  தோட்டத்திலே பல பூக்கள் உண்டு ..நீதானே சிகப்பு ரோஜா ..' என்ற ஆண் குரலுக்கு , ' இன்றும் என்றும் என்னை உன்னுடனே ...நான் தந்தேன் என் ஆசை ராஜா ...' என்று பெண் குரல் பதில் பாட ,  ' மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன் ... ன ...ன...ன ...ன ..ன  இனி தடை என்ன  அருகினில் இருக்கிறேன் ..'  என்று கேள்வி பதிலாக மாற்றி மாற்றி இருவரும் பாட கடைசியில் , ' னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன... னா ன ன்ன ..னான ..னான..னா ' என்ற ஹம்மிங்கோடு சரணம் முடியும் . ஹம்மிங் வரும் இடத்தில் வார்த்தைகள் போட்டு நிரப்பி இருக்கலாம் . ஆனால் ஹம்மிங் வைத்து முடிப்பது புதுமையாக இருந்தது. சரணம் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் , விதி எல்லாம் வேறுபடுத்தி இசையமைப்பது  இளையராஜாவின் புது முயற்சி. இரண்டாவது இடையிசையில் ஜானகியின் ஹம்மிங் நம்மை வேறுலகம் கூட்டிச் செல்லும் பாட்டின் முடிவில் ஜானகி கலகலவென சிரித்து முடிப்பது நமக்கும் புன்னகை பூக்க வைக்கும் .

                                           

                                பாடகர்கள் பாடுவதோடு  பாட்டில் நடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் . இல்லாவிடில் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகள்  காணாமல் போய்விடும் . டி.எம்.எஸ் , பாலு ,  ஜானகி ,  சுசீலா ,  எல்.ஆர்.ஈஸ்வரி  போன்ற பாடகர்கள் பாடும் பாட்டினில் அத்துணை உணர்ச்சிகளையும்  வெளிப்படுத்துவதில் முக்கியமானவர்கள்.  ' அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..' என்ற பாடலுக்கு டி.எம்.எஸ் அவர்கள் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள்ளேயே ஓடி ஓடி மூச்சு வாங்கி தத்ரூபமாக பாடினார்  என்பது ஒரு உதாரணம் .  போலவே ஜானகி அவர்கள் பாடலில் நடிப்பது மட்டுமல்லாது ஐந்து வயது குழந்தை போலவும் என்பது வயது பாட்டி போலவும்   குரல் மாற்றிப் பாடுவதில் வல்லவர்.  பாடிக்கொண்டே நடிப்பது நடித்துக் கொண்டே பாடுவது இரண்டுமே கடினமானது. குரல் மாற்றிப் பாடுவது அதை விட கடினமானது. ஆனால்  பாட்டில் சிரிப்பதும்  அழுவதும் ஜானகி அவர்களுக்கு  சுலபமாக வரும்.


                              ' நினைவோ ஒரு பறவை ' இன்னொரு சுகமான கீதம் .   வாலியின் வைர வரிகளில் கமலஹாசன் மற்றும் ஜானகி சேர்ந்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார்கள். திசுர  நடையில்  மென்மையாய் ஆரம்பித்து சுகமாய் பயணம் செய்யும் பாடல். காட்சியமைப்பையும்  பாரதிராஜா அழகிய கவிதை போலவே வடித்திருப்பார்.  பாடியவர்களா அல்லது இசைக்கருவிகளா எது நமை தாலாட்டுகிறது என்பதைச் சொல்ல முடியாத அளவிற்கு இசையின் வலிமை இருக்கும் .  '  ஹும் ...ஹும் ...' என்று ஜானகி கிடார் கார்டுகளுடன் காதல் வழிந்தோடும்  ஹம்மிங் கொடுத்து , ' நினைவோ ஒரு பறவை  ' என்று  ஆரம்பிக்க , கமலஹாசன்  '  பா ...ப..ப .பாப ...பா.. ' என்று   உச்சஸ்தாயில் ஹம்மிங்  கொடுத்துக் கொண்டே வர , ஜானகி பல்லவி பாடி முடிக்க , ஹம்மிங் முடித்து கமல்  பல்லவியை மீண்டும் பாட ஆரம்பமே அமர்க்களமான இசையோடு அமையும் .


                               இந்தப் பாடலுக்கு இடையிசை அற்புதமானது . ஒரு டிரம்பெட்  கருவி ஒலிக்கப்படும்போது  கோவில் மணியோசை இருமுறை சேருவது  வார்த்தைகளில் வடிக்க இயலா கலவை. அருமையான கற்பனை . இசைக்கருவிகளின் நாதம் ஒன்றின் மேல் ஒன்று மேவி வரும்  லாவகம் இளையராஜாவின் சிறப்பு . இசைக்கருவிகளின்   INTERPRETATION  , SUPERIMPOSITION  என்பது அந்த வயதுக்கு எனக்கு புரிந்திராவிட்டாலும் இளையராஜாவின் இசை மாயத்தை கேட்டுணரும் ஞானம் இருந்தது. அப்போதே இசையில் அவர் காட்டிய வித்தை  இப்போது இன்னும் தெளிவாக தெரிகிறது .


 ஆண்          ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்

பெண்          அதுவல்லவோ பருகாத தேன் அதை  இன்னும் நீ பருகாததேன்

ஆண்         அதற்காகத்தான் அலைபாய்கிறேன்

பெண்         வந்தேன் தரவந்தேன்

                           



பெண்        பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

ஆண்       அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

பெண்       மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

ஆண்       நீ தான் இனி நான் தான்


                             ஆண்  குரலும் பெண் குரலும் கேள்வி பதிலாய்  பாடிக்கொண்டே வர இறுதியில் பெண் பாடி ஆண் ஹம்மிங் கொடுப்பதும் ஆண் பாடி பெண் ஹம்மிங் கொடுத்து முடிப்பதும் கேட்பதற்கு அலாதி ஆனந்தமாக இருக்கும் . பல்லவி எப்படி ஆரம்பித்ததோ அப்படியே இறுதியிலும் முடியும்.  கமலஹாசனுக்கு இது அவர் பெயர் சொல்லும் பாடல் . இந்தப் பாடல் ஆரம்பித்து  இறுதிவரை  ஏதோ படகொன்றில் மெதுவாக ஆடி காற்றில் நகரும் அனுபவமாய் வயலின் இழைத்து இசைத்துப் பாடலை நகர்த்தும் விதத்தில் இளையராஜா உயர்ந்து நிற்பார். அபார கற்பனைத் திறன்!


                             அதே வருடத்தில்  ' ப்ரியா ' என்றொரு திரைப்படம் வெளிவந்தது. இளையராஜாவின் இசையும் பாடல்களும் முதன்முறையாக ஸ்டீரியோபோனிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. அதுவரை  'மோனோ ரெக்கார்டிங்' என்ற சாதாரண பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் எல்லாம் மயக்கும் பாடல்களாக கொடுத்து வந்த இளையராஜா  புதிய தொழில்நுட்பத்திலும்  மனதுருக்கும் பாடல்களைக் கொடுத்தார்.

                                           

                                இசைப் பதிவில் புது உலகம் பிறந்தது. பாடல்களில் பதிவு செய்யப்பட்ட   இசைக் கருவிகளின்  ஒலி அழகாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.
பாடல்களின் ஓசை நயம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டது. சின்னச் சின்ன இசைக் கருவிகளின் சப்தம் கூட அழகாக கேட்கும் வண்ணம் கொடுக்கப்பட்டது.  இப்போது அதை விட பெரிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் அந்தக் காலத்தில்  முதன்முதலாக ஸ்டீரியோ  ரெகார்டிங்  கேட்டபோது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் நினைவிருக்கிறது. பாடங்கள் படித்தது தேர்வு எழுதியது எல்லாம் நினைவில் இல்லை.


                                      ' ப்ரியா ' திரைப்படம் பார்த்தது நன்றாக நினைவில் உள்ளது.
ஒரு மதிய நேரத்தில், சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வைக் கசகசப்பில் கூட்டத்தில் முட்டி மோதி, டிக்கெட் கொடுக்கப்படும் கவுண்டர் அருகே கஷ்டப்பட்டு சென்று வாங்கி, நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, சட்டையெல்லாம் கசங்கிப் போய் கிழிந்து போய், தியேட்டருக்குள்ளே நுழைந்து ரசிகர்களின் விசில் சத்தத்தோடு படத்தைப் பார்த்தேன்.    அப்படி படம் பார்க்கும் சுகமே அலாதி சுகம் . எதையோ சாதித்த உணர்வு . சுகமான நினைவு.


                                       படத்தில் முதல் பாடல் ' டார்லிங் டார்லிங் டார்லிங்  ' . வெள்ளைக்குயில் என்று எஸ்.பி.பி அவர்கள் அன்புடன் அழைக்கும் சுசீலாவின் இனிய குரலில் ஆரம்பிக்கும். முதல் பாட்டுக்கே  விசில் சத்தம் பறந்தது.  ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஸ்ரீதேவிக்கும் கிடைத்தது . கதாநாயகிகளை  திரையில் முதலில் காட்டும்போது கைதட்டல் கேட்பதை மதுரையில்தான் பார்த்திருக்கிறேன் . பாடலின் பல்லவி ஆரம்பிக்கும் முன் ட்ரம்பெட் ஒலியுடன் அட்டகாசமாக வயலின்,  ட்ரிப்பில் பாங்கோஸ் சேர்ந்து முதல் BGM ஆரம்பிக்கும் .  BoneyM  குழுவினரின் ஆல்பத்தில் வந்த பாடலின் முதல் வரியை அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு  இந்தப் பாடலை வடிவமைத்தார் இளையராஜா . ஏக தாளத்தில் அமைத்த சுவாரசியமான பாடல் . படத்தில் எல்லா பாடல்களையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்கிறார் .  தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் . அவருக்கு தன் நன்றிப் பூக்களை காணிக்கையாக அழகிய இசை மாலையாக பின்னிக் கொடுத்திருப்பார் இளையராஜா.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

                                           

.                                    
                                       வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படத்திற்குத் தனித்த சிறப்பான இசையை இதற்கு முன்னர்  எம்.எஸ்.வி அவர்களிடம் கண்டிருக்கிறேன் .  இளையராஜாவும் அவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபித்திருப்பார்.    வெளிநாடுகளை சினிமாவில் காட்டும்போதே பின்னணி இசைக்கென்று புதிய பரிமாணம் கிடைத்துவிடும் . இதுவரை கேட்டிராத இசைக்கருவிகளின் நாதம் ஒலிக்கும். வெளிநாட்டு இசை இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை இசையமைப்பாளர்கள் உருவாக்கினார்கள்.  ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாரம்பரிய இசை ஒன்று உண்டு. அதைத்தான் வாசித்தளித்தார்களா  இல்லை கற்பனையா என்ற  ஆராய்ச்சி செய்ததில்லை . கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் . பிரியா படத்தின் பின்னணி இசையும் அப்படித்தான் இருந்தது. இப்போதுள்ள படங்களில் வெளிநாடுகளை காட்டும்போது பிரத்தியேக இசையெல்லாம் கொடுப்பதில்லை.


                                          ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று '  என்ற பாடல் வித்தியாசமான தாள நடையில் ஜேசுதாஸ் ஜானகி அவர்களின் குரல்களில் காப்பி ராகத்தில் திசுர நடையில் ஒலிக்கும் என்றும் அழியா இனிய கானம் . காலத்தால் அழிக்க முடியா காதல் கீதம். கிடார் கார்ட்ஸ் ஆரம்பித்து ஜானகி ஹம்மிங் கொடுக்க ஜேசுதாஸ் ஹம்மிங் தொடர ஆரம்பமே அமர்க்களமாக இரு தேவதைகளின் தேவ கானம் போலவே இருக்கும். பாடலின் இடையிசையில் ஷெனாய்  பயன்படுத்தப்படிருக்கும். ஷெனாய் ஒலிக்கப்படும்போது  தாள நடையும் மாறி வரும் .  பொதுவாக இந்த ஷெனாய் சோக கீதங்களுக்கே இசைக்கப்படும் இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டு  வந்தது. சந்தோசமான கீதங்களுக்கும் அதை இசைக்கச் செய்தவர் இளையராஜா .  இந்தப் பாடல் மட்டுமல்ல . அதன் பிறகு வந்த ஏராளமான சந்தோசப் பாடல்களில் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார் .

                                                     

                                           சிறு வயதில் பாடல் கேட்டபோது அதைப் பற்றி எதுவும் அறிந்ததில்லை. நாட்டில் முக்கியமான தலைவர்கள் மறைந்து போனால் வானொலியில் அன்றைய நாள்  முழுவதும் இசைக்கப்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு இசைக்கருவிதான் ஷெனாய் என்பது அப்போது தெரியாது . ஆனால் கேட்கும்போதே  மனசுக்குள் ஆழப் புதைந்த துக்கமெல்லாம் நினைவலைகளில் வந்து மோதும் உணர்வினைத் தரும். இந்தப் பாடலில் அதன் நாதம் கேட்டபோது  எங்கோ கேட்ட நினைவு எழும்பியது. புதுமையாகவும் தெரிந்தது. சோகத்திற்கு இசைப்பதை சுகத்திற்கும் இசைக்கின்ற இளையராஜாவின் கற்பனையை நான் வெகுவாக ரசித்திருக்கிறேன்.  வீணையின் நாதமும் இந்தப் பாடலில் அதிக சுகம் தரும் .


                                               ' அக்கரைச் சீமை அழகினிலே  '  என்ற பாடல் ஜேசுதாஸ் தனித்துப் பாடியது.  ஏக தாளத்தில் அமைந்த உற்சாகமான பாடல்.  இந்தப் பாடலும் வெளிநாட்டு இசையில் வந்த ஒரு பாடலை அகத்தூண்டலாக எடுத்துக் கொண்டு இளையராஜா தனது பாணியில் அழகாக கொடுத்திருப்பார்.
( "Akarai Cheemai" song was loosely inspired by "Kites by Simon Dupree and the Big Sound. )
சிங்கப்பூர் மக்களின் பண்பாடு கலாச்சாரம் போற்றும் பாடல் . வயலினின் ஆக்ரமிப்பை பாடல் முழுவதும் கேட்கலாம் . ஆரம்ப இசையே அமர்க்களமாக அமையும் . கிடாரில் ஆரம்பித்து வயலின் தொடர்ந்து புல்லாகுழல் இழைத்து மீண்டும் வயலின் இசைத்து நிறுத்த ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பது கேட்க அலாதி ஆனந்தம்.  மூன்று சரணம் , மூன்று வெவ்வேறு இடையிசை என்று பாடல் அற்புதமாக இருக்கும்.  இரண்டாம் இடையிசையில் வரும் குரலிசை மனதை கொள்ளை கொள்ளும் . பல்லவி, சரணம்   ஒலிக்கப்படும்போது  கூடவே இசைக்கப்படும் வயலின் நம்மை எங்கெங்கோ இட்டுச் செல்லும் .

                                               

                             ' என்னுயிர் நீதானே  ' என்ற பாடல் ஜேசுதாஸ் மற்றும் ஜென்சி குரல்களில் காப்பி ராகத்தில் உருவாக்கப்பட்ட பாடல். இந்தப் படத்திற்கு உருவான முதல் பாடல் இதுதான் என சொல்லப்படுகிறது.  ஆரம்பமே வேற்று மொழியில் இருக்கும்.   ' ஹத்தியக்கு ஷூக்காவா ..ஸ்லாலுவத்கு சின்தாவா ...'
என்று பாடல் ஆரம்பிக்கும். என்னுயிர் நீதானே... உன்னுயிர் நான்தானே  என்பதே அதன் அர்த்தம்  எனப் புரிந்தது. இந்தப் பாடலும் வித்தியாசமான பாடல் . சந்தோசமான காதல் கீதம். ஜென்சி அவர்களின் குரலும் வித்தியாசமானதே.  கேரளத்திலிருந்து வந்த ஒரு மலையாளக் குயில்.
 .இளையராஜாவின் ஆரம்ப கால பாடல்களில் வலம் வந்தார்.  மூக்கிலிருந்து பாடுவதாக குற்றச்சாட்டு உண்டு . ஆனாலும்  அதுவும் அழகாகவே இருக்கும் .


                                     ' ஸ்ரீ ராமனின்  ஸ்ரீ தேவியே  ' என்ற பாடல் க்ளைமாக்ஸ்   காட்சியில் வரும் கடைசி பாடல் .  ஜேசுதாஸ் குரலில் அமர்க்களமான பாடல் .
முழுக்க முழுக்க வயலின் கொண்டு இழைக்கப்படும் பாடல். இளையராஜா ஒரு இசை விளையாட்டையே நடத்தியிருப்பார். பரபரப்பான காட்சி . கடத்தி அடைக்கப்பட்ட நாயகி எந்த கட்டடத்தில் இருக்கிறாள் என்பதை குறிப்பால் உணர்த்தச் சொல்லி நாயகன் பாடல் பாடுவதாக கொடுக்கப்பட்ட சூழலுக்கு இளையராஜாவின் இசை கற்பனைக்குத் தகுந்தாற்போல காட்சி அமைத்திட இயக்குனர் சிரமப்பட்டிருப்பார்.  பெரும்பான்மையான படங்களில் இளையராஜாவின்  இசையமைப்புக்குப் பொருத்தமான காட்சிகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.  இந்தப் பாடலில் கோவில் மணியோசையோடு ஆரம்பித்து வயலினால் வேகம் கூட்டி கிடாரில் மென்மையாக்கி ஜேசுதாஸ் பல்லவி ஆரம்பிப்பதே அற்புதமாக அமைந்திருக்கும். இடையிசையில் மீண்டும் வேகம் கூட்டுவதும் ட்ரம்பட் கொண்டு குறைப்பதும் இறுதியில் ஏதோ நடக்கப் போவதைப் போல வயலின் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உச்சஸ்தாயில் முடிப்பதும் இசையிலேயே கதையை சொல்லிவிடும் இளையராஜாவின் இசை யுக்தி அபாரம்.

                                         

                                     பிரியா  படத்தில் ஐந்து பாடல்களும் ஐந்து விதம் . ஐந்தும் வித்தியாசமானவை . கேட்க கேட்கத் திகட்டாத தேனமுது. இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சௌத்ரி இளையராஜாவை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்தப் படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்த விதம் பற்றியும் சிகப்பு ரோஜாக்கள் பாடல்கள் அமைத்த விதம் பற்றியும் இளையராஜா சொல்வதை கீழ்க்கண்ட லிங்கில் காணலாம் .


             http://cinema.maalaimalar.com/2013/03/30233025/Priya-in-the-film-Music-Music.html


                                ஷெனாய் வாத்தியக்கருவியை இளையராஜா  பிரியா படத்தின் பாடலான ' ஹேய் ...பாடல் ஒன்று ...ராகம் ஒன்று' என்ற பாடலில் பயன்படுத்திய விதத்தை வியந்து சொல்லியிருந்தேன் . பாடலின் விளக்கம் தடைப்படும் என்று   அங்கே நீட்டிக்காமல்  மீண்டும் அதைப் பற்றி  சொல்ல இங்கு ஒரு  'லிங் 'குடன்  வருகிறேன். தமிழ்நாட்டின் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களின் குமாரன் திரு . சுகா என்பவர் கீழ்க்கண்ட பதிவு ஒன்றைத் தந்திருக்கிறார்.
                                     

     

                  
         உலகின் மிகப் பிரபல ஷெனாய் வித்வான் மேன்மைமிகு உஸ்தாத்  பிஸ்மில்லா கான் அவர்களின் சீடர் பண்டிட் பாலேஷ்  என்பவர்  இளையராஜாவிடம்  ஷெனாய்  கலைஞராக பல ஆண்டுகள் பணி  புரிந்து வருகிறார்.   இளையராஜாவிற்கு முந்தைய அல்லது பிந்தைய எத்தனையோ இந்திய இசையமைப்பாளர்களிடம் அவர்  வேலை செய்திருந்தாலும் இளையராஜாவிடம் பணியாற்றியபோது  ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் இளையராஜாவின் இசைத் திறமையையும் மற்ற இசையமைப்பாளரிடமிருந்து எந்த அளவு இசை அறிவிலும் நுணுக்கக்கங்களிலும் வேறுபட்டிருக்கிறார் என்பதையும்  நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை சுகா அழகாக பதிவிட்டிருக்கிறார்.  தவறாமல் வாசியுங்கள் . 

                     http://venuvanam.com/?m=201104
                        
                           


...............................தொடர்வேன் ................................................




60 comments:

  1. மிக அருமை,
    வார்த்தைகள் இயல்பாகவும் எளிமையாகவும் அனைவரும் படிக்கும் விதத்தில் உள்ளது.

    ReplyDelete
  2. முதல் வருகை . என் பதிவை வாசித்து கருத்துரையிட்டதற்கு நன்றி சேகர் சார் .

    ReplyDelete
  3. சால்ஸ். இடையிடையே பாடல்களைக் கேட்டவாறே செய்திகளைப் படிக்கும் விதமாக பதிவை அமைத்திருப்பது அமர்க்களம் .அத்துடன் பண்டிட் பாலேஷ் அவர்களது பேட்டியையும். இணைத்திருப்பது தங்கள் பதிவிற்கு இன்னும் மெருகூட்டுவதாய் உள்ளது .

    ReplyDelete
  4. வாங்க அருள்ஜீவா

    பண்டிட் பாலேஷ் அவர்கள் நான் சொல்லாமல் விட்ட நிறைய விசயங்களை கூடுதலாகவே கொடுத்திருக்கிறார். இளையராஜாவின் இசைத் துணுக்குகள் பதிவு முழுவதும் வேறு நிறத்தில் உள்ள வார்த்தைகளில் மறைந்திருக்கும் . அதைக் கேட்டுப் பார்க்க சிலர் மறந்து விடுவார்கள் . நீங்கள் கேட்காமல் இருந்தால் கேளுங்கள் . இளையராஜாவின் இசை நுணுக்கங்கள் புரியவரும் . எத்தனையோ இசை விற்பன்னர்கள் அவர் இசைப் பற்றி மனதார பாராட்டி இருக்கிறார்கள் . அவைகளையெல்லாம் ஒரே பதிவில் கொடுத்துவிட முடியாது . இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் .

    ReplyDelete
  5. இசை ராட்சஷன் என்ற பெயர் வைக்கும் போதே இதைத்தவிர வேறு எதுவும் எழுத முடியாது என்பது தெரிந்தே இருந்தது. ஆனாலும் உங்களின் ராசா பாசம் ரொம்பவும் ஓவராக வழிகிறது பதிவு முழுதும். திகட்டுகிறது.

    சலங்கை ஒலி படத்தில் வரும் நாத வினோதங்கள் பாடல் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. அதில் பார்வதீ பரமேஸ்வர என்ற வார்த்தையை எஸ் பி பி பார்வதீப ராமேஸ்வர என்று இரண்டாம் முறை பிரித்துப் பாடி வெகு நுட்பமாக சிவன் விஷ்ணு இருவருக்கும் வணக்கம் சொல்வதுபோல அமைத்திருப்பார் இளையராஜா. ... என்று இ ரா பற்றி உங்களைப் போலவே சிலாகித்து எழுதினார் ஒருவர். பரதம் நன்கு தெரிந்த ஒரு புண்ணியவான் அது ஒன்றும் இளையராஜா செய்த வித்தை அல்ல. பரதநாட்டிய பயிற்ச்சியிலேயே காளிதாசரின் இந்தப் பாடலை அப்படி வார்த்தைகளை பிரித்துப் பாடி வித விதமான அபிநயங்கள் காட்டி ஆடும் படியான ஒரு மரபு காலங்காலமாக பயிற்றுவிக்கப்பட்டுவருவதாக தெரிவித்து ராஜா ரசிகரின் மூக்கை உடைத்தார். இப்படிதான் பெரும்பாலான ராஜா அபிமானங்கள், புகழ் மாலைகள் வெறும் வெற்று கோஷங்களாக இருக்கின்றன. நீங்களும் இது போல ஏதேதோ எழுதுகிறீர்கள்.

    உதாரணமாக பிரியா படப் பாடல்கள். போனி எம் மின் சன்னி பாடல் பெரிய அளவில் இந்தியாவில் புகழ் பெற்றது. அதன் பல்லவியை வைத்துகொண்டு டார்லிங் என்று ஒரு பாட்டை அமைத்தார் இ ரா. அதில் வரும் ஐ லவ் யு மெட்டு கூட போனி எம் துப்பியதுதான். இதைதான் இ ரா உங்கள் சொல் படி அக தூண்டுதலால் தமிழ் படுத்தினார். ஒரு பாடலின் வெற்றிக்கு அதன் பல்லவி மனதில் உட்கார்ந்தால் போதும். மீதியை உப்பு சப்பில்லாத சரணம் சம்பந்தம் இல்லாத இடையிசை செய்து விடும். டார்லிங் பாடல் இந்த வகைதான். அடுத்து அக்கரைச் சீமை அழகினிலே பாடல் .. மிக அருமையான பாடல். எப்படி இப்படி ஒரு பாட்டு என்று ஆராய்ந்தால் வெளிச்சம் வருகிறது.... எங்கேயிருந்து எடுத்தார் என்று. சைமன் டூப்ரி குழுவினரின் கைட்ஸ் பாடலை அப்படியே கையாண்ட "திறமைக்கு" அக தூண்டுதல்! இதையையே ரஹ்மானோ தேவாவோ செய்தால் காப்பி. மனசாட்சி என்று எதுவும் இருந்தால் தொட்டுவிட்டு தட்டச்சு செய்யுங்கள் சால்ஸ் அவர்களே.

    சிகப்பு ரோஜாக்கள் பட இசை திகிலூட்டியதாம். அட! வேடிக்கைதான்....படத்தை இப்போது பார்த்தால் படு செயற்கையாக இருக்கும். பூனை வந்துவிழுவது (இயக்குனரோ யாரோ அதை தூக்கிப் போடுவதை நன்றாக உணரலாம்.) மண்ணிலிருந்து கைகள் வெளி வருவது, கமல் நத்திங் என்று கத்திவிட்டு வலிந்து எங்கிருந்தோ பென்சிலை எடுத்து டேபிளில் கிறுக்குவது என அபத்தக் களஞ்சியம். இ ராவின் இசை இந்த மாதிரியான அபத்தமான காட்சிக்கு பொருத்தமானதாக இருந்தது உண்மைதான். இந்த பா ராவும் இ ரா வும் சேர்ந்து நமது தமிழ்த் திரையை நாசம் செய்ததுதான் மிச்சம். இதைவிட நடு இரவில், அவனா இவன், அதே கண்கள் படங்களில் இசை நன்றாகவே இருக்கும்.

    பண்டிட் பாலேஷ் கூறியதை குறிப்பிட்டு (இப்படியெல்லாம் எதையாவது மேற்கோள் காட்டித்தான் உங்கள் கடையை நடத்த வேண்டும் போல) மேலே வேண்டுமானால் லிங்கில் தட்டி படிக்கவும் என்று சிபாரிசு வேறு. அவர்தான் சொன்னார் இதே பேட்டியில் " அவருக்கென்ன ஈஸியா எதையும் எழுதிட்டு போயிடுவார். வாசிக்கிற எங்களுக்குத்தானே கஷ்டம்.." மனதில் தோன்றுவதையெல்லாம் இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவது ஒரு திறமைதான்...எழுதுவதுதானே...

    கடைசியில் நான் இதில் ரசித்தது நீங்கள் உங்கள் அண்ணன்மார்களுடன் சென்று படம் பார்த்த அந்த அனுபவத்தைத்தான். இதே போல உங்கள் அனுபவங்களை நிறைய எழுதுங்கள்...அதுவாவது படிக்க சற்று புதுமையாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. போனிM துப்பியது என்று சொன்ன வார்த்தையிலேயே காழ்புணர்சி...நடுநிலை என்று இனி சொல்லாதீர்கள்...காழ்புணர்சி ஓர் கேவல உணர்ச்சி

      Delete
  6. வாங்க காரிகன்

    வழக்கமான கைலியுடன் ..சாரி ... கேலியுடன் வந்திருக்கிறீர்கள்.

    காப்பியோ அகத்தூண்டலோ இளையராஜா மட்டுமல்ல ஆதி காலத்து இசையமைப்பாளர்களிலிருந்து இப்போதுள்ள கத்துக் குட்டி இசையமைப்பாளர்கள் வரை எல்லோரும் செய்ததுதான் . அதற்கும் ஆதாரம் காட்ட முடியும். மேலை நாட்டு இசையில் ஒரு சிறிய knot ஐ எடுத்துக் கொண்டு அதைத் திரை இசைக்கு ஏற்றார்போல கயிறாக திரித்துக் கொடுக்கும் திறமை இருந்தால்தான் அந்தப் பாடல்களையும் வெற்றி பெற வைக்க முடியும். இளையாராஜா அதில் கில்லாடி . பிரியா பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் . இல்லை என்று நீங்கள் சொன்னால் பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது.

    ராஜா அபிமானிகள் அவரைப் பற்றி வெற்று கோஷம் இடுவதாக சொல்கிறீர்களே பண்டிட் பாலேஷ் அவர்களும் அதைத்தான் செய்தார் என்று சொல்ல வருகிறீர்களா? ஆழ் மனதிலிருந்து அவர் பேசுவது கூடவா புரியவில்லை.

    ' எழுதுவதுதானே ' என்று சுலபமாக சொல்லிவிட்டீர்கள் .மற்ற இசை அமைப்பாளருக்கு ஏன் ' எழுத ' வரவில்லை? எல்லா இசைக்கருவிகளுக்கும் நோட்ஸ் எழுதி ஒருங்கிணைப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அன்று இரண்டுமணி நேரத்தில் எழுதிய நோட்ஸ் இப்போது எழுத மூன்று நாட்கள் பிடிக்கிறது என ராஜாவே சொல்லி இருக்கிறார்.

    ///அவருக்கென்ன ஈஸியா எதையும் எழுதிட்டு போயிடுவார். வாசிக்கிற எங்களுக்குத்தானே கஷ்டம்.." ///

    பண்டிட் பாலேஷ் கூறிய இந்த வார்த்தைகள் ராஜாவை இழிவு படுத்துபவை அல்ல . ராஜாவின் இசைத்திறமைக்கு மிகப் பெரிய அங்கீகாரம்.

    ReplyDelete
  7. பிரியா பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். யார் இல்லை என்றது?

    டங்க மாறி ஊதாரி பாடலும்தான்..கிளாசிக்கில் சேர்த்துவிடலாமா?

    இராவின் பல ஹிட் பாடல்கள் இதுபோன்று "காவியப்" பாடல்கள் வகைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா காரிகன் உங்கள் பேச்சுப்படி பார்த்தால் எம்.எஸ்.வி , கே.வி.எம் , வி . குமார் போன்றோரின் பாடல்களும் ' டங்கா மாரி ' பாடல் போன்று காவியப் பாடல்கள்தான் . ஏனென்றால் அவர்கள் பாடல்களும் டங்காமாரி பாட்டு போலவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு இல்லையா !?

      Delete
    2. என் வார்த்தைகளையே உங்கள் பதிலாக பயன்படுத்தும் உங்கள் இயலாமையை ரசிக்கிறேன். நீங்கள்தான் இதை ஆரம்பித்தீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். இதிலிருந்து நூல் பிடித்து வேறு எங்கோ செல்கிறீர்கள். நிறுத்திக்கொள்ளவும்.

      Delete
  8. சார்லஸ் சார், உங்கள் சிறு வயது அனுபவங்கள் படிக்கும்போது எனக்கு அதே. கொஞ்சம் தள்ளி நான் அனுபவித்தேன். எனக்கு மண்வாசனை காலத்திலிருந்து தான் இந்த அனுபவங்கள் கிடைத்தது. அருமையான உங்கள் கட்டுரையை ஏழரை கூட்டி கேலி செய்வதற்கு சிலர் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ப்பட்டால் அது அனுபவம். நமக்கு ஏற்ப்பட்டால் இசைஞானியின் புகழ் மொழியாம். இவரின் வையிற்றுரிச்சல் நன்றாகவே தெரிகிறது, பேச்சில் காரம் தெரிகிறது. உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் காண்பது போல் தெரிகிறது.

    //பிரியா பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். யார் இல்லை என்றது?

    டங்க மாறி ஊதாரி பாடலும்தான்..கிளாசிக்கில் சேர்த்துவிடலாமா?//

    அன்றைய கால பாடல்கள் ஹிட் ஆகியிருந்தால், அப்போதைய ஹிட் மட்டும் என்று இருக்க கூடாது பத்து வருடங்களுக்கு பிறகும் கேட்க கேட்க இனிக்க வேண்டும். பிரியா படப்பாடல்கள் இன்றும் பண்பலை, பஸ் என்று எல்லா இடங்களிலும் கேட்க படுகிறது (உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையேன்றால் நீங்கள் நல்ல காது,மூக்கு, தொண்டை டாக்டர் பார்க்கவும்). கடந்த முப்பது வருடமாக கேட்க படுகிறது. முக்காபுலா, சிக்குபுக்கு, ஊர்வசி, நேத்து வந்த நக்க முக்க, கொலைவெறி பாடல்கள் எல்லாம் ஹிட் தான் வந்த காலகட்டங்களில் ஆனால் இன்று யாரும் இதை கேட்பதில்லை. அதனால அவை காவிய பாடலாக சேர்க்கலாமா? வேண்டாமா? என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். மனசாட்சியை கலட்டி வைத்து நீங்கள் எழுதும் எழுத்துக்கள் உங்களை எம்.எஸ்.வி அய்யாவின் இசை ரசிகனாய் என்னால் நினைக்க முடியவில்லை. உங்களுக்கு எத்தனை பதில் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் சொன்னதே சொல்லுவது பார்த்தால் நீங்கள் இசைஞானி மேல் ஆதிக்க வர்க்க சமுக வன்மம் வைத்திருக்கிறீர்களோ? என என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மாதிரி எண்ணம் இருந்தால் நீங்கள் உங்கள் பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

    ReplyDelete
  9. குமார் சார்

    காரிகனைப் போல நாமும் அவர் பாராட்டிப் பேசும் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.வி , வி. குமார் , கே .வி.எம் போன்றோரை இழிவுபடுத்தி எழுதவேண்டும் என்று நினைத்தால் எவ்வளவோ எழுதலாம் . ஆனால் உண்மையான ராஜா ரசிகர்கள் அந்த மாதிரி கேவலமான செயலை செய்ய மாட்டோம் . ஏனென்றால் நாம் அவர்களையும் மதிப்பவர்கள் . அவர்களின் இசைத் திறனையும் மதிப்பவர்கள் . காரிகன் உண்மையான இசை ரசிகர் என்றால் ராஜாவின் பாடல்களை விரும்பியிருப்பார் . அவர் வெறும் ஆங்கில இசை கேட்டு வளர்ந்தவர் . காட்டுத்தனமான கூச்சல் போடும் பாடல்கள் அதிகம் கேட்டிருப்பார். சமீபமாகத்தான் எல்லா தமிழ் பாடல்களையும் கேட்டிருக்க வேண்டும் . ராஜாவின் இசை அவருக்குப் புரியவில்லை . பாவம்.... புரியாதவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . அவருக்கு கொஞ்சம் குறைவு. இசையறிவைச் சொன்னேன்.

    ReplyDelete
  10. வாங்க வி எஸ் குமார்,

    ஒன்னு புரியவே மாட்டேங்குது. ராஜா ரசிகர்கள் என்றாலே தமிழ் சரியா வராதோ? தட்டச்சு செய்யும்போது ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு வெளியிடுங்கள். நீங்கள் கோபமாக இருப்பது ரொம்பவும் நகைச்சுவையாக எழுத்தில் தெரிகிறது.

    இளையராஜா பாடல்கள் என்றால் அவரது பாடல்களைத்தான் ஒலிபரப்புவார்கள். அதுவும் டவுன் பஸ், மினி பஸ் பாட்டுக்கள் பற்றி எல்லாம் பேசினால் கூட காது வலிக்கும். அத்தனை இரைச்சல் இசை. எல்லாமே முக்கால் வாசி இரா பாட்டுக்கள்தான். கேட்கச் சகிக்காது.

    நீங்கள் முக்காபுலா, ஊர்வசி வகைப் பாடல்களைக் கேட்காவிட்டால் வேறு யாரும் கேட்கவில்லை என்று ஆகிவிடுமா? நல்ல கதைதான் போங்க. இளையராஜாவின் பாடல்களை மட்டும் இன்னமும் இளைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் போலும். எனக்குத் தெரிந்து இளையராஜா என்றாலே இப்போதைய இளைஞர்கள் 'கிராமத்து இசை. வெறும் டப்பா பாட்டு' என்றுதான் சொல்கிறார்கள். ரஹ்மானையே தள்ளி நிற்க வைத்துவிட்டு அனிரூத், இமான், என்று வந்துவிட்டார்கள்.

    ஆதிக்க சாதி வன்மம் என்று விபரீத கோடுகள் வரைகிறீர்கள். வன்மையாக கண்டிக்கிறேன். இராவை எதிர்த்தால் வரும் சாதி அவரை பாராட்டிப் புகழும் போது மட்டும் காணாமல் போவது ஏன்? மேலும் வெறும் இசை மட்டுமே விவாதிக்கப்படும் இடத்தில் இது போன்று புல்லுருவி வேலைகள் செய்யவேண்டாம். இப்படிப் பேசித்தான் உங்கள் இராவை நீங்கள் பாதுகாக்க முடியும் என்று நீங்கள் எண்ணுவது போல தெரிகிறது. இதை அவரே விரும்பமாட்டார்.

    ReplyDelete
  11. சார்ல்ஸ் , நல்ல பதிவு..!! வாழ்த்துக்கள்.!கலைஞர்களின் லிங்க் மெருகூட்டுகிறது.நம்பகத் தன்மையை தருகிறது.சிலர் எழுதும் வதந்திகளை போலல்லாது இருப்பது சிறப்பு.

    ஊர்வசியையும் , முக்காலவையும் கிலாகிக்கும் ஒருவர் இங்கே எம் எஸ் வீ பெருமை பேசுகிறார்.எம் எஸ் வீ யும் , புலமைபித்தனும் ரகுமானை பகிரங்கமாகக் கண்டித்தனர் என்பதை வெங்காயப் புலவர் காரிகன் மறந்து விட்டாரா ..?

    புல்லுருவி வேலைகளை திட்டமிட்டு செய்பவர் மற்றவர்கள் மீது அபாண்டமாகப் பழி போடுவதை பார்க்க செம காமடியாக இருக்கிறது.அறிவு சுரணை இல்லாத இந்த சாதிவெறிபிடித்த ஜென்மங்களுடன் எப்படி விவாதிப்பது?

    எத்தனை தரம் நம்மிடம் மண் கவ்வியிருப்பார்கள் இவர்கள் ..!! வேடிக்கை மனிதர்கள் !!

    ஒருவர் சாக்கு சொல்லி ஓடி ஒளிந்து கொண்டார்.

    ReplyDelete
  12. வாங்க விமல்

    உங்களின் பாராட்டுக்கு நன்றி. காரிகனை நாகரீகமாகவே விமர்சிப்போம். ஏனென்றால் அவர் ஒரு விமர்சகர் . அவ்வளவுதான் . இசை விற்பன்னர் கிடையாது. அவர் எழுதுவதை பார்த்தால் இசை படித்தவரும் அல்ல என நன்றாகவே தெரிகிறது . இசை படித்தவர்களுக்கு இளையராஜாவின் இசை நுணுக்கங்கள் ஆச்சரியப்படும்படியான விஷயங்கள் . இவர் ராஜாவைத் தவிர மற்ற ஒன்றுமில்லாத உப்புச் சப்பு இல்லாத இசை அமைப்பாளர்களையெல்லாம் பாராட்டுகிறார் . அது பெரிய காமெடி . நாம் நாலு கேள்வி கேட்டால் வேற்றுத் திசையில் மாற்றுத் திசையில் தடம் புரண்டு ஓடுவார் . நேரடியாக எந்த பதிலும் சொல்வது கிடையாது. திண்ணைப் பேச்சு வீரர் என்று சொல்லலாம் .

    நாம் ஆதாரத்தோடு இளையராஜாவின் பெருமைகளை எடுத்துச் சொன்னால் அதைப் பற்றி விமர்சனம் செய்ய மாட்டார் . கீறல் விழுந்த ரெக்கார்ட் போல இளையராஜா இசையின் மீது வன்மப் பூச்சு பூசிக் கொண்டே இருப்பார். இளையராஜா மீதா அல்லது அவரது இசையின் மீதா என தெரியாத அளவிற்கு விமர்சனங்கள் வைக்கிறார்.

    ராஜாவின் இசை அருமை நம்மைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களுக்குப் புரியும் . இவரைப் போல உள்ளவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு . எட்ட முடியுமா என்று குதித்துப் பார்க்கிறார்கள் . முடியவில்லை பாவம்!





    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. //ஒன்னு புரியவே மாட்டேங்குது. ராஜா ரசிகர்கள் என்றாலே தமிழ் சரியா வராதோ? தட்டச்சு செய்யும்போது ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு வெளியிடுங்கள். நீங்கள் கோபமாக இருப்பது ரொம்பவும் நகைச்சுவையாக எழுத்தில் தெரிகிறது.//

    என் எழுத்தில் கோபம் இருப்பதாக நீங்களாக சொல்வது தான் காமெடியாக இருக்கிறது. நான் நிதானமாக தான் உங்களிடம் கேட்கிறேன். அதற்க்கு அப்படி ஒரு தோற்றம் இருந்தால் உங்கள் மனநிலையில் தான் ஏதோ கோளாறு. உங்களுக்கு புரிந்து தானே பதில் சொல்லிருக்கிறீர்கள்.

    //இளையராஜா பாடல்கள் என்றால் அவரது பாடல்களைத்தான் ஒலிபரப்புவார்கள். அதுவும் டவுன் பஸ், மினி பஸ் பாட்டுக்கள் பற்றி எல்லாம் பேசினால் கூட காது வலிக்கும். அத்தனை இரைச்சல் இசை. எல்லாமே முக்கால் வாசி இரா பாட்டுக்கள்தான். கேட்கச் சகிக்காது. //

    ஒத்துக்கொண்டீர்கள் பஸ்களில் ராஜா சார் இசை எங்கும் ஒலிக்கும் என்று, ஆனால் ஒத்துகொண்டது தெரியாமல் இருக்க இரைச்சல் என்று சொல்லி உங்கள் மனதை தேற்றிகொண்டீர்கள். அவர் என்று கத்திக்கொண்டு, பாத்திரங்கள் உருட்டுவது போல் இசையமைத்தார் இரைச்சலாக கேட்பதற்கு.

    //நீங்கள் முக்காபுலா, ஊர்வசி வகைப் பாடல்களைக் கேட்காவிட்டால் வேறு யாரும் கேட்கவில்லை என்று ஆகிவிடுமா? நல்ல கதைதான் போங்க. இளையராஜாவின் பாடல்களை மட்டும் இன்னமும் இளைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் போலும். எனக்குத் தெரிந்து இளையராஜா என்றாலே இப்போதைய இளைஞர்கள் 'கிராமத்து இசை. வெறும் டப்பா பாட்டு' என்றுதான் சொல்கிறார்கள். ரஹ்மானையே தள்ளி நிற்க வைத்துவிட்டு அனிரூத், இமான், என்று வந்துவிட்டார்கள் //

    நிச்சயமாக இப்போதெல்லாம் அந்த வகையான பாடல்களை யாரும் கேட்பதில்லை. மெலடி வகையான பாடல்கள் அரைமணி நேரமோ? ஒரு மணிநேரமோ தான் கேட்க்க முடியும். மற்ற நேரம் என்ன பாட்டு கேட்கிறார்கள் என்று நீங்கள் பார்த்து கொண்டு இருந்தீர்களா? நீங்கள் தூங்கி கொண்டு இருந்தால் உங்களுக்கு ராஜா சார் பாட்டு எப்படி கேட்கும். ஒவ்வொரு ஞாயறும் சூரியன் பண்பலையில் கிளாசிக் சண்டே என்கிற நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வருடமாக இசைஞானியின் பாடல்கள் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு வரை ஒளிப்பரப்புகிறார்கள். அந்த நாளில் மட்டும் மதுரை வந்து பாருங்கள் ஒவ்வொரு டீக்கடை, பலசரக்கு கடை, வீடுகள், வொர்க் ஷாப்களில், சலூன்களில் கேட்க முடியும்.

    //ஆதிக்க சாதி வன்மம் என்று விபரீத கோடுகள் வரைகிறீர்கள். வன்மையாக கண்டிக்கிறேன். இராவை எதிர்த்தால் வரும் சாதி அவரை பாராட்டிப் புகழும் போது மட்டும் காணாமல் போவது ஏன்? மேலும் வெறும் இசை மட்டுமே விவாதிக்கப்படும் இடத்தில் இது போன்று புல்லுருவி வேலைகள் செய்யவேண்டாம். இப்படிப் பேசித்தான் உங்கள் இராவை நீங்கள் பாதுகாக்க முடியும் என்று நீங்கள் எண்ணுவது போல தெரிகிறது. இதை அவரே விரும்பமாட்டார்.//

    நன்றாக படியுங்கள் நான் என் ஐயபாடையாக தான் கேட்டுள்ளேன். நீங்கள் திசை திருப்பி, அதனை உங்களுக்கு தகுந்தமாதிரி வார்த்தைகளை கொண்டு செல்ல வேண்டாம். நீங்கள் சொன்ன சரியில்லாத இசை காலத்தை தமிழ்நாடு மட்டும் அல்ல, உலகமே (தென்னிந்திய) பாராட்டி கேட்க செய்தன. உங்களுக்கு மட்டும் எப்படி புரிபடவில்லை. அவர் இசை கிராமத்து இசை, டப்பா இசை என்று விமர்சிக்கும் இன்றைய தலைமுறைக்கு இசை என்றால் என்னவென்று தெரியுமா? அவர்கள் சொல்வதை நிங்களும் ஆமோதிக்கிறீர்களா? எம்.எஸ்.வி. அய்யாவின் இசையை இதை விட அதிகமாகவே சொன்னால் நீங்கள் ஒத்துகொள்வீர்களோ? இன்றைய இளைஞர்கள் பழைய பாடல்களை ஒரே சோகமாக, அழுமூஞ்சி பாடல்களாக இருக்கிறது என்று தான் சொல்வார்கள். ஒத்துகொள்கிரீர்களா? இன்றைய இளைஞர்கள் சொல்லுவதை வைத்தெல்லாம் நாம் நல்ல இசையை தீர்மானிக்க முடியாது. அவர்களுக்கு இன்றைய இசையின் பார்வையில் அதை கணிக்கிறார்கள்.

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்கள் மேல் ஏதோ வன்மம் இருப்பது போன்று தான் இருக்கிறது.

    ReplyDelete
  15. சபாஸ் குமார்

    காரினுக்கு எது பிடிக்குதோ அது தான் இசை! மற்றெல்லாம் டப்பா பாட்டு.அது போல அவர் எழுதுவது தான் சரியான "விமர்சனம் ".
    தர்க்க ரீதியாக அவரிடம் விவாதிக்க முடியாது.பரிவாரங்களுடன் வந்துவிடுவார்.பழைய இசையமைப்பாளர்களின் முழு அதாரிட்டி அவர் தான் என்ற பாசாங்கும் செய்வார்.

    அடுத்த கணம் தமிழ் சினிமா இசையைக் கெடுத்து வெள்ளைக்காரன் இசையாக்கிய ரகுமானை பெரிய மேதாவி என்று புகழ்வார்.

    ReplyDelete
  16. ஆமாம் விமல் . சரியாகச் சொன்னீர்கள் . வெளிநாட்டுக் காரன் இசையை களவாடி காசாக்கிக் கொண்டிருக்கும் ரகுமானை இன்றைய இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். சமீபத்து ரகுமான் பாட்டுக்கள் கேட்டால் பாடுவது போலவே இருக்காது . நரம்பு புடைக்க கத்துவது போலிருக்கும் . வெளிநாட்டில் இது போன்ற கத்தல் இசை 70 மற்றும் 80 களிலேயே வந்து போய்விட்டது. நமது உண்மையான இசை எப்படிப்பட்டது என்பது தெரியாத இளைஞர்களை சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனிருத் என்ற சிறுவன் இசைப்பது என்னவிதமான கலவை என்றே தெரியவில்லை . மேல் தட்டு வர்க்கம் பிள்ளையாண்டானை வளர்க்கப் பார்க்கிறது. பார்ப்போம்...எத்தனை நாள் அவர்களின் இசை நிற்கிறது என்று!

    ReplyDelete
  17. காரிகன்

    இளையராஜாவின் பாடல்களை டங்காமாரி பாட்டுக்கு ஒப்பிடும் நீங்கள் சங்கராபரணம் பட பாடல்களையும் அபூர்வ ராகங்கள் படப் பாடல்களையும் அதே மாதிரி ஒப்பிட்டுப் பேசுவீர்களா ? அந்தப் படங்களின் பாடல்களும் காவியப் பாடல்கள்தானே! இளையராஜாவின் காவியப் பாடல்கள் எல்லாம் டங்காமாரி பாடல்களோடு ஒப்பிடப்படும்போது ஏன் இந்தப் பாடல்களையும் சேர்க்கக் கூடாது ? உங்கள் பார்வையிலிருந்து பேசுகிறேன்.

    ReplyDelete
  18. ரகுமான் இசையில் ஒரே வரியை பல தடவை பாடி பாடி பாட்டை நிலை நிறுத்தி விடுவார். அது தான் அவர் இப்போ கண்டு பிடித்துள்ள technic. அதையும் ஒரு கூட்டம் கேட்கிறது. தமிழ் வரிகளை பிரித்து பிரித்து பாடுவதும் ஒரு ஸ்டைல் ஆக ஆகிவிட்டது. சமீபத்திய உ.த. ஓகே காதல் கண்மணி ''மெண்டல் மனதில்'' பாடல். தமிழின் சிறப்பை சிதைத்து, இன்றைய இளைஞர்கள் பேசும் முறையை மாற்றி அமைத்த பெருமை எல்லாம் ரகுமான் பாடலை கேட்டு தான். ஒரு பாடலை கேட்கும் போது மனதுக்கு இனிமையும், கேட்பவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு உற்சாகம், நேர்மறையான கருத்துக்களை எளிய தமிழ் சொற்கள் அடங்கிய பாடல்கள், நம் பெருமைகளை பேசும் வரிகள் என இருந்த தமிழ் சினிமாவின் திரை இசை பாடல்களை எந்த விதமான மனபோக்கு இல்லாமல், எதிர் மறையான முதல் வரிகள், அன்னியோன்யமான வார்த்தைகள் இல்லாமல், காட்டு கத்தலுடன், பாடுவது ஆணா? பெண்ணா? என்று தெரியாமல், எந்த விதமான இனிமையும் அற்ற குரல்களை திரை உலகில் புகுத்திய, கெடுத்தது ரகுமான் வந்த பின் தான், அவருக்கு பின் ஹாரிஸ் ஜெயராஜ், கொஞ்சம் யுவன், கொஞ்சம் அனிருத் என தொடர்கின்றனர். தமிழ் இனி மெல்ல சாகும்ன்னு சொன்ன பாரதியார் வாயில் சர்க்கரை தான் போடவேண்டும்.

    ReplyDelete
  19. வாங்க குமார் சார்

    நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை . ரகுமான் பாடல்கள் வந்த பின்பே வார்த்தைகள் கேட்காத வண்ணம் இசை நாராசமாய் ஒலிக்கும் பாடல்கள் வந்தன . வைரமுத்துவே ஒரு மேடையில் இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அது போக நெடிலை குறிலாகவும் குறிலை நெடிலாகவும் சந்தத்திற்காக மாற்றும் முறையை அறிமுகப் படுத்திய பெருமை ரகுமானையேச் சாரும். அது தமிழ்க்கொலை . தமிழிசையைச் சீரழிக்க ஆரம்பித்தவரே ரகுமான்தான் ! அதன் பிறகே நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள் .

    ' ஆராமலே ' என்ற பாட்டை ஒருவன் பாட நாய் ஒன்று தெறித்து ஓடுவது போல் காட்சியை ' இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ' என்ற படத்தில் வைத்திருப்பார்கள். ஒரு சின்ன சாம்பிள் .

    ReplyDelete
  20. //காரிகன்...

    என் வார்த்தைகளையே உங்கள் பதிலாக பயன்படுத்தும் உங்கள் இயலாமையை ரசிக்கிறேன்.//

    இந்த ‘தெரமையை’ நானும் நிறைய ரசிக்கிறேன்.

    ReplyDelete
  21. என்ன பேராசிரியரே,

    ரொம்ப நாள் சத்தமே இல்லாம இருந்தது. இப்ப திடீர்னு என்ன சவுண்டு? அடுத்த ரவுண்டுக்கு தயார் போல தெரியுது.

    ReplyDelete
  22. தருமி சார்

    தங்கள் வருகைக்கு நன்றி. ரொம்ப நாளாக உங்களை காணவில்லையே என்று நினைத்தேன். வந்து விட்டீர்கள் . வந்தவுடன் காரிகனும் உங்களிடம் ‘தெரமையை’ காட்டியிருக்கிறார்.

    நீங்கள் பல விஷயங்கள் பகிர்வீர்கள் . நான் ராஜாவின் திரையிசையைப் பற்றி மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருப்பதால் உங்களுக்கு போரடித்து இந்தப் பக்கம் வாராமல் இருக்கிறீர்களோ என்றும் நினைத்தேன் . நானும் இனி எல்லா விசயங்களிலும் ‘தெரமையை’ காட்டப் போறேன்.

    ReplyDelete
  23. காரிகன்

    தருமி சாரோட 'கட்டப் பஞ்சாயத்து ' மீண்டும் வாசித்துப் பார்த்தேன் . உங்க ' தெரமையை’ பத்தி நிறைய பேரு புட்டு புட்டு வச்சிருந்ததை வாசித்து ஒரு மணி நேரம் பொழுது போச்சு .

    ReplyDelete
  24. சால்ஸ்,

    உங்கள் தளத்திற்கு வரும் விமல் என்ற குகை மனிதன், பிறகு வி எஸ் குமார் என்ற அரைவேக்காடு, இப்போது தருமி என்ற பேராசிரியர் எல்லாருமே உங்களைப் பாராட்டுவதற்காக வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு மிகப் பரிதாபமாக இருக்கிறது. அவர்களின் நோக்கம் உங்களைப் பற்றி நல்ல விதமாக சொல்வது எதுவுமல்ல. மாறாக காரிகனான என்னை வீணாக வம்பிழுப்பது. நான் ஒரு கருத்தை சொன்னதும்தான் அவர்கள் வெளியே தலை காட்டுவார்கள். அதுவரை உங்களைப் பற்றி கவலையே அவர்களுக்குக் கிடையாது. இதை இன்னும் புரிந்துகொள்ளாமல் வெகுளியாக நீங்கள் இருப்பது குறித்து எனக்கு வருத்தமே. இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

    இப்போது தருமி உங்களை என்ன பாராட்டிவிட்டார் என்று இப்படி ஆட்டம் போடுகிறீர்கள்? அவர் எழுத்தில் உங்களைப் பற்றிய ஒரு சொல் இருந்தால் குறிப்பிடவும். அவருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதுதான் முக்கியம். பஞ்சாயத்து என்ற கண்றாவியை என்னை வைத்து எழுதி அதற்கு நான் பதில் எழுதப் போய்தான் அவர் தளத்திற்கு நிறைய விளம்பரம் கிடைத்தது. நிறைய பேர் வந்தார்கள். என்னுடன் போட்ட சண்டைக்குப் பிறகு ஏதேதோ எழுதிப் பார்த்தார். அதன் பிறகு ஒரு பத்து பின்னூட்டம் கூட அவருக்கு இல்லை. எனவே இப்போது ஒரு விளம்பரதிற்க்காக மறுபடியும் என் பெயரை பயன்படுத்திக்கொள்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. தருமி என்ற ஒரு நபரையே நான் ஒரு ஆளாக மதிப்பதில்லை. நான் அதன் பிறகு அவரைப் பற்றி வேறு எங்கும் சொன்னதாக நினைவில்லை. மாறாக இவருக்கு என்னை மறக்க முடியவில்லை போலும்.

    காப்பி பேஸ்ட் பதிவுகள், பிறகு பெங்களூர் லால் பார்க் என்று ஒரு படம் போட்டு ஒரு பதிவு என்று சொதப்பினார். இப்போதோ வேறு எதற்கும் வழியில்லை என்னை மீண்டும் சீண்டுகிறார். என்னால் தான் உங்கள் தளம் சூடு பிடிக்கும் என்றால் இந்த முறை மன்னிக்கவும்.

    என் தரத்திர்க்கேற்ற முதிர்ச்சி இருந்தால் பேசலாம். என் பெயரை சொல்லாமல் உங்களால் ஒரு பின்னூட்டம் போட முடிந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். முயன்று பாருங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல என்னை குறி வைக்கும் எல்லா இரா விசுவாசிகளுக்கும்தான்.

    காரிகன் உங்களுக்கெல்லாம் ஒரு சிம்ம சொப்பனமாக இருப்பதாகத் தெரிகிறது. நானே இப்படி என்னைப் பற்றி எண்ணியதில்லை.

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் தளத்திற்கு வரும் விமல் என்ற குகை மனிதன், பிறகு வி எஸ் குமார் என்ற அரைவேக்காடு, இப்போது தருமி என்ற பேராசிரியர் எல்லாருமே உங்களைப் பாராட்டுவதற்காக வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு மிகப் பரிதாபமாக இருக்கிறது.//

      குகை மனிதன், அரைவேக்காடு. இதெல்லாம் நீங்கள் உங்கள் கருத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு வைக்கும் நல்தமிழ் பெயர்கள். உங்களிடம் இருந்து தான் அநாகரிகம் எவ்ளோ சிறந்து விளங்குகிறது என்பதை இதை படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்கள் பெயர் போட்டு எழுதுவதற்கு கூட நீங்கள் வாய்ப்பிழந்து நிற்கிறீகள் என்றே வருந்துகிறேன்.

      //அவர்களின் நோக்கம் உங்களைப் பற்றி நல்ல விதமாக சொல்வது எதுவுமல்ல. மாறாக காரிகனான என்னை வீணாக வம்பிழுப்பது. நான் ஒரு கருத்தை சொன்னதும்தான் அவர்கள் வெளியே தலை காட்டுவார்கள்.//
      ஆமாம். நாங்கள் பதிவு இடுவதற்கு முன்னே தான் நீங்கள் உங்கள் எதிர் வினையை கொட்டிவிடுகிறீர்கள், உங்களுக்கு பதில் சொல்வதற்கு தான் நேரம் இருக்கும். உங்கள் ஆகாத போகாத தடித்த வார்த்தைகளை கேட்டு கொண்டு, உங்களுடன் மல்லுகட்டவே சரியாக இருக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து வலைப்பூவும் உங்களால்தான் புகழ் அடைந்து, அனைத்து மக்களிடம் போய் சேர்கிறது. உங்களை வம்புக்கு இழுத்து எங்களுக்கு என்ன லாபம். மனசுக்குள் நீங்க பெரிய பீட்டர் பாருங்க.

      //இப்போது தருமி உங்களை என்ன பாராட்டிவிட்டார் என்று இப்படி ஆட்டம் போடுகிறீர்கள்? //

      உங்களை பாராட்ட ஒரு குழு இருந்தால் இவரை பாராட்ட குழு இருக்காதா? உங்கள் மனதில் பொறாமைத்தீ எரிய ஆரம்பித்தது உங்கள் வாக்கியத்திலே தெரிகிறது (இப்படி ஆட்டம் போடுகிறீர்கள்?).

      //என் தரத்திர்க்கேற்ற முதிர்ச்சி இருந்தால் பேசலாம். என் பெயரை சொல்லாமல் உங்களால் ஒரு பின்னூட்டம் போட முடிந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். முயன்று பாருங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல என்னை குறி வைக்கும் எல்லா இரா விசுவாசிகளுக்கும்தான்.//
      நீங்களாக உங்கள் முதிர்ச்சி பற்றி பேசக்கூடாது. உங்கள் முதிர்ச்சி பற்றிதானே முதல் பத்தியில் தெரிகிறதே. அதை நினைத்து நாங்கள் தான் வருந்தவேண்டும்.

      //காரிகன் உங்களுக்கெல்லாம் ஒரு சிம்ம சொப்பனமாக இருப்பதாகத் தெரிகிறது. நானே இப்படி என்னைப் பற்றி எண்ணியதில்லை.//
      ஆஹா. என்னவொரு தன்னடக்கம் உங்களிடமிருந்து. சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு, நானே இப்படி என்னைப்பற்றி எண்ணியதில்லை. உண்மையில் படித்ததும் சிரிப்பு தான் வருது. வடிவேல் ஒரு படத்துல சொன்ன மாதிரி நாம கொஞ்சம் ஓவராத்தான் போறமோ? என்று எண்ண வைக்கிறது. கொஞ்சம் ஓரமாக போய் விளையாடவும்.

      //என் பெயரை வைத்துத்தான் உங்கள் கடை ஓடும் என்றால் .... தாராளமாக செய்து கொள்ளுங்கள். என் அனுமதி உண்டு.//

      சொல்லப்போனால் நீங்கள் தான் தேவையில்லாமல் உங்கள் பெயரை எல்லா இடத்திலும் பரப்ப இப்படியெல்லாம் திட்டம் போட்டு வருகிறீர்கள். உங்களை யாரும் இங்கே கூப்பிடவும் இல்லை. இன்னிக்கு நாட்டுல இருக்கிற எல்லா கடையிலும் உங்கள் போட்டோ தான் இருக்கு கடை ஓடுவதற்கு? அடுத்தவர்களுக்கு புத்தி சொல்வதற்கு முன் நம் முதுகை பார்க்கணும் சார்.


      Delete
  25. என் பெயரை வைத்துத்தான் உங்கள் கடை ஓடும் என்றால் .... தாராளமாக செய்து கொள்ளுங்கள். என் அனுமதி உண்டு.

    ReplyDelete
  26. தருமிக்கு,

    உங்களுக்கு ஒரே ஒரு வாக்கியம்தான் என்னிடமிருந்து.

    ஒரு பேராசியர் போல நடந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. காரிகன் சார்

    குதித்து முடித்து விட்டீர்களா? உங்கள் பின்னூட்டம் வாசிக்கும்போதே எனக்கு ' ஜம்பிங் ஜாவித்' தான் நினைவுக்கு வருகிறார் . யாரும் உங்களை எதுவும் சொல்லவில்லை . பேராசிரியரும் உங்களை ஒன்றும் சொல்லவில்லை. பின்னே எதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் ? உங்களை வைத்துதான் எங்களுக்கு வண்டி ஓடுகிறது என்று காமெடி பண்ணாதீர்கள் .

    ///காரிகன் உங்களுக்கெல்லாம் ஒரு சிம்ம சொப்பனமாக இருப்பதாகத் தெரிகிறது. நானே இப்படி என்னைப் பற்றி எண்ணியதில்லை.///

    இதை வாசிக்கும்போது வின்னர் படத்தின் வடிவேலு ஏன் ஞாபகத்திற்கு வரவேண்டும்!?

    ராஜா ரசிகர்களை தரக்குறைவாக பேசி மேற்கொண்டு நீங்கள்தான் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறீர்கள் . ஏற்கனவே உங்களுக்கு பல பெயர் வைத்துள்ளார்கள் . இன்னும் புதிய பட்டம் வேண்டுமா?

    ReplyDelete
  28. மிகுந்த மரியாதைக்குரிய பெருந்தகை காரிகன் அவர்கள் சமூகத்திற்கு,

    எத்தனை பெருமிதமான வார்த்தைகள் உங்களிடமிருந்து …..இப்பதிவில் நீங்கள் சொன்ன இரு சொற்றொடர்கள் மிகவும் பிடித்தன அவை இவை தான் . //தருமி என்ற ஒரு நபரையே நான் ஒரு ஆளாக மதிப்பதில்லை // …yep… very natural. சிலருக்கு சிலது பிடிக்காதாம். ஆச்சரியமில்லை.
    //உங்களுக்கு ஒரே ஒரு வாக்கியம்தான் என்னிடமிருந்து ஒரு பேராசிரியர் போல நடந்து கொள்ளுங்கள்.//
    இரண்டாவது நிறைய பிடித்து விட்டது; அப்படி நடந்து கொள்ள முயற்சிக்கிறேன். முடியவில்லையே ஐயா … அதை நீங்களே சொல்லித் தந்தால் தன்யனாவேன்.
    //உங்கள் தளத்திற்கு வரும் விமல் என்ற குகை மனிதன், பிறகு வி எஸ் குமார் என்ற அரைவேக்காடு, இப்போது தருமி என்ற பேராசிரியர்…// எத்தனை பேருக்குத்தான் எவ்வளவு சொல்லித் தருகிறீர்கள். நிறுத்தி விடாதீர்கள். உங்கள் சேவை என் போன்றவர்களுக்கு எப்போதும் தேவையல்லவா? உங்கள் பொறுமையும், பணிவும் …. அடடா .. கற்றுக் கொள்ள எவ்வளவு அடக்கி வைத்திருக்கிறீர்கள்!
    ’வீங்கிய மண்டை’ என்ற ஒரு பதம் வந்துவிடக்கூடாதே என்று எவ்வளவு அடக்கமாகி விட்டீர்கள்! உங்கள் அடக்கம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது, ஐயா!
    உங்களைப் பற்றி ஏதும் எழுதக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் …. நீங்களின்றி என் பதிவுகளுக்கு யாரும் வருவதில்லை; உங்களால் தான் பதிவுலகத்தில் என்னை எல்லோரும் தெரிந்து கொள்ளும் நிலையைக் கொடுத்திருக்கிறீர்கள்; பின்னூட்டம் என் பதிவுகளுக்கு வருவதே உங்களை வைத்து தான்.அதனால் தான் ஒரு பதிவில் எனக்குக் கொஞ்சம் பின்னூட்டம் கிடைத்தது; உங்கள் நிமித்தம் தான் நான் இன்னும் பல பதிவுகளை இட முடியும். பின்னூட்டங்கள் பெற முடியும். மிக்க நன்றி.
    ஒரு விளம்பரத்திற்காகத்தான் இப்பதிவில் ‘சிம்ம சொப்பனமான’ உங்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதினேன். அப்போது தானே என் மீதும் கொஞ்சம் வெளிச்சம் விழும் என்ற நப்பாசை. தவறில்லையே, ஐயா?

    ReplyDelete
  29. பேராசிரியரே,

    நீங்கள் நக்கல் என்று நினைத்துக்கொண்டு என்னதான் நகைச்சுவையாக எழுத முயன்றாலும் நான் சொல்வதின் உண்மையை மறுக்க முடியாத துர்பாக்கிய நிலையில் நீங்கள் இருப்பது உங்களுக்கே நன்றாக தெரியும். உங்கள் பெயரைச் சொல்லி நான் எந்த சிறிய பதிவும் போடவேண்டிய அவசியம் என்னகில்லை.. உங்களால் அது முடியாமல்தானே என்னையும் அமுதவனையும் வைத்து ஒரு பஞ்சாயத்தே நடத்தி "புகழ்" அடைந்தீர்கள்.

    என் மண்டை எத்தனை வீக்கம் என்பதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத வேலை. பிறகு நான் கூடஉங்களைப் பற்றி இன்னும் சில விமர்சனங்கள் வைக்க வேண்டி வரும். உங்கள் "தரத்திற்கு" அது அவ்வளவு நன்றாக இருக்காது. நான் முன்பே கூறியதுபோன்று உங்கள் தகுதிக்கேற்றார்போல எழுதுங்கள். வீண் வம்படி சண்டையெல்லாம் வேண்டாம். இது இரண்டாவது முறையாக நான் சொல்வது.

    ReplyDelete
  30. எல்லாம் அவர் தான்.அவரின்றி இன்றைய இணைய உலகே இல்லை.போகிற இடமெல்லாம் அவரின் மூக்கு உடைபடுகிறது.விழுந்தாலும் மீசையிலே மண் படாதாம் காரிகனுக்கு..!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். தனிமனித தாக்குதலை ஆரம்பித்தவர் அதனை அறுவடை செய்து தான் ஆகவேண்டும்.

      Delete
  31. காரிகன் அன்றி ஓர் அணுவும் அசையாது. அப்படி ஒரு நினைப்பை சுமந்து கொண்டிருக்கிறார். அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே தருமி சார் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் ஓவரா சொல்லிட்டேன். அவர் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு முன்பிருந்தே பதிவு எழுதி வருகிறார். காரிகனால்தான் அவர் ப்ளாக் பிரபலம் ஆனது என்று காரிகனே தண்டோரா போடுகிறார். இதை மண்டை அகராதியின் உச்சம் என்று சொல்லலாம் . பின்னூட்டங்கள் வந்தால்தான் பிரபலமாம் ! குழந்தைத் தனமான எண்ணம்.

    ReplyDelete
  32. சார்ல்ஸ்
    அவரது தளத்தில் அவரே வெவ்வேறு புனை பெயர்களில் தன்னை புகழ்ந்து எழுதுவார்.பாவம் அவர்.

    ReplyDelete
  33. http://songsofage.blogspot.in/2014/11/41-24.html?showComment=1427511466809#c7463081700145732336

    ReplyDelete
  34. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  35. மிகுந்த மரியாதைக்குரிய பெருந்தகை காரிகனாரே
    ஏனிப்படி தவறாகவே எடுத்துக் கொள்கிறீர்கள். நான் நகைச்சுவையாக எழுத முயன்றேனா … எம்புட்டு சீரியசாக, உங்கள் தயவை வேண்டி எழுதுகிறேன். புரிந்து கொள்ள மறுக்கிறீர்களே, ஐயா.
    // என்னையும் அமுதவனையும் வைத்து ஒரு பஞ்சாயத்தே நடத்தி…// அந்தப் பதிவின் மீது எனக்கு எம்புட்டு பாசம் தெரியுமா? அப்பதிவின் பின்பு தானே உங்களைப் பரிபூரணமாகத் தரிசிக்க முடிந்தது.
    // உங்கள் "தரத்திற்கு" அது அவ்வளவு நன்றாக இருக்காது.// அட விடுங்கய்யா என்னுடைய தரம். அது கிடக்கட்டும் ஒரு மூலையில். ஆனால் இப்படி எழுதும் போது தானே தங்களின் உயர்ந்த தரம் வெளிவருகிறது. எவ்வளவு அனுபவிக்கிறேன் அதை.?
    // நான் கூடஉங்களைப் பற்றி இன்னும் சில விமர்சனங்கள் வைக்க வேண்டி வரும்//// இது இரண்டாவது முறையாக நான் சொல்வது//
    நிறைய சொல்லி விட்டீர்கள்; இருந்தும் திருந்தவே முடியலைங்க. அதற்குத் தான் உங்கள் தரம் மிகுந்த அறிவுரைகளைக் கேட்டேன்.

    ReplyDelete
  36. Charles
    sorry for using your space like 'this'.

    ReplyDelete
    Replies
    1. எதற்கு சார் sorry எல்லாம்...சில நேரங்களில் சில மனிதர்களை நாம் சந்திக்கத்தான் வேண்டும் .

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  37. http://cinema.dinamalar.com/tamil-news/23138/cinema/Kollywood/Dont-buy-my-audio-CD-says-Ilayaraja.htm

    ReplyDelete
    Replies
    1. அற்ப மனிதர்களுக்கு இதெல்லாம் பார்வையில் படாது.

      Delete
    2. இப்ப என்ன ஆகிப் போச்சு ?

      Delete
  38. சால்ஸ். இணையம் எல்லோரும் படிக்கக்கூடி. பகுதி.அப்படியிருக்க தன்னை வெளிப்படுத்த தைரியமில்லாத சிலர் அனானிமஸ் என்ற பெயரில் அநாகரீகமாக பின்னூட்டம் இடுவதை தங்கள் தளத்தில் தவிர்ப்பதோடு தாங்கள் இவைகளை அனுமதிக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன் .

    ReplyDelete
  39. அருள் ஜீவா

    காரிகனின் குகை மனிதன் ஒருவன் அசிங்கம் பண்ணிவிட்டு போயிருந்தான். சுத்தப்படுத்தியாச்சு. அவன் இன்னொரு இடத்தில் அசிங்கப்படுவான் . இவர்களுக்காக நாம் கவலை கொள்ள கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா! அப்படி என்ன தப்பா எழுதிட்டேன் .
      இன்னொரு இடத்தில் ஏன் அசிங்கப்பட? நீரே அசிங்கப்படுத்தி விடலாமே? அதற்கு உமக்குத்தகுதி இருக்கிறது...
      சரி விடும் உம்ம சார்பா செருப்பில் அடி வாங்கியதாக நானே நினைத்திக்கொள்கிறேன். சகாக்ககளுக்குச் சந்தோசமா இருக்காட்டும். நன்றி!

      Delete
    2. எதிர்த் தாக்குதல் கருத்துகள் இருக்கலாம் . அது நாகரீக வார்த்தைகளோடு இருந்தால் நலம் . எல்லாவற்றையும் நான் வரவேற்பேன் . நீங்கள் என்னையும் தருமி அவர்களையும் நல்ல வார்த்தைகள் கொண்டு விமர்சிக்கவில்லை . அதனால் உங்கள் பின்னூட்டத்தை அழித்தேன். இப்போது நல்ல வார்த்தைகளோடு வந்துள்ளீர்கள் ; ஆனால் நொந்துள்ளீர்கள். ஒருமையில் உங்களை பேசியதற்காக வருந்துகிறேன் .

      Delete
  40. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள் இப்படி தான் ஒளிந்து கொள்வார்கள்.ஒருவர் தலைதெறிக்க ஓடி விட்டார்.இன்னொருவர்?

    Charles,
    Anonymous கருத்துக்களை தவிர்ப்பது நல்லதே .

    ReplyDelete
    Replies
    1. விமல் என்பது உம்முடைய நிஜப் பெயரா?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  41. விமல்
    நல்ல வார்த்தைகளோடு நாகரீகமாய் வந்தால் ஏற்றுக் கொள்வோம் .

    ReplyDelete
  42. உண்மையோ புனைவோ விமல் என்றால் இப்பதிவைப் பொருத்தவரை ஒருவர் தான். ஆனால் பெயரில்லாமல் வருவது .....?

    என் பதிவுகளில் பெயரில்லாமல் வரும் பின்னூட்டங்களை அனுமதிப்பதைல்லை - நல்ல பின்னூட்டங்களாக இருந்தாலும்!

    ReplyDelete
  43. http://prabahar1964.blogspot.in/2015/04/60.html

    ReplyDelete
  44. தருமி சார்

    பிரபாகர் அவர்களின் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி . 60 களின் இசை பற்றிய கட்டுரை அற்புதமாக கொடுத்திருக்கிறார். படித்தேன்; மகிழ்ந்தேன் . நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் . நன்றி.

    ReplyDelete
  45. காரிகன் ஒரு சைக்கோ போல் தெரிகிறார்...msvயே தன் கடைசிகாலத்தில் ராஜாவினால் வாழ்ந்த்தை சொல்லியுள்ளார்...ராஜாவும் தன் இசை அண்ணா போட்ட பிச்சை என்றார்...இருவரும் இசையால் உயரத்தை தொட்டவர்கள...ராஜாவை பற்றி Budapest,RPO (John Scott) கலைஞர்பளின் பதிவை கேட்க...ராஜா the great

    ReplyDelete
  46. வாங்க சிவகுமார்

    எம்.எஸ்.வி ஒரு இசை மேதை நாமும் இளையராஜாவும் மறுக்கவேயில்லை . காரிகன் போன்ற சில குறை மனிதர்கள் ராஜாவைப் பழித்துப் பேசுவதில் இன்பம் காணுகிறார்கள். புகழ் பெற்ற மனிதர்கள் எல்லோருமே இந்த மாதிரி அரை குறை மனிதர்களால் அசிங்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது நாம் கண்ணார கண்ட உண்மை . இங்கு ராஜாவை இகழ்வதில் காரிகன் போன்ற சிலர் முயற்சிக்கிறார்கள் . காலப் போக்கில் அவர்கள் பேசியது மடமை என்பதை உணர்வார்கள். கறை நல்லது. காலம் சலவை செய்யும்.

    ReplyDelete
  47. பழைய நினைவு. மேலே வந்த பின்னூட்டம் என் டப்பிக்குள் வந்தது. அப்ப்டியே இங்கு இழுத்துவிட்டு வந்து விட்டது.ம்ம்...ம்..

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்