Thursday 13 November 2014

இசை ராட்சஷன் - 4



                                         இசை ராட்சஷன் - 4

                              ( The Musical Legend )

               பதினாறு வயதினிலே படப்  பாடல்களின் தாக்கம் பல நாட்கள் நீடித்தது .  பிறகு 'அவர் எனக்கே சொந்தம்'  என்ற படத்தில் வந்த 'தேவன் திருச்சபை மலர்களே' பாடல் சிலோன் வானொலியில் அடிக்கடி போடப்பட்டதைக் கேட்டுவிட்டு மிகவும் ரசித்திருக்கிறேன் . இதயத்தை இறகால்  வருடும் கானம்.  இப்போது இசைக்கப்பட்டாலும் பால்ய காலத்தில் சர்ச் பாடகற்குழுவில் நான் சேர்ந்து பாடியது ஞாபகத்தில் வரும் . கன்னியர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் படித்தபோது எனது 'பாட்டு பாடும்' திறமைக்காக  ஒரு சிஸ்டர்  என்னை பாடகற்குழுவில் சேர்த்துவிட்டார்கள். எட்டு வயதில் அந்தக் குழுவில் நான் கானக்குயிலாக வலம்  வந்தேன் . குரல் பெண் குரலாக இருக்கும் . பதினைந்து வயதுவரை குரல் உடையவேயில்லை.


                    சர்ச்சில் சொல்லித்தரப்படும் எல்லா பாடல்களையும் எளிதாக மனப்பாடம் செய்து பாடிவிடுவேன் . பெண்கள் பாடும்போதுதான் பாடவேண்டும் என்பது கட்டளை . இல்லாவிடில் 'குட்டு' விழும். கிறித்தவப் பாடல்களுக்கென்று தனித்த இசை ஒன்று இருந்ததை அப்போது உணர்ந்தேன் . மேல்நாட்டு இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும்  நிறைய இருந்தன .அவையெல்லாம் மனதை கொள்ளை கொள்ளும் இசையாக அமைந்தன. ஆனால் இப்போது வரும் கிறித்தவப் பாடல்களில் சினிமாவின் இசை ஏறிக்கொண்டதை பார்க்க முடிகிறது. ரசிக்க முடிவதில்லை . பக்திப் பாடல்களும் நிறம் மாறும் யதார்த்தம் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது .


                                                               

               

                          தேவன் திருச்சபை மலர்களே என்ற பாடல் ஒரு கிறித்துவப் பாடல் போலவே ஒலிக்கும் . சினிமாவிற்கான இசை அதில் மாறாது . கிடார் ஒலியின்  கார்ட்ஸ் ஆரம்பித்து பல இசைக்கருவிகளும் சேர்ந்து பல்லவி ஆரம்பிக்கும் அழகு பிரமாதம் . பாடகற்குழுவில் இருந்ததாலோ என்னவோ கேட்ட மாத்திரத்தில் மனதை ஆக்ரமித்தது . புதிது புதிதான இசைக் கருவிகளின் சங்கமம் ஆச்சரியப்பட வைக்கும். இப்போது பல கருவிகள் வந்துவிட்ட போதிலும் அந்த நேரத்தில் இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகளின் இசையொலி , நயம், ஓசை  எல்லாமே வினோதமானவை.  ஆரம்பத்தில் இளையராஜா ஒரு கிறித்தவராக வளர்ந்தபோது  சர்ச்சுகளில்  இசை கேட்ட பாதிப்போ என்னவோ இந்தப் பாடல் மட்டுமல்ல . அவர் இசைத்த கிறித்தவப் பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையாகவும் சுகமாகவும் இருக்கும் . 'மாதா  உன் கோயிலில்',   'தேவனின் கோயிலிலே ' ,  'கடவுள் உள்ளமே கருணை இல்லமே ' , ' ஸ்தோத்திரம் பாடியே ' , போன்ற பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் . அத்தனையும்  சூப்பர் ஹிட் !  




               



                                           'தேவன் திருச்சபை மலர்களே ' போன்ற பாடல்களை அப்போது மனப்பாடமாய் பாடுவேன் . இப்போதுள்ள புதுப்பாடல்களில் ஒரு பாட்டு கூட  மனப்பாடம் ஆவதில்லை . பிள்ளைகள் கேலியாக 'எங்கே இரு வரிகள் தவறில்லாமல் பாடிக் காட்டுங்கள் '  என்று எனக்கு சவால் விடுகிறார்கள் . நான் கவனித்துக் கேட்டாலும் கவனம் அதில் போவதில்லை.  மனப்பாட சக்தி போய்விட்டதா?  மனசுக்குள் போகாமலே போய்விட்டதா?  ' பாட்டு என்றால் '  இதயம் நுழைந்து உணர்வில் கலந்து உயிரைத் தொடுவதாக இருக்கவேண்டும் '   என்று தத்துவமாகச் சொன்னால்  ' பாட்டு கேட்கிற மாதிரி இருக்கணும் ...ஏன் இவ்வளவு யோசிக்கறீங்க ' என்கிறார்கள் பிள்ளைகள். நமக்குப் புரிவது அவர்களுக்குப் புரிவதில்லை . நாம் ரசிப்பது அவர்கள் ரசிப்பதில்லை. நாம் ஏற்றுக்கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை . தலைமுறை இடைவெளி இதுதானோ ?  ' அப்பாவிற்கு என்ன பெரிதாகத் தெரியும்' என்று நான் என் தந்தையைப் பற்றிக்  கொண்டிருந்த  கணிப்பை பிள்ளைகள் எனக்கும் கணிக்கிறார்கள். உலகம் உருண்டை.  கிளம்பியவன் கிளம்பிய  இடத்திற்கே வந்து சேரவேண்டும் .


                                      முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீபம் திரைப்படத்திற்கு இசையமைத்தார்  இளையராஜா. அதுவரை எம்.எஸ்.வி. அவர்களே அதிகமாய் சிவாஜி படத்திற்கு இசையமைத்து வந்தார் . அதனால் அந்தப் படத்தின் பாடல்கள் எம்.எஸ்.வி இசையின் சாயல் கொண்ட பாடல்களாகவே  அமைந்தன.  திரைப்படக் கர்த்தாக்களின் நிர்ப்பந்தமோ என்னவோ சிவாஜிக்கென்று தனது பாணியை மாற்றிக் கொள்ளாமல் முன்னோர் வகுத்த பாணியிலேயே இளையராஜா இசையமைத்திருந்தார் . ஆரம்பத்தில் ஒரு சூழல் கொடுக்கப்பட்டால் பல டியூன்கள்  போடப்பட்டு இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டதாக இளையராஜாவே  சொல்லியிருக்கிறார். எனவே தீபம் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம் இயக்குனரா இசையமைப்பாளரா என்ற பட்டிமன்றம் நடத்தினால் வாதங்கள் முடிவுறாது. ஆரம்பத்தில் சுய வளர்ச்சிக்காகவும் வணிகரீதியாகவும் இளையராஜா வளைந்து கொடுத்துதான் போயிருக்க முடியும் .

       
                            ' அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்ற பாடலில் எம்.எஸ்.வி.தான் அதிகம் தெரிவார்.  'ராஜா யுவர் ராஜா ' , 'பேசாதே வாயுள்ள ஊமை நீ '  என்ற மற்ற இரு பாடல்களிலும் கூட இளையராஜாவின் முன்னோர்களே  தெரிவார்கள். பின்னணி இசையிலும் இளையராஜாவின் முத்திரை குறைவாக இருக்கும் . ' பூவிழி வாசலில் யாரடி வந்தது ' என்ற பாடலில் மட்டும் இளையராஜா முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் ,ஜானகி டூயட்டில் பாடல் கேட்க  சுகமானது .  நானும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்பேன்.


                              கவிக்குயில்  படத்தின் பாடல்கள் மனதைத் தாலாட்டின . 'குயிலே கவிக் குயிலே' என்று ஜானகி அவர்கள் தன்  குயில் குரலில் பாடுவதை  கண்ணை மூடிக் கொண்டு கேட்டால்  விடிந்தும் விடியாத காலையும் கதிரவன் மெதுவாய் எட்டிப் பார்க்கும் வேளையும் தோப்புக்குள் இரு குயில்கள் கேள்வி பதிலாய் மாறி மாறி கூவிக் கொள்ளும் இனிய பொழுதும் கற்பனைக்கு வரும் . சில பாட்டுக்கள் கேட்கும்போது நாம் சந்தித்த சில இடங்களையும் சில மனிதர்களையும் ,சில சூழல்களையும் நம் எண்ணச் சிறைக்குள்ளிருந்து இதயத்தின் அறைக்குக் கொண்டு வருகிறோமே அந்த விஞ்ஞானத்தை விளக்க யாரால் முடியும் ? குயில் சப்தத்திற்கு இணையான குழலின் நாதத்தை பாடல் முழுவதும் இழையோடவிட்டு இசைக்கப்பட்ட பாட்டு !  குயில் என்ற வார்த்தை பாடலில் இருந்தாலே புல்லாங்குழல் இசைப்பது எல்லா இசையமைப்பாளருக்கும் மரபே! இளையராஜா அதை கனக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார் .


                             ' சின்னக்கண்ணன் அழைக்கிறான் ' ....ஆகா என்ன ஒரு ஆனந்தமயமான பாடல் ! இசைப்பண்டிதர்  பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தேமதுரக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலைக் கேட்டால் மனசு எங்கோ பறக்கும் . பெண் குரலிலும் அதே பாடல் பாடப்பட்டிருந்தாலும் பாலமுரளி அவர்களின்  குரலில் அந்தப் பாடலுக்கு தனி மகத்துவம் இருக்கும். இரு ஆண்டுகளுக்கு முன்பு   'என்றென்றும் ராஜா ' என்ற தலைப்பில்  இளையராஜாவின் இசைக்கச்சேரி ஆர்ப்பாட்டமாக நடந்தது . ஜெயா  டிவியில் ஒளிபரப்பப்பட்டது .


                நாதகலாஜோதி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்க இளையராஜா அன்னாரைப் பார்த்து , 'அண்ணா ...மேடைக்கு வர்றேளா ' என்று பவ்வியமாக அழைத்தார் . நிகழ்ச்சி வழிநடத்தும் பிரகாஷ்ராஜ் பெரியவரை அழைத்து வந்தார் .  ' உங்களுக்காகவே இந்தப் பாடலை அண்ணா பாடணும்னு சொல்லி நான்  கேட்டப்போ ...' என்று கூடியிருந்த மக்களைப் பார்த்துப்  பேசிய இளையராஜா சற்று நிறுத்தியவுடன் மக்களின் ஆரவாரம்.  '.....நான் கேட்டப்போ ...என்ன பாடல் பாடப் போகிறார் என்று உங்களுக்கு நல்லா தெரியும் . நான் சொல்ல வேண்டியதில்லை . அவரை நான் அழைத்தேன் . ஏனா நான் இளையராஜா சின்ன கண்ணன் ...' என்று தொடர்ந்து பேசி அவருக்கு முன்னால் தனது  சங்கீத ஞானம் குறைவு என்பதை பணிந்து ஏற்றுக்கொண்டார் .


                      தொடர்ந்து ' பாலமுரளி கிருஷ்ணா என்றாலும் சின்னக் கண்ணன் என்றுதான் அர்த்தம் ' என்று இளையராஜா முடிக்க பாலமுரளி அவர்கள் ' புதுமை, இனிமை, இளமைக்கு ராஜா ..இளையராஜா ...ராஜா பாட வரச் சொன்னப்போ எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது . பெரியவா பாடுற மேடையில எப்படி நான் பாடுறதுனு ...  சரி ஏதோ சின்னக் கண்ணன்தானே பாடலாம் '  என்று அவர் பதிலுக்கு சொல்லும்போதே பாட்டிற்கான இசை ஆரம்பித்தது . அற்புதமாக பாடல் சென்றது . அவரும்  அற்புதமாக பாடினார் . பின்னணி இசை துளியும் மாறவில்லை .  பொதுவாக இசை மேடைகளில் துல்லியம் காட்டுவது அரிதான ஒன்று. இளையராஜா perfectionist என்பதை அங்கும் நிரூபித்தார். இசைக் கருவிகள் அச்சுப் பிசகாமல் வாசிக்கப்பட்டன .
                                                   

                                                 



                                       
                     

                               இளையராஜா யாரையும் மதிப்பதில்லை . தலைக்கணம் பிடித்தவர். கர்வம் கொண்டவர் என்று சிலருடைய தவறான எண்ணங்களுக்குச் சாட்டையடி கொடுக்கக்கூடியதாயிருந்தது அந்த சந்திப்பு.  இளையராஜா எப்போதும் தன்னுடைய இசை முன்னோர்களை பெருமிதமாகவும் மரியாதையாகவும் வியந்துமே பேசுவார் .  சமீபத்தில் எம்.எஸ்.வி பற்றிச் சொல்ல வரும்போது , 'அவர் துப்பிய எச்சில் எங்களுக்கு சாப்பாடு  ' என்று அவர் இசை கேட்டு வளர்ந்து, அவர் பாதையில் இசைக்க ஆரம்பித்து , அவரிசையை  அகத்தூண்டலாகக்  கொண்டு தனித்துவம் அடைந்ததை பூடகமாகச் சொன்னவர் இளையராஜா . தன் முன்னோர்களை மதிக்கத் தெரிந்தவர் .


                            இளையராஜா என்ற இசைக் கலைஞனின் பாதிப்பு தாக்கம் எந்த அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையில்  புகுந்திருக்கிறது  , அவருடைய இசை எப்படி காற்றோடு காற்றாக கலந்திருக்கிறது , வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் சந்திக்கும் சம்பவங்களோடு எப்படிப் பின்னியிருக்கிறது என்பதை கீழே உள்ள கானொளியில் காணுங்கள்.




                             


               எப்போதோ  எங்கோ யாருக்கோ கொடுத்த பேட்டியில் தான் செய்த சாதனையை சுட்டிக் காட்டி  'என்னைப் போல் முடியுமா? ' என்று அவர் சவாலுக்கு விடுத்ததை  'தலைக்கணம் ' என்றால் இருந்துவிட்டு போகட்டுமே !
தவறென்ன இருக்கிறது? பதிலுக்கு யாரும் 'முடியும்' என்று சொல்ல முடியவில்லை. இல்லாதவரே  இருப்பது போல் ஆடுகிறார்.  இருப்பவர் இருப்பதைச் சுட்டிக் காட்டக் கூடாதா ? இளையராஜாவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போனவர்கள் சொன்ன கர்வம், திமிர் , செருக்கு என்பதெல்லாம் எல்லா மனிதருக்குள்ளும் உண்டு.  சாதித்தவருக்கு அது கலைச்செருக்கு.  திறமையுள்ளோருக்கு  அழகு  அவர்களின்  ஞானச்செருக்கு !


                      இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே பயணிக்கும் சிந்தனையில் மீண்டும் 77 க்கு வந்தால் காயத்ரி என்றொரு திரைப்படம் .
 சுஜாதாவின் குரலில் ஒரு பாடல் . ' காலைப் பனியில்  ஆடும் மலர்கள் ' கேட்க இனிமையான பாடல் . பால்ய காலத்தில் நான் கூர்ந்து நோக்காத பாடல்களின் வரிசையில் இதைச் சேர்க்கலாம் . நான் கவனித்திருக்காவிட்டாலும் சிலோன்வானொலி நல்ல பாடல் எதையும் ஒதுக்குவதேயில்லை.  இளையராஜாவின் கானங்கள் காற்றில் கலந்து கொண்டுதான் இருந்தன. 

               
                                         



                       அதே வருடத்தில் மற்ற படங்களில் வந்த பாடல்கள் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை . அந்தப் படங்களின் பாடல்களை இணையத்தின் உதவியுடன் கேட்டுப் பார்த்தபோது இளையராஜாவின் கைவண்ணம் தெரிந்தாலும் மனம் கவராத சில பாடல்கள் இருந்தன. அவற்றை மக்கள் ஏற்காததால்  ' அத்திப்பூ'  வரிசையில் இடம் பெற்றன. சிலோன் ரேடியோவில்    ' அத்திப்பூ'   என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  சிறிதும் பிரபலம் அடையாத பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் . அதிலும் சில பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் ஏன் அந்தக்  கதிக்கு ஆளாயின என்பது புதிர் !   


.............................தொடர்வேன் ......................................






179 comments:

  1. சால்ஸ்,

    எதைச் சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. இசை ராட்சஷன் பற்றி எழுதுவதை விட்டு விட்டு எங்கெங்கோ செல்கிறது உங்கள் எழுத்து. உங்களின் முந்தைய பதிவுகளில் இருந்த எதோ ஒன்று குறைந்தது போலிருக்கிறது.
    ஒரே உருப்படியான விஷயம் சர்ச் இசைக் குழுக்களை குறிக்கும் அந்த கார்ட்டூன் படம் தான். அமர்களமாக இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று படங்களை போட்டிருக்கலாம். அதாவது கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.

    புதிதாக காணொளி இணைப்பெல்லாம் வேறு.. நல்ல முன்னேற்றம்தான்.. எல்லாமே பாலைவனத்தில் பெய்யும் மழை போல இருக்கிறதே. என்ன செய்ய? நீங்கள் கூறியபடி தீபம் படப் பாடல்கள் வெற்றிபெறவில்லை என்பது உண்மையல்ல. தீபம் படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பின்னரே அவருக்கு வணிக ரீதியாக ஏறுமுகம் உண்டானது. கீழே உள்ளது நான் நண்பர் ஆல்பி தளத்தில் தீபம் பாடல் குறித்து சொன்ன கருத்து.

    ---இளையராஜாவுக்கு சீனியர்களான சங்கர் கணேஷ் எம் ஜி ஆரின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்த பிறகும் கூட சிவாஜி படத்திற்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் இசை அமைக்க வந்த அடுத்த ஆண்டே (77) இளையராஜாவுக்கு சிவாஜியின் தீபம் பட வாய்ப்பு கிடைத்தது அவருக்கு வணிக அளவில் மிகப் பெரிய அந்தஸ்தை அளித்தது. தீபம் படத்திற்குப் பிறகே பல தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள் என முரளி ஸ்ரீனிவாஸ் என்பவர் (தமிழ்த் திரைப்படங்களைப் பற்றித் துல்லியமாகத் தகவல்கள் சொல்பவர்) குறிப்பிடுகிறார். அது உண்மையே. நீங்கள் கூறியது போல சிவாஜிக்கு இறங்கு முகம் இளையராஜாவுக்கு ஏறு முகம் அப்போது. சிவாஜி கூட இந்த காலகட்டத்தில் தனக்குப் பிடித்த பாடலாக செந்தூரப்பூவே பாடலைக் குறிப்பிடுவது உண்டு.--

    உங்களைவிட எனக்கு இளையராஜாவை சற்று அதிகம் தெரிவது போல இருக்கிறது. இதுதான் முரண். அப்பறம் அந்த சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலை நீங்கள் தொடாமலே எதோ ஒரு ஜெயா டி வி நிகழ்ச்சியை விவரித்தது ஒரு நெருடல். (நீங்கள் ஜெயா டி வீயெல்லாம் பார்ப்பீர்களா? உங்கள் கொள்கைக்கு அது சரிப்பட்டு வராதே) மேடைகளில் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வதையெல்லாம் எடுத்துப் போட்டு உங்கள் தலைவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய கட்டாயம் பாவம் உங்களுக்கு! வருத்தப்படுகிறேன். இதுவெல்லாம் ஒரு சம்பிரதாயமான சங்கதிகள்.. இதே நாதகலாஜோதி பால முரளி கிருஷ்ணா எம் எஸ் வி பற்றியும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். இதுபோன்ற மேடை சம்பவங்களை உங்கள் எழுத்துக்கு ஆதாரமாக இழுத்துக்கொண்டு வருவது அதிகமாக சூப்பர் சிங்கர் நிகழ்சிகளைப் பார்ப்பதால் வரும் விபரீதம். நான் அந்தப் பக்கமே போவதில்லை.

    பிறகு அந்த ஞானச் செருக்குக்கு வருவோம்.. திமிர், மண்டைக் கணம், அகம்பாவம், ஏளனம் இதற்க்கெல்லாம் இப்படி ஒரு பெயரைச் சூட்டிவிடலாம் போல தெரிகிறது. வேறுவழி! இப்படி எதையாவது சொல்லித்தானே உங்களால் உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்? இன்னும் கூட எதிர்பார்த்தேன்..

    காயத்ரி படத்தில் வாழ்வே மாயமா என்றொரு பாடல் நன்றாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடல்.

    ReplyDelete
  2. 'சமீபத்தில் எம்.எஸ்.வி பற்றிச் சொல்ல வரும்போது , 'அவர் துப்பிய எச்சில் எங்களுக்கு சாப்பாடு ' என்று அவர் இசை கேட்டு வளர்ந்து, அவர் பாதையில் இசைக்க ஆரம்பித்து , அவரிசையை அகத்தூண்டலாகக் கொண்டு தனித்துவம் அடைந்ததை பூடகமாகச் சொன்னவர் இளையராஜா . '

    ஹா ஹா ஹா ... நீங்கள் உண்மையிலேயே இளையராஜாவைப் புகழ்கிறீர்களா அல்லது இது வஞ்சப் புகழ்ச்சியா? எதோ ராஜாவை .......ரேஞ்சுக்கு சொல்லிஇருகிறீர்கள். அவர் என்ன சொன்னார் எனபதை தெரிந்துகொண்டு எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வாங்க காரிகன்

    மற்றவர்கள் எழுதுவது உங்களுக்கு அப்படிதான் இருக்கும் . நீங்கள் எழுதினால் எல்லோருக்கும் புரிந்துவிடும் . இளையராஜா பற்றி எழுதுபவர்கள் எல்லாம் அவரைப் புரியாமலே எழுதுகிறார்கள். நீங்கள் அவர்களை விட அதிகம் புரிந்தவர் . ம் ... நகைச்சுவை! இசைஞானி ரசிகர்கள் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள் . மேடைகளில் பாலமுரளி கிருஷ்ணா எம்.எஸ்.வி அவர்களையும் புகழ்ந்தவர்தான். நானும் ஏற்றுக் கொள்வேன் . என்ன சொல்ல வருகிறீர்கள் ? புகழ்ச்சி தவறு என்றா? பாலமுரளி புகழ்ந்தது தவறு என்றா? ஓ....மேடைகளில் புகழ்வது சும்மா பொழுது போவதற்காக என்று சொல்கிறீர்களா? இளையராஜாவை புகழ்ந்தால் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துப் புகழ்கிறார்களோ? எம். எஸ்.வி யை புகழ்ந்தால் ?

    சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் உங்களுக்கு ரொம்ப கேவலமாகத் தெரிகிறதா? இளையராஜா பாடல்கள் எடுத்துப் போட்டு அவருக்கு மாலை அணிவிக்க நான் நினைப்பது போல் எம்.எஸ்.வி மற்றும் பெரும்பான்மை தமிழர்களுக்குத் தெரியாத குமார் வெங்கடேஷ் , விஜய பாஸ்கர் இவர்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருக்கிறீர்களே அதை நான் என்னவென்று சொல்வது?

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரவேண்டிய இசை அமைப்பாளார்களின் பாடல்களை எல்லாம் எடுத்துப் போட்டு கைதட்டல் வாங்க நினைக்கும் உங்களுக்கு ஏன் இந்த அவல நிலை?
    கடைசியில் ' கை தட்டிய அந்த நாலு பேருக்கு நன்றி ' என்று சொல்லும் பரிதாபமான நிலைமையில் இருக்கும் உங்களுக்கு வெட்டி ஜம்பம் தேவையா?

    சிவாஜி படம் இசையமைத்த பிறகுதான் இளையராஜா எழுந்தாரா? சிரிப்பு காட்டாதீங்க . முதல் படத்திலேயே எழுந்து விட்டார் . முதல் படமே விஸ்வரூப வெற்றி என்பது முதன் முதலாக இளையராஜா ஒருவரையேச் சாரும் . அவருக்குப் பின் வந்தவர் அப்புறம்தான்!

    காயத்ரி படத்தில் காதலென்னும் ஓவியம் என்ற பாடலும் நன்றாகத்தான் இருக்கும் . ஹிட் லிஸ்டில் இரண்டும் வரவில்லை.

    ReplyDelete
  4. ஹலோ அனானி

    பேர் சொல்ல முடியாமல் ஒளிந்து மறைந்து பேசாமல் பேசும் நண்பரே! பதிவைத் தெளிவாக வாசியுங்கள் . தன இசை முன்னோர்களை மதிக்கத் தெரிந்த இளையராஜா கீழிறங்கி பேசிய வார்த்தைகளாக சொல்லி இருக்கிறேன் . இது எப்படி வஞ்சப் புகழ்ச்சி ?
    அது என்ன .......ரேஞ்ச் ? சரி எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன சொன்னார் என்று தெளிவாகத் தெரிவியுங்கள் பார்ப்போம்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சால்ஸ்,

    உங்கள் பதில் சூடாக இருக்கிறது ஆனால் சத்தாக இல்லை -துரித உணவு போல. சற்று பொறுமையுடன் நிதானமாக உங்கள் கருத்தை எழுதியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான எண்ணம். அதை விடுங்கள்.

    நான் உங்கள் எழுத்தைக் குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி பாணி உண்டு. அதை கிண்டல் செய்வது பாமரத்தனம். அதுசரி, விஷயத்திற்கு வருவோம். மேடைப் புகழாரங்கள் ஒரு அலங்காரமான ஆடம்பரங்கள். அவைகள் மட்டுமே உண்மையாகிவிடாது என்பதே எனது கருத்து. இதில் எம் எஸ் வி என்ன இளையராஜா என்ன எ ஆர் ரஹ்மான் என்ன? ஒரு சாதாரணன் தன் மன ஆழத்திலிருந்து என்ன சொல்கிறான் என்பதைத்தான் நான் அதிகம் மதிக்கிறேன். எனவேதான் அதுபோன்ற சம்பவங்களை என் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்.

    சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலை நான் ரசிப்பவன்தான். பால முரளி கிருஷ்ணாவின் ஊஞ்சல் குரலில் அதைக் கேட்க ஆனந்தமாக இருக்கும். இந்தப் பாடல் உருவான ராகம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலே இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் கூட கண்கள் இரண்டால் என்று சின்னக் கண்ணனை அப்படியே நகல் எடுத்து இன்றைய தலைமுறையினரிடம் பாராட்டு வாங்கியிருக்கிறார். எனக்கு அந்தப் பாடல் சற்றும் பிடிக்காது.

    ----- எம்.எஸ்.வி மற்றும் பெரும்பான்மை தமிழர்களுக்குத் தெரியாத குமார் வெங்கடேஷ் , விஜய பாஸ்கர் இவர்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருக்கிறீர்களே அதை நான் என்னவென்று சொல்வது?
    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரவேண்டிய இசை அமைப்பாளார்களின் பாடல்களை எல்லாம் எடுத்துப் போட்டு கைதட்டல் வாங்க நினைக்கும் உங்களுக்கு ஏன் இந்த அவல நிலை? -----------

    நான் கைதட்டல்களை வரவேற்கும் அதற்காக ஆவல் கொள்ளும் பட்சத்தில் எதற்காக நீங்கள் கூறுவது போல காணமல் போனவர்களைப் பற்றி எழுதி அதை அடைய வேண்டும்? எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இளையராஜாவையோ எ ஆர் ரஹ்மானையோ புகழ்ந்து எழுதினால் எனக்கு இன்னும் அதிக கைதட்டல் கிடைக்குமே? நான் அங்கீகாரங்களையும் ஆர்ப்பரிப்புகளையும் நோக்கி நகர்பவனல்ல. உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே எனக்குண்டு.

    அன்னக்கிளி பெரிய வெற்றி பெற்றது உண்மைதான். இருந்தும் அதன் பிறகு இளையராஜாவுக்கு ஒரு சரியான இடம் தமிழில் அமையவில்லை என்பதே உண்மை. பத்ரகாளி படம் வெற்றி பெற்றது கூட அந்த நடிகை திடீரென இறந்தது ஒரு காரணமாக அமைந்தது. பதினாறு வயதினிலே படம் முழுதும் புதிய படைப்பாளிகளால் உருவானது. ஆனால் தமிழ்த் திரையில் ஆட்சி செலுத்தும் சம்பிரதாயங்கள், சில கேளிக்கை நம்பிக்கைகள், அப்போது இளையராஜாவுக்கு சாதகமாக இல்லை. சிவாஜி என்ற மாபெரும் ஆளுமையுடன் அவர் இணைந்ததே அவருடைய வணிக வெற்றிக்கான முதல் பச்சை விளக்கு. "அட சிவாஜிக்கே மியுசிக் போட்டுட்டாண்டா இந்த சின்னப் பயல்" என பல தயாரிப்பாளர்கள் அதன் பிறகே இளையராஜாவை நாடினார்கள். இது திரைக்குப் பின் நடந்த மாற்றம். திறமை மட்டுமே திரையுலகில் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துவதில்லை. இதை ஒரு குற்றமாக பார்க்காமல் ஒரு அறியாத தகவலாக அணுகினால் உண்மையை புரிந்துகொள்ளலாம். தொடர்ந்து எழுதுங்கள் நிறைய விவாதிக்கலாம்..

    ReplyDelete
  7. ஹலோ காரிகன்

    நான் எப்போதும் சூடாவதில்லை . உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். இளையராஜாவிற்கு முதன் முதலாக சிவாஜிக்கு மட்டுமல்ல எம்.ஜி .ஆர். படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின்னர் படம் எடுப்பதே நிராகரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்காக வாசித்திருந்தாலும் வாசித்திருக்காவிட்டாலும் இளையராஜாவின் graph ஏறிக்கொண்டேதான் போயிருக்கும் . திறமைக்கான மக்களின் அங்கீகாரத்தை யாரும் தடுத்து விட முடியாது.

    மேடைப் புகழாரங்கள் உண்மையில்லை என்றால் தனியாக பேட்டி கொடுப்பதும் உண்மையில்லையா? எத்தனையோ இசை விற்பன்னர்கள் இளையராஜாவின் இசைத் திறமையை மெச்சவில்லையா ? அதுவும் உங்களுக்குப் பொய்தானா ?

    ///அன்னக்கிளி பெரிய வெற்றி பெற்றது உண்மைதான். இருந்தும் அதன் பிறகு இளையராஜாவுக்கு ஒரு சரியான இடம் தமிழில் அமையவில்லை என்பதே உண்மை. பத்ரகாளி படம் வெற்றி பெற்றது கூட அந்த நடிகை திடீரென இறந்தது ஒரு காரணமாக அமைந்தது///


    இது புதுக் கதை . பத்ரகாளி படத்தின் வெற்றி அதன் கதை , திரைக்கதை மற்றும் இசைக்காகதானே ஒழிய ஹீரோயின் செத்துப் போனதால் அல்ல! இப்படி யாரும் சொல்லி நான் கேட்டதேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்டிராத உண்மைகள் இருக்கவே முடியாதா? இது என்ன பூனை குணம்? (பூனை கண்களை மூடிக்கொண்டால் என்று ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு பதில் எழுதும்போது அதுபாட்டுக்கு பழமொழிகள் வருகின்றன. எல்லாம் உங்களின் பாதிப்புதான்.)

      Delete
    2. பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதியதை வாசித்து விஷயத்தை எழுதினேன்.

      Delete
  8. //....அவர் சவாலுக்கு விடுத்ததை 'தலைக்கனம் ' என்றால் இருந்துவிட்டு போகட்டுமே !//

    சரியோ தவறோ .. எனக்கு கண்ணதாசன், ஜெயகாந்தன், இளையராஜா - இந்த மூவரின் தலைக்கனம்/ஞானச் செருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெ.மோ, சாரு போன்றவர்களின் செருக்கு பிடிப்பதேயில்லை.

    சிவாஜி, எம்.எஸ்.வி., ரஹ்மான் - இவர்களிடம் இந்த செருக்கைக் கண்டதில்லை. அதுவும் பிடித்தது. (என் கேரக்டர் எனக்கே புரியவில்லை)

    காணொளிகளுக்கு நன்றியும் பாராட்டும்.

    உங்கள் ;ஞான விவாதங்களுக்கு’ நடுவில் இராட்சஷனும் தொடர்ந்து நீண்டு வளரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தருமி சார்

      நாம் பணியாற்றும் நிறுவனங்களில் ஒரு திறமையும் இல்லாத ஆட்கள் அலட்டிக் கொண்டும் தலைமையோடு ஒட்டிக் கொண்டும் செருக்குடன் பேசிக்கொண்டும் திரிவதை சகித்துக் கொண்டுதான் செல்கிறோம் . திறமையுள்ளவர்களிடம் சரியான கேள்வியைக் கேட்கத் தெரியாமல் அவர் திறமைக்கு சவால் விடுவது போன்ற கேள்விகளுக்கு அப்படிதான் சொல்வார்கள்.

      ஒருமுறை நான் படித்த கல்லூரியில் ஜெயகாந்தன் அவர்கள் வந்திருந்தார் . ஒரு மாணவன், " மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி பத்தினியா அல்லது பரத்தையா? " என்று கேள்வி கேட்டான் . சிறிய மௌனத்திற்குப் பிறகு அமைதியாகச் சொன்னார் , " பத்தினியின் மகனுக்கு பத்தினி . பரத்தையின் மகனுக்கு பரத்தை " சிறிய சலசலப்பு . கேட்ட நிறைய பேருக்கு கடுகடுப்பு. இதில் யார் சரி? அவர் எழுதிய எழுத்தைப் பற்றிக் கேட்காமல் வேண்டாத கேள்வியை கேட்டவனா அல்லது ஜெயகாந்தனா?

      இதைவிடவா மோசமாக இளையராஜா பதில் சொன்னார் ? அவரிடம் கேட்ட கேள்வி தவறு .

      உங்கள் பாராட்டுக்கு நன்றி . உங்களின் வேண்டுகோளின்படி காணொளிகளும் தொடரும் . நாங்கள் செய்வது ஞான விவாதங்களா? எம்.எஸ்.வி. , இளையராஜா வாசித்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

      Delete
  9. கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன்: என் உயரத்திற்கு எட்டாத, உங்கள் ;ஞான விவாதங்களுக்கு’ நடுவில் இராட்சஷனும் தொடர்ந்து நீண்டு வளரட்டும்.

    ReplyDelete
  10. சிறப்பான பதிவு சார்ல்ஸ் அவர்களே ! வாழ்த்துக்கள்.
    அழகான நடையில் அமைந்திருக்கிறது .

    தமிழில் புது அர்த்தங்களை காரிகன் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.அதில் ஒன்று தான் பாலமுரளியின் குரலை " ஊஞ்சல் குரல் ".என்பது .
    இது என்ன கோமாளித்தனம் !!

    நீங்கள் கேட்டிராத உண்மைகள் இருக்கவே முடியாதா? இது என்ன பூனை குணம்? என்கிறார் காரிகன்.

    காரிகனுக்கும் ,அமுதவனுக்கும் தான் திரைக்கு பின்னால் நடந்த சங்கதிகள் எல்லாம் தெரியும்.இவர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் " இது கூட ராஜா ரசிகர்களுக்கு தெரியவில்லை " என்பது.

    நீங்கள் சொல்ல வருவது புரிந்தும் ,வேண்டுமென்றே விசையங்களை திரிப்பது தான் அவர்களின் நோக்கம்.ஏனென்றால் அவர்கள் தான் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடாத்தி விசயங்களைப் பேசுபவர்களாச்சே !!

    காரிகனின் பின்னூட்டத்தை ஏன் நீக்கினீர்கள்.அவரின் நாகரீக வார்த்தைகளை நாமும் ரசிக்கலாம் அல்லவா ?!

    Vimal

    ReplyDelete
    Replies
    1. வாங்க விமல்

      ' ஊஞ்சல் குரல்' பற்றி நானும் காரிகனிடம் கேட்க நினைத்தேன் . நீங்களே கேட்டுவிட்டீர்கள். நெருடலான வார்த்தை . சரிதானா?

      Delete
  11. விமல்,

    எதோ ஒப்புக்கு சால்சை பாராட்டிவிட்டு உடனே அடுத்த கணமே என் மீது நீங்கள் பாய்வதிலிருந்தே உங்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. உங்களைப் போன்ற Metaphor புரியாதவர்கள் விளக்கெண்ணை விளக்கங்களும் வியாக்கியானங்களும் விமர்சனங்களும் செய்வது ஒரு கருப்பு நகைச்சுவை. எழுதப் பட்ட கட்டுரையைப் பற்றி எந்த கருத்தையும் காணவில்லை. புரளி பேச புதிய காற்று தளம் வசதியாக இருக்கிறது போலும். கவலையே வேண்டாம். திருவாளர் சால்ஸ் வந்து உங்களுடைய ஆர்வத்திற்கு இன்னும் நிறைய தீனி போடுவார்.

    இணையத்தில் எழுதுகிறீர்கள். This comment has been removed by the author என்பதற்கும் This comment has been removed by the administrator என்பதற்குமான வித்தியாசம் கூட அறியாமல் என் நாகரீகத்தை எடை போடுகிறீர்கள். இதைப் போலத்தான் உங்களது "இசை ஞானம் பிரகாசமாக" ஒளிர்கிறது. ஏன்? இங்கே வந்து உங்களின் வழக்கமான விளம்பரத்தை செய்யவில்லையா? அதுதான் இனிஒரு டாட் காம்.. (சவுந்தரின் கட்டுரைகளை முழுதும் படிக்காமலே நல்ல பதிவு பாராட்டுகள் என்று பின்னூட்டம் போடுபவராயிற்றே நீங்கள்.)

    ReplyDelete
  12. சால்ஸ். தங்கள் இசை இராட்சசன் -4,காணொளியுடன் கூடிய புதிய அணுகுமுறைக்கு எனது பாராட்டுக்கள் .வயிற்றெரிச்சல்கொண்ட சிலர் இதை பாலைவனத்தில் பெய்த மழை என்கிறார்கள் .நேற்று பெய்த அடைமழையில் முளைத்த காளான்கள் போல சொற்ப படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இசையமைப்பாளர்களெல்லாம் இவர்களின் ரசனையில் உச்சத்தில் இருக்கும்போது எண்ணிலடங்கா அற்புதமான பாடல்களைத் தந்த இசை ஞானியைப் பழிப்பதிலிருந்தே இவர்களது இசை ஞானம் புலப்படுகிறது .ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளபோதும் நிலா காயுது ,பொன்மேனி உருகுதே போன்ற பாடல்களிலேயே இருக்கிறது .காரியசெவிடு என்பார்களே அது போல இவர்கள் காதுகள் நல்ல பாடல்களைக் (இளையராஜாவின் )கேட்கும் திறனை இழந்துவிட்டன போலும் . காரிகனின் பின்னூட்டத்தில் யாருமே கேள்வி பட்டிராத ஓர் அதிசய செய்தியைக் கண்டேன் .பத்ரகாளி என்ற படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் கதாநாயகி திடீரென இறந்ததுதான் காரணமாம் .இவர் பழமைவாதிகள் என்று பிறரைக் கூறுகிறார் . இவரின் இக்கூற்று எனக்கு ஒரு பாடலை நினைவூட்டுகிறது .(சிரிப்பு வருது ,சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது .சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது .) இதில் இசையறிவு கொண்டோரே இசையை ரசிக்க முடியும் என்ற வியாக்கியானம் வேறு .எம் .எஸ் .வி .அவர்களது அற்புதமான பாடல்களுக்கு நாங்களும் சிறந்த ரசிகர்களே .இசைஞானியை மட்டுமே புகழவேண்டுமென்றோ ,அவர் பாடல்களை மட்டுமே கேட்க வேண்டுமென்றோ எங்கே யாரை வற்புறுத்தினோம் ?அவரின் அபிமானிகளான தங்களைப் போன்றவர்கள் இசைஞானியின் புகழ் பரப்புவதில் பெருமிதமே கொள்ள வேண்டும் .போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் பின்னடைவு கொள்ளாமல் இசைஞானி குறித்த தங்கள் பதிவை இன்னும் மெருகேற்றுங்கள் .காய்த்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும் .இசைஞானியின் அற்புத படைப்புகளைக் கேட்க மறந்தோருக்கும் வாய்ப்பற்றோருக்கும் வாரி வழங்குங்கள் .வளரட்டும் தங்கள் பதிவு .

    ReplyDelete
  13. \\இது புதுக் கதை . பத்ரகாளி படத்தின் வெற்றி அதன் கதை , திரைக்கதை மற்றும் இசைக்காகதானே ஒழிய ஹீரோயின் செத்துப் போனதால் அல்ல! இப்படி யாரும் சொல்லி நான் கேட்டதேயில்லை.\\

    சார்லஸ், உங்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினையே இதுதான். பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிவதில்லை. பல விஷயங்களை நீங்கள் படிப்பதில்லை, அல்லது கேள்விப்படுவதில்லை. இவையெல்லாம் தவறுகளோ குறைபாடுகளோ அல்ல. ஆனால் இல்லாத விஷயங்களை வைத்துக்கொண்டு நீங்கள் பாட்டுக்கு கோட்டைக் கட்டிக்கொண்டு போய்விடுகிறீர்கள்.

    அதைக் குறிப்பிட்டுச் சொன்னால் சொல்கிறவர்களை வசைபாடுகிறீர்கள். கேலி பேசுகிறீர்கள்.
    இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமா? என்ற எகத்தாளம் வேறு.

    நான் திரும்பத் திரும்பச் சொல்வதே இதுதான். உங்கள் கருத்துக்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்களைப் பொறுத்தவரையிலும், உங்கள் கருத்தோடு ஒட்டியவரைப் பொறுத்தவரையிலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதனைப் பொதுவெளியில் பரப்ப வரும்போதுதான் சரியான கருத்துக்களை எழுதுங்கள் என்கிறோம்.

    பத்ரகாளி விஷயத்திலும் இதுதான். அந்தப் படத்தின் கதாநாயகி ராணிசந்திரா விமானவிபத்தில் அகால மரணமடைந்துபோய் எத்தனைப் பெரிய தாக்கம் ஏற்பட்டது என்பதையோ, அந்தப் படம் ரிலீசானபோது எத்தனை வரவேற்புக்கிடையே பரபரப்புக்கிடையே ரிலீசானது என்பதுபற்றியோ உங்களிடம் தகவல் இல்லை. அதுபற்றி "ஒரு எம்ஜிஆர் பட வெளியீடு அளவுக்குத் தியேட்டர்களில் கூட்டம் இருந்தது" என்பதாக அந்தப் படத்தில் கதாநாயகராக நடித்த சிவகுமார் அளித்த பேட்டி அப்போதே வந்திருந்தது. இதுபற்றி படத்தின் இயக்குனரான ஏ.சி.திருலோகசந்தரும் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் நிறைய பேட்டிகள் அளித்திருக்கிறார். எல்லாம் ராணிசந்திராவைப் பற்றியதுதான். சமீபத்தில் தினத்தந்தியில் ஆரூர்தாஸூம் அதுபற்றியெல்லாம் நிறைய எழுதியிருந்தார்.

    ஆனால் நீங்கள் படத்தின் வெற்றிக்கான காரணத்தைத் தூக்கி வேறொருவர் மீது போடுகிறீர்கள்.(அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகவில்லையா? பட வெற்றிக்குப் பாடல்கள் காரணமில்லையா? என்ற மொக்கைக் கேள்விகளுடன் யாரும் ஓடிவரவேண்டாம், இங்கே இப்போது பேசுவது ராணிசந்திரா பற்றி.)

    அதனால் எழுதும்போது வெறும் அபிமானங்களைக் கடந்து கொஞ்சம் தெளிவுகளும் இருக்கட்டும் என்றுதான் சொல்கிறோம்.

    ReplyDelete
  14. அருள் ஜீவா,

    பதிவைப் பாராட்டுவது இருக்கட்டும். அதைக் கூட ஒப்புக்கென செய்வதுபோல தெரிகிறது. அதன் பின் விமல் வகையறாக்கள் வழக்கம் போல் என் மீது பாய்வதையே நீங்களும் செய்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்தது இதுதான் போல. பரிதாபப்படுகிறேன்.

    -------அவரின் அபிமானிகளான தங்களைப் போன்றவர்கள் இசைஞானியின் புகழ் பரப்புவதில் பெருமிதமே கொள்ள வேண்டும் .போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் பின்னடைவு கொள்ளாமல் இசைஞானி குறித்த தங்கள் பதிவை இன்னும் மெருகேற்றுங்கள் -----------

    எதோ இளையராஜா விவேகானந்தர், பெரியார் போல சமூக சீர்திருத்தவாதி ரேஞ்சுக்கு நீங்கள் எழுதியிருக்கும் மனோகரா பாணி வசனங்களைப் படித்ததும் பொங்கி வந்தது சிரிப்பு. நீங்கள் என்ன நாடகத்துக்கு வசன ஒத்திகை செய்துகொண்டிருக்கிறீர்களா? இதில் எனக்கு வயிற்றெரிச்சலாம்.. நல்ல கதைதான்.. சகிக்கவில்லை என்பது வேண்டுமானால் பொருத்தமான சொல்லாக இருக்கும். என்னை ஏளனம் செய்யக்கூட உங்களுக்கு ஒரு ராஜா பாடல் அகப்படவில்லையே என வருத்தமாக இருக்கிறது. அதற்கும் எம் எஸ் விஸ்வநாதன் - ராமூர்த்தி இரட்டையர்கள் அமைத்த ஒரு பழைய பாடல்தான் (சிரிப்பு வருது -ஆண்டவன் கட்டளை) உதவிக்கு வருகிறது. அந்த அளவிற்கு எம் எஸ் வி நம்மை ஆட்சி செய்கிறார். இதை நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்.

    ----நேற்று பெய்த அடைமழையில் முளைத்த காளான்கள் போல சொற்ப படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இசையமைப்பாளர்களெல்லாம் இவர்களின் ரசனையில் உச்சத்தில் இருக்கும்போது எண்ணிலடங்கா அற்புதமான பாடல்களைத் தந்த இசை ஞானியைப் பழிப்பதிலிருந்தே இவர்களது இசை ஞானம் புலப்படுகிறது-----

    இதுதான் ராஜா ரசிகர்களின் உண்மையான நிறம். அவரைத் தவிர மற்றவர்களை காலில் போட்டு மிதிப்பது ஒன்றுதான் உங்களின் நாகரீகம். அப்படியெல்லாம் இல்லை என்று ஒரு புறம் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டே அதைத்தான் செய்கிறீர்கள். அதுவும் ரொம்ப முனைப்பாக. இளையராஜா எண்ணிலடங்கா பாடல்கள் வதவதவென்று கொடுத்திருப்பது உண்மைதான். அதில் எத்தனை தேறும் என்பதுதானே இங்கே முக்கியம். வெறும் எண்ணிக்கையை வைத்து நீங்கள் தரத்தை எடை போட்டால் என்ன மிஞ்சும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. அமுதவன் சார்

    நீங்கள் சொல்வது முழுக்க உண்மை இல்லை . ராணிச்சந்திரா என்ற நடிகை நடித்துக் கொண்டிருக்கும்போது விபத்தில் இறந்துபோன விஷயம் நானும் அந்த நேரத்தில் அறிந்திருந்ததே! அந்தப் படத்திற்கு நானும் சென்று பார்த்து பயந்து எனக்குக் காய்ச்சல் வந்த கதையெல்லாம் தனி ! இறுதிக் காட்சிகள் பயமுறுத்தும் . ராணிச்சந்திரா அதைவிட பயமுறுத்துவார் . எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது .

    ஆனால் மக்களின் கூட்டம் அந்தப் படத்திற்கு அதிகமானதற்கு த்ரில்லிங் திரைக்கதையும் இசையும் அப்போது பெரியவர்களால் பேசப்பட்டதை நான் கேட்டிருக்கிறேன் . கதாநாயகி இறந்து போனதைப் பற்றி பரிதாபப்பட்டார்கள். அவ்வளவுதான் ! படத்தின் வெற்றிக்கு ஒரு சாவு எப்படி காரணமாகும்? கதாநாயகிக்கு அதுதான் முதல் படம் . பிரபலமான நடிகை என்றாலும் நம்பலாம் . திருலோகச்சந்தர் பல வெற்றிப் படங்கள் கொடுத்தார் . வெற்றிகள் எல்லாம் கதை திரைக்கதை இசையால்தான்!

    பத்ரகாளி படப் பாடல்கள் அமோக வெற்றியடைந்தன . அது இளையராஜாவால் மட்டுமே ...ராணிச்சந்திராவால் அல்ல!

    ReplyDelete
  16. காரிகன் சார்

    /// இதுதான் ராஜா ரசிகர்களின் உண்மையான நிறம். அவரைத் தவிர மற்றவர்களை காலில் போட்டு மிதிப்பது ஒன்றுதான் உங்களின் நாகரீகம். அப்படியெல்லாம் இல்லை என்று ஒரு புறம் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டே அதைத்தான் செய்கிறீர்கள். அதுவும் ரொம்ப முனைப்பாக. இளையராஜா எண்ணிலடங்கா பாடல்கள் வதவதவென்று கொடுத்திருப்பது உண்மைதான். அதில் எத்தனை தேறும் என்பதுதானே இங்கே முக்கியம். ///

    மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் இளையராஜா என்ற வார்த்தையை எடுத்துவிட்டு எம்.எஸ்.வி என்று போட்டு பார்த்தாலும் பொருந்தும் . இல்லையா? ஏனென்றால் எம்.எஸ்.வி இளையராஜாவை விட வத வதவென ...நான் கொஞ்சம் நாகரீகமாவே சொல்கிறேன்.. ... அளவுக்கதிகமாக பாடல்களைக் கொடுத்திருக்கிறார் . எத்தனை தேறும்?

    ReplyDelete
  17. சால்ஸ்,

    அமுதவன் கூறியதுபோல உங்களுக்கு சில உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. பத்ரகாளி படம் பெற்ற வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம் அதன் நடிகை திடீரென அகால மரணமடைந்ததுதான். மக்கள் அப்போது அதைப் பற்றியே பேசினார்களே தவிர இளையராஜாவின் இசையைப் பற்றி யாரும் விவாதித்ததாக நானறியவில்லை. அது உங்களின் கற்பனை. அப்போது இளையராஜா மிகப் பெரிய ஆளுமையாக அடையாளம் காணப்படாதவராகவே இருந்தார். உங்களின் ஆசை அவர் வந்தது முதலே பெரிய இடத்தை அடைந்துவிட்டதாக இருக்கலாம். ஆனால் அது நாம் அறிந்த வரலாறு அல்ல.இதை நான் மட்டுமல்ல அமுதவன் முதற்கொண்டு தமிழ்த் திரையைப் பற்றி அறிந்த பலரும் கூறிய கருத்தேயாகும். இதனால் இளையராஜாவின் பெருமை குறைந்துபோகும் என்று நீங்கள் பயப்படுவது யதார்த்தைதை மீறியது. உங்களுக்கு நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லை அல்லது அதைப் பற்றியே எண்ணமில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் மக்கள் பூமியைச் சுற்றியே சூரியன் மற்ற எல்லா கோள்களும் சுற்றி வந்ததாக நம்பினார்கள் - கோபர்நிகஸ் ப்ருனோ கலிலியோ போன்ற உண்மை விரும்பிகள் வரும்வரை. இந்த methaphor ராவது உங்களுக்குப் புரிகிறதா என்று பார்க்கலாம். இல்லாத உண்மையை நியாயப்படுத்தாதீர்கள். மேலும் கோமாளியாகக் காட்சியளிக்க வேண்டாம்.

    அடுத்து வதவத வென்ற பதம் குறித்து.

    நான் இதைச் சொல்லவில்லை. சொன்னது உங்களின் பார்ட்னர் அருள் ஜீவா. பாய்வதாக இருந்தால் அவர் மீது பாயுங்கள். ஒரு படத்தில் அர்ஜுன் சொல்வதுபோல "சிங்கம் தனியாத்தான் வரும். பண்ணிக தான் கூட்டமா வரும்". எண்ணிக்கையை குறிப்பிட்டு அவர்தான் இந்த விவாதத்தை துவக்கினார். எம் எஸ் வி யின் பல பாடல்கள் இன்னும் தரமாகத்தான் இருக்கின்றன. எல்லோரும் ரசித்துக் கேட்கும்படி. உங்கள் ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.. ஒவ்வொருவரின் ரசனை அப்படி. இந்தக் கண்றாவிகளையெல்லாம் பாடல்களாக மாற்றிய இசை மேதமையை என்னவென்பது! The perfect porn music director of the Tamil film music industry..

    ReplyDelete
  18. காரிகன்

    இளையராஜாவை ஒரு 'The perfect porn music director of the Tamil film music industry.. ' என்று உங்களைத் தவிர எந்த புத்திசாலியும் சொன்னதில்லை என்றே நினைக்கிறேன். உங்களின் கூற்றுப்படி 'இதழே இதழே தேன் வேண்டும் ' என்று இதயகனிக்காக பாட்டு போட்ட எம். எஸ். வி யையும் porn music டைரக்டர் என்று சொல்லலாமே! நான் சொல்ல மாட்டேன். நான் அவருக்கும் ரசிகரே! நீங்க சொல்வீர்கள். ஏனென்றால் அதிலும் முக்கல் முனகல் நிறைய இருக்கும் . வத வதன்னு பாட்டுப் போட்ட ....... யாரு? தைரியமாகச் சொல்லுங்கள் .

    ReplyDelete
  19. \\பத்ரகாளி படம் பெற்ற வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம் அதன் நடிகை திடீரென அகால மரணமடைந்ததுதான். மக்கள் அப்போது அதைப் பற்றியே பேசினார்களே தவிர இளையராஜாவின் இசையைப் பற்றி யாரும் விவாதித்ததாக நானறியவில்லை. அது உங்களின் கற்பனை. அப்போது இளையராஜா மிகப் பெரிய ஆளுமையாக அடையாளம் காணப்படாதவராகவே இருந்தார். உங்களின் ஆசை அவர் வந்தது முதலே பெரிய இடத்தை அடைந்துவிட்டதாக இருக்கலாம். ஆனால் அது நாம் அறிந்த வரலாறு அல்ல\\

    காரிகன் உங்களுடைய இந்தப் பின்னூட்டத்திற்குப் பிறகுதான் நான் இதுபற்றி மறுபடியும் பேச வந்திருக்கிறேன். இல்லாவிட்டால் 'இவர்களிடமெல்லாம் எதுபற்றிப் பேசியும் பிரயோசனமில்லை. பேசாமல் இருந்துவிடுவோம்' என்ற முடிவுக்குத்தான் வந்திருந்தேன்.
    பத்ரகாளி படத்தின் படப்பிடிப்புக்கெல்லாம் போய் வந்தவன் நான். ஒருநாள் ராணிசந்திராவின் படப்பிடிப்பின்போதும் இருந்திருக்கிறேன். அவர் மரணம் எத்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியது, அவர் இறந்தபிறகு நடைபெற்ற வியாபாரப் பரிவர்த்தனைகள் என்ன என்பதெல்லாம் நிறைய இருக்கிறது. அந்தப் படம் வெளியான மறுநாள் தினத்தந்தியில் 'விமான விபத்தில் மரணமடைந்த ராணிசந்திரா நடித்த பத்ரகாளி படம்- தமிழகம் முழுக்க வெளியானது. தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம்' என்று படத்துடன் செய்தியே வெளியாகியிருந்தது. கவனிக்கவும், விளம்பரம் அல்ல, செய்தி. இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார். சரி சொல்லிவிட்டுப் போகட்டும் என்றுதான் இருந்தேன்.

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. அந்தச் சமயங்களிலெல்லாம் இளையராஜா ஒரு ஆளுமையாக உயர்ந்திருக்கவே இல்லை. அவரும் கமலஹாசன் போலத்தான். ஒரு அறுபது எழுபது படங்களுக்குப் பின்னால்தான் விநியோகஸ்தர்கள் பேசப்படும் இசையமைப்பாளராகவே வந்தார். அவரை முன்னிறுத்த பஞ்சுஅருணாசலமும், தேவராஜ்மோகனும் எத்தனைச் சிரம்பபட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களெல்லாம் பேசப்படாமலேயே இருக்கின்றன. 'ஏதோ பாட்டுப்போட்டார். அந்தப் பாட்டு இதுவரை தமிழ்த்திரையிலேயே இல்லாத பாட்டு. உலகிலேயே இவரைப்போல இசையமைப்பாளர் யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை' என்பது மட்டுமே இவர்களின் ஒற்றைச் சிந்தனை. மற்றும் நம்பிக்கை.

    அதைத் தகர்க்கிறோம் என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  20. //இளையராஜா எண்ணிலடங்கா பாடல்கள் வதவதவென்று கொடுத்திருப்பது உண்மைதான். அதில் எத்தனை தேறும் என்பதுதானே இங்கே முக்கியம்//

    இது கொஞ்சம் tooooo muchஆக தெரிகிறதே!? இப்போது வரும் பாடல்களைச் சொல்லுங்கள். சரி.. ஆனால் 80-90களில் ....?

    ReplyDelete
  21. //உலகிலேயே இவரைப்போல இசையமைப்பாளர் யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை' என்பது மட்டுமே இவர்களின் ஒற்றைச் சிந்தனை. மற்றும் நம்பிக்கை. //

    அப்படியா சொல்கிறார்கள்? தெரியவில்லை.

    அப்படிச் சொன்னால் அது ஒற்றைச் சிந்தனையை விட மோசமல்லவா?

    ReplyDelete
  22. இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை.
    எனக்கு இவரின் இசை பிடிக்கிறது என்று ஒருவரைக் கை காண்பிப்பது தவறா? அவர் மற்றவரின் இசையைக் குறைத்துப் பேசினால் அவரைக் “குதறலாம்” ... இல்லாவிடில் அவர் போக்கில் விட்டு விடுவதுதானே சரி. உன்க்குப் பிடிக்குதா ... சரி..சரி... வச்சுக்கோ...என்று விட்டுவிடலாமே!

    ReplyDelete
    Replies
    1. சார் ரொம்ப சரியாகச் சொன்னீர்கள். இளையராஜாவின் இசையை பொதுவில் வைப்பதே தவறு என்ற கண்ணோட்டத்தில் பலர் பேசுகிறார்கள் . இசை இன்பத்தை நான் அனுபவமாகப் பகிர்ந்தால் அது சரியில்லை, இது சரியில்லை என்று வம்பும் வீம்பும் செய்வதற்கு வரிந்து கொண்டு வருகிறார்கள் . அபத்தமான கதையும் விளக்கமும் (ராணிச்சந்திரா கதை ) சொல்கிறார்கள் . உண்மை என்று நம்ப வைக்க போராடுகிறார்கள் . சரி... எதையும் சந்திக்கலாம் இவர்களையும் சந்திக்கலாம் . பதிவு ஒவ்வொன்றும் சூடு பிடிக்கட்டும் .

      Delete
    2. தருமி அவர்களே

      இங்கே எப்படியாவது இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதே நோக்கம்.இவர்களுக்கு ஒரு புண்ணாக்கும் புரியவில்லை என்பது வெள்ளிடை மலை.

      விமல்

      Delete
  23. பத்ரகாளி படத்தின் முடிவில் அந்த நாயகி (ராணி சந்திரா) திடீர் மரணமடைந்ததால் வேறு ஒரு நடிகையை வைத்து படத்தின் கிளைமாக்சை எடுத்திருப்பார்கள். அதனால்தான் இறுதிக் காட்சியில் அவரது முழு முகமும் தெரியாமல் வெறும் கண்கள், தலைவிரி கோலம், தூரமான கோணம் போன்றவைகள் இறுதிக் காட்சியில் அதிகம் இருக்கும். இது கூட படத்திற்கு ஒரு பெரிய விளம்பரத்தைக் கொடுத்தது. சால்ஸ் இந்த டூப் நடிகையின் நடிப்பைப் பார்த்துவிட்டுதான் காய்ச்சலில் விழுந்திருப்பார். அதை ராணி சந்திரா என்று தவறாக சொல்கிறார்.

    ReplyDelete
  24. தருமி சார்,

    இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. நான் ஏகத்துப் படித்து ஏராளமாக வெறுப்படைந்துபோய் அதன் பின்னர்தான் காலமும் கானமும் என்ற என்னுடைய முதல் இசைப் பதிவை எழுதினேன். கீழ்க்கண்டவாறு அவர்களின் கருத்து இருக்கும்.

    1.ராஜா ராஜாதான். அவை மிஞ்ச இந்த உலகத்திலேயே வேறு யாரும் இல்லை.

    2. எம் எஸ் வி போன்றவர்கள் நல்ல சிறப்பான இசையை கொடுத்திருந்தாலும் ராஜா அவர்களைவிட மேலானாவர். அவரைப் போல ஒருவர் இதுவரை பிறக்கவில்லை.

    3.குருக்களை மிஞ்சிய சிஷயர்.

    4.இசையின் சுயம்பு. இவரன்றி இசையே கிடையாது.

    5. மேல் நாட்டினர் எல்லாம் இவரது இசையைக் கேட்டதும் உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து இவரைப் போன்றருவர் இதுவரை இந்த உலகில் இல்லை என்று பெருமைப்படார்கள்.

    இன்னும் நிறைய இருக்கிறது. படித்தால் சிரிப்பல்ல எரிச்சல்தான் ஏற்படும்.

    ReplyDelete
  25. சார்லஸ்

    தங்கள் பதிவில் காரிகனின் பின்னூட்டம் படித்தேன் . இளையராஜாவின் ரசிகர்களை தேய்ந்த ரெகார்ட் போன்றவர்கள் , கிணற்றுத் தவளைகள் என்று பற்பல வார்த்தைகள் மூலம் வசை பாடுகிறார். இதில் தான் ஒரு நடுநிலை இசை ரசிகன் என்ற தம்பட்டம் வேறு.

    பத்ரகாளி பட வெற்றிக்கு அப்பட கதாநாயகி இறந்ததே காரணம் என்ற இவரின் கூற்றுக்கு அமுதவன் நன்றாக ஒத்து ஊதுகிறார். காரிகன்தான் வம்புக்கு வாதிடுகிறார் என்றால் அமுதவன் இளையராஜாவால் பாதிப்பு அடைந்திருக்கிறாரா என்று புரியவில்லை.

    அமுதவன், காரிகன், பரத் போன்றவர்கள் எம். எஸ். வி புகழ் பாடினால் அது சந்தனம். சார்லஸ், அருள் ஜீவா, விமல் போன்றோர் இளையராஜா பற்றி எழுதினால் அது சாக்கடையா? இது அவர்களுக்கே அதிகமென தோன்றவில்லையா?

    இதுவரை இவர்கள் இளையராஜா இசை மட்டமானது என்று தெரிவிக்க நிலாகாயுது , பொன்மேனி உருகுதே போன்ற பாடல்களை உதாரணமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். காரிகனின் பதிவில் ஒருவர் மௌன ராகம் படத்தில் வெளிவந்த மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் கேட்டு வாந்தி வருகிறது என்று சொல்லியிருக்கிறார். வாந்தி வரும் அளவிற்கு அவர் எந்த நிலையில் இருந்தார் என புரியவில்லை.

    இளையராஜா என்றாலே சிற்சில பாடல்களைக் கூறி அவரின் இசை மட்டமானது என்று வாதிடுபவர்கள் அவருடைய ரசிகர்களை கிணற்றுத் தவளைகள் பறக்க முடியாது என்று ஏளனம் செய்கிறார்கள் . கிளாசிக் பாடல்கள் இளையராஜாவால் இசைக்கப்படவில்லை என்ற சித்தாந்தம் வேறு.

    வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம் என்பார்களே அதுபோல குறை காணும் நோக்கோடு பாடல்களைக் கேட்காமல் கலை நயத்தோடு ஆர்வத்தோடு கேட்டால் இளையராஜா அற்புதப் படைப்புகள் அவர்களுக்கே புரியும் .

    ReplyDelete
  26. கீழே உள்ளது எனது எழுத்து அல்ல. குட்டிப் பிசாசு என்பவர் உங்கள் இளையராஜாவின் பிரபலமான பாடல் ஒன்றைப் பற்றி சொன்னது.

    ---இளையராஜாவுடைய எவ்வளவோ நல்ல பாடல்கள் இருக்கும்போது, நிலா காயுது பாடலும் பாடப்பட்டது. இதுபோன்ற ஒரு கேவலம் எந்த மொழிக்கும் கிடைக்காது. இப்பாடலை பொதுவில் வயதுக்கு வராத பசங்களோட கேட்டு ரசிக்கும் நம்ம சமூகம் ஒரு புரட்சிகரமான சமூகம். வெட்கக்கேடு. இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பெரியவர்களுக்கு மட்டும் விளங்கும்படி இலைமறைவு காய்மறைவாக பாடல்களை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படையாக விருந்து படைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அவருக்கு பின்னாடி வந்தவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கருமம். எப்படியோ போய் ஒழிங்க.---

    மேலும் படிக்க...

    http://kuttipisasu.blogspot.in/2014/02/09022014.html?

    ReplyDelete
  27. ஒருவருடைய இசை எனக்குப் பிடிக்கிறது என்று சொல்ல எனக்கு உரிமை இருப்பது போல மற்றவருக்கும் உரிமையுண்டு.

    இங்கே இளையராஜா பிடிக்கிறது என்பது கட்டுரையாளரின் கருத்து.ராஜாவின் இசையை தான் ரசித்த கோணத்தில் சார்ல்ஸ் வெளிப்படுத்துகிறார்.ஆனால் எம் எஸ் வீ போன்றவர்களின் இசையையும் ரசிப்பதாக சொல்கிறார்.

    ஆனால் காரிகன் இங்கே இளையராஜாவை மட்டம் தட்டுகிறார் , கேவலப்படுத்துகிறார்.அதற்க்கு அமுதவர் பின்பாட்டு பாடுகிறார்.நாமும் பல இணைய தளங்கள் பார்க்கின்றோம் அங்கே ராஜா ரசிகர்கள் யாரும் எம் எஸ் வீயையையோ ,ஏனைய இசையமைப்பாலர்கலையோ கீழ் தரமாக எழுதுவதில்லை.
    காரிகனின் தளத்தில் ஏராளமான வசைகள் கிடைக்கின்றன.

    அமுதவர் பட சூட்டிங் பார்த்தாராம் ,,,ஆகவே அவருக்குத் தான் எல்லாம் தெரியும்.!!!

    ##உலகிலேயே இவரைப்போல இசையமைப்பாளர் யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை'//
    என்கிறார் காரிகன்.
    இந்த கட்டுரையில் எங்கே சார்ல்ஸ் அவ்வாறு எழுதியுள்ளார் என்று நமக்கு தெரியவில்லை.எங்கேயோ ஒரு தளத்தில் யாராவது எழுதினால் காரிகன் அங்கே சென்று தனது இசையறிவை காட்ட வேண்டும் .அந்த லட்சணத்தில் தருமி அவர்களுக்கு லெக்சர் அடிக்கிறார். தான் ஒரு உத்தமனாம்.


    குட்டிப்பிசாசு என்பரை கை காட்டும் காரிகனின் நகைசுவையை என்னவென்பது ..?குட்டிப்பிசாசு ஒழுங்காக கேட்கவில்லை என்றால் காரீகனும் பாடல் கேட்கவில்லை போலும் !
    இதழே இதழே தென் வேண்டும் - பாடலில் ஆ ...ஆ ..மெல்ல மெல்ல தொடுங்கள் என்று எம் எஸ் வீ இசையமைத்தது

    எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது .பாடலில் உதட்டுக் கணிக்குள் இருக்கும் சிவப்பு ஆ ,,ஆ இதுவும் எம் எஸ் வீ இசையமைத்தது. இதனை யாரும் Porn music. என்று சொல்லவில்லை.அல்லது பாடிய பாலசுப்ரமணித்தையும் Porn singer. என்று யாரும் இகழ்ந்ததாகத் தெரியவில்லை.
    இது போன்ற " இசைவிமர்சனங்கள் "காரிகனிடமிருந்தே வரும்.ஏனென்றால் அவருக்குத்தான் எல்லாமே தெரியுமே !!! ராஜா ரசிகர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை !

    விமல்

    ReplyDelete
  28. வாங்க விமல்

    சரியாகச் சொன்னீர்கள் . இளையராஜாவை குறித்துப் பேசுவதிலும் குறைத்துப் பேசுவதிலும் ஒருவேளை காரிகன் டாக்டர் பட்டம் வாங்கினாலும் வாங்குவார் .

    இளையராஜாவிடம் எத்தனை குறைகள் சொன்னாலும் அத்தனையும் அவருக்கு முன்னர் வந்த இசை அமைப்பாளர்களிடமும் இருக்கிறது என்பதை நாம்தான் எடுத்துச் சொல்ல முடியும் .

    ' கிளாசிக் பாடல்கள் இளையராஜாவால் இசைக்கப்படவில்லை' என்ற காரிகனின் கருத்து எவ்வளவு பொய்யானது . இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் classic round . 60 களில் வந்த கிளாசிக் பாடல்கள் ரவுண்டில் ஜி. ராமநாதன் , சுப்பையா நாயுடு , விஸ்வநாதன் ராமமூர்த்தி , மகாதேவன் அவர்களின் இசையில் வந்த பாடல்களும் 70 களில் எம். எஸ். வி அவர்களின் இசையில் வந்த பாடல்களும் பாடப்பட்டன . மூன்றாவது நாள் 80 களில் வந்த கிளாசிக் பாடல்கள் முழுவதும் இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டவையே . நடுவர்கள் அனைவரும் கர்னாடக இசை வித்வான்கள் . குழந்தைகள் அழகாக பாடப் பாட குழந்தைகளையும் இசை அமைத்த அத்தனை இசை அமைப்பாளர்களையும் புகழ்ந்து பேசினார்கள். இளையராஜாவின் கிளாசிக் பாடல்கள் இரண்டு நாட்கள் நீடித்தன .

    காரிகனின் கணிப்பை நினைத்துச் சிரித்துக் கொண்டேன் . உண்மையில் அவர் ராஜாவின் பாடல்கள் முழுவதும் கேட்டிருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது . ஆனால் அவர் குறிப்பிடும் அத்தனை பாடல்களையும் நாம் கேட்டிருக்கிறோம்.


    ReplyDelete
  29. சார்ல்ஸ் அவர்களே

    கிளாசிக்கல் பாடல்கள் என்றால் காரிகனுக்கு என்னவென்று தெரியாது போலே.

    அவர் எழுதும் பாடல் பத்திகளை பொறுமையோடு வாசித்ததில் கிடைத்தது ஏமாற்றமே.அவரைப் போல ஒவ்வொரு பாடலையும் அது அருமை ,இது அருமை என்கிற வேற்று கோசம் தான் மிஞ்சி நிற்கிறது.இது போன்ற பாடல்களின் வரிசையை யாரும் இலகுவாக எழுதி சென்று விடலாம்.

    இணையத்திலிருந்து பழைய பாடல்களைக் கேட்டு [ முன்பெல்லாம் அந்த பாடல்களை அவரே உதாசீனம் செய்திருப்பார் ] இப்போ ராஜா ரசிகர்களை " மடக்கும் " நோக்கத்தில் தானே விரும்பாத அந்த பாடல்களை பார்த்து வியக்கிறராம்,,நம்புங்கள் ! அவர் பாவிக்கும் சொற்கள் சிரிப்பாக இருக்கும்.

    காரிகன் இப்போ தான் 60,70 களின் பாடல்களை கேட்க தொடங்கியுள்ளார்.அந்த வளர்ச்சி ராஜாவின் பாடல்களில் கொண்டு வந்து சேர்க்கும்.

    ரானை சந்திராவால் பத்திரகாளி பாடல்கள் புகழடைந்ததாம்..சிவகுமார் எங்கே போனார் ? நல்ல சப்பைக்கட்டு.அதற்க்கு பிறகு வந்த ராஜாவின் பாடலகளின் வெற்றிக்கு எம் ஜி ஆறும் ,சிவாஜியுமா காரணம் ?

    இந்த காரிகனோடு நல்ல ஜோக் போங்க ...

    விமல்

    ReplyDelete
  30. "அவர் எழுதும் பாடல் பத்திகளை பொறுமையோடு வாசித்ததில் கிடைத்தது ஏமாற்றமே.அவரைப் போல ஒவ்வொரு பாடலையும் அது அருமை ,இது அருமை என்கிற வேற்று கோசம் தான் மிஞ்சி நிற்கிறது.இது போன்ற பாடல்களின் வரிசையை யாரும் இலகுவாக எழுதி சென்று விடலாம்."
    விமல் சார், நீங்க எப்ப ஒரு பதிவு எழுதப் போறீங்க? அதான் ரொம்ப சுலபமா இருக்கே? கிண்டல் செய்வது ஈஸி. உங்களுக்கு காரிகன் மற்றும் அமுதவன் ரெண்டு பேர் மேலயும் ஏகத்துக்கு காண்டு. வரிக்கு வரி விடாம அவங்க ரெண்டு பேரையும் வசவு பாடாம இருக்க முடியல உங்களால.

    ReplyDelete
  31. பசுபதி ராம் அவர்களே

    உங்கள் கணணியை காரிகன் பக்கம் சொடுக்கி நிதானமாகப் படியுங்கள்.ஒரு வசைச் சொல்லகராதியே கிடைக்கும்.அதை அமுதவன் காப்பற்றும் எழுத்து வன்மையையும் பாருங்க. பார்த்திட்டு வாங்க ,பேசலாம்.

    நாம் ஏற்கனவே இது குறித்து நிறைய பேசியாயிற்று.அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை.நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியும்? நீங்கள் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்!

    விமல்

    ReplyDelete
  32. சால்ஸ். . விமல் அவர்களுக்கான தங்கள் பின்னூட்டத்தில் இளையராஜாவின் இசையை மறுத்துரைப்பதில் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவார் என்று கூறியிருக்கிறீர்கள் .தவறான கருத்து என்றே நினைக்கிறேன் .நக்கீரர் பட்டமே சரியெனப்படுகிறது .அளவற்ற அற்புதமான பாடல்களை இளையராஜா தந்துள்ள போதும் மீண்டும் மீண்டும் சிற்சில பாடல்களையே உதாரணமாக கூறி குறைபட்டுக்கொள்கிறார் .குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க நினைக்கும் காரிகனுக்கு இசைஞானியின் அபிமானி கள் ஒன்றினைந்து நக்கீரன் பட்டம் வழங்கி மகிழ்வோம் .

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நக்கீரர் பட்டமா? நக்கீரர் என்பவர் திருவிளையாடல் படத்தில் சிவனையே குற்றம் சொல்லி தன் நேர்மையை நிரூபித்தவர். அந்த அளவுக்கு உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டவர். எப்படி இந்த விளக்கம்?

      Delete
  33. --Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people.
    Eleanor Roosevelt---

    விமல்,சால்ஸ், அருள் ஜீவா வகையறாக்களுக்கு நான் மேற்கண்ட பொன்மொழியை சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  34. மன்னிக்கவும். ஒருவேளை சரியாக புரிந்திரா விட்டால்

    பெரிய மனிதர்கள் கருத்துக்களை விவாதிக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்சிகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்களோ (சிறிய மனிதர்களின் சரியான தமிழாக்கம்) மனிதர்களை விவாதிக்கிறார்கள்.

    ReplyDelete
  35. small minds discuss people . முட்டாள்கள் மனிதனை விமர்சிக்கிறார்கள் .அப்படியெனில் இளையராஜா என்னும் மனிதனை மட்டமாக விமர்சனம் செய்யும் காரிகன் ,அமுதவன் ,பரத் ,பசுபதிராம் போன்றவர்களின் நிலையை உணரவைத்த காரிகனுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  36. ம்...ஆங்கில மோகி காரிகனுக்கு ஆங்கில அறிவு இருப்பதாக எடுத்துக்கொள்வதா அல்லது ஆங்கிலத் திமிர் இருப்பதாக எடுத்துக் கொள்வதா என தெரியவில்லை .

    Pride goeth before a fall.

    Empty vessels make the greatest sound.

    The pot calls the kettle black.

    ஆணவத்தால் அழியாதே

    குறை குடம் கூத்தாடும் .

    ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.



    ReplyDelete
    Replies
    1. சார்லஸ், இதோ என் பங்கு.
      look before you leap, ஆழம் தெரியாமல் காலை விடாதே,
      do or die, செய் அல்லது செத்து மடி
      the sun never rises in the west, கதிரவன் ஒருபோதும் மேற்கில் உதிப்பதில்லை,
      knowledge is power, அறிவே பலம்,
      action speaks louder than words செயல்பாடுகள் வார்த்தைகளைவிட அதிகம் பேசும்.

      இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

      Delete
  37. காரிகன் அவர்களே !

    பொன் மொழிகள் ,பழமொழிகள் எல்லாம் சமர்ப்பணம் செய்வது இருக்கட்டும்.Porn.music.என்ற உங்கள் புரளிக்கு உங்கள் பொன் மொழிகளிலிருந்து ஏதாவது ஒன்றை எடுத்து விடுங்க பார்ப்போம்.கீழே உள்ள பாடல்கள் இசையில் எந்த ரகத்தில் சேர்ப்பீர்கள் ? ...பார்ப்போம்.

    இதழே இதழே தென் வேண்டும் - பாடலில்

    ஆ ...ஆ ..மெல்ல மெல்ல தொடுங்கள் ....ம் ..ம் .

    எம் எஸ் வீ இசையமைத்தது.

    எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது .பாடலில்

    உதட்டுக் கனிக்குள் இருக்கும் சிவப்பு ஆ ,,,,ஆ ..ஆஆஆஆ

    இதுவும் எம் எஸ் வீ இசையமைத்ததே !!

    சார்ல்ஸ் அவர்களே!
    ஆங்கில மோகம் ...அது அவரது கோபத்தை மறைக்கும் ஆயுதம் !!
    அது வேறொன்றுமில்லை அவரால் நிதானமாக பதிலளிக்க முடியவில்லை.வடிவேல் போல் கோபித்துக் கொள்கிறார்.

    நரியின் சாயம் வெளுத்து விட்டது....டும் ,,,டும் ,,டும் ...
    அறிவாளி வேஷம் கலைஞ்சு போச்சு ,,,டும் ..டும் ..டும்

    விமல்

    ReplyDelete
  38. சார்லஸ்21 November 2014 09:41
    \\இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் classic round . 60 களில் வந்த கிளாசிக் பாடல்கள் ரவுண்டில் ஜி. ராமநாதன் , சுப்பையா நாயுடு , விஸ்வநாதன் ராமமூர்த்தி , மகாதேவன் அவர்களின் இசையில் வந்த பாடல்களும் 70 களில் எம். எஸ். வி அவர்களின் இசையில் வந்த பாடல்களும் பாடப்பட்டன . மூன்றாவது நாள் 80 களில் வந்த கிளாசிக் பாடல்கள் முழுவதும் இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டவையே . நடுவர்கள் அனைவரும் கர்னாடக இசை வித்வான்கள் . குழந்தைகள் அழகாக பாடப் பாட குழந்தைகளையும் இசை அமைத்த அத்தனை இசை அமைப்பாளர்களையும் புகழ்ந்து பேசினார்கள். இளையராஜாவின் கிளாசிக் பாடல்கள் இரண்டு நாட்கள் நீடித்தன . \\
    சார்லஸ், இம்மாதிரி இசை நிகழ்ச்சிகளை காரிகன் முற்றாக நிராகரிக்கிறார். அவருடைய இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடுகள் உண்டு. நான் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்ப்பவன் இல்லையென்றபோதும் ஏ.ஆர்.ரகுமான் வந்ததுமுதல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான். கர்நாடக சங்கீத வித்வான்கள் நிறையப்பேர் பார்வையாளராகவும், நீதிபதிகளாகவும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் முன்னோர்களின் பாடல்களும் எண்பதுகள் என்று வந்தபோது இளையராஜா பாடல்களும் பாடப்பட்டன. அதைப் பார்த்தே நீங்கள் அளவுக்கதிக புளகாங்கிதம் அடைந்துவிட்டிருப்பது உங்கள் வார்த்தைகளிலிருந்தே தெரிகிறது. மகிழ்ச்சி.
    ஒன்று தெரியுமா? அந்த முன்னோர்களின் பாடல்களெல்லாமே எல்லோருக்கும் தெரிந்த பாடல்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நூற்றுக்கணக்கான வித்வான்களால் ஆயிரக்கணக்கான முறைகள் மேடைகளில் பாடப்பட்டு, வானொலியில் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஆண்டுகள் கடந்து இதயத்திலும் உதடுகளிலும் உட்கார்ந்திருக்கும் பாடல்கள்.........அவையெல்லாம் அந்த அளவு சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்.
    இளையராஜா பாடல்கள் என்று பாடப்பட்ட பாடல்களில் ஜனனி ஜனனி ஒன்றைத்தவிர வேறு எந்தப் பாடலாவது யாருக்காவது தெரியுமா? மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களா அவை? ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.
    மக்கள் மத்தியில் நிலைபெறும் பாடல்கள் என்றால் அவை எவை என்கிற புரிதலே உங்களுக்கு இல்லை போலும்.
    ஜனனி ஜனனி பிரபலமான பாடல்.(அந்த நிகழ்ச்சியில் அந்தப் பையன் அதனைச் சரியாகப் பாடவில்லை என்பது விஷயம்) மற்றும் சிந்துபைரவியில் சில பாடல்கள் என எல்லாப் படங்களிலுமாகச் சேர்த்து ஒரு நாற்பது ஐம்பது கர்நாடக இசை சார்ந்த பாடல்களை இளையராஜா போட்டிருக்கக்கூடும். அவற்றில் ஒரு நான்கோ அல்லது ஐந்து பாடல்களோ மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும். பிரபலம் என்பது அந்தப் படங்களைப் பார்க்காத மக்களையும் சென்று அடையும் பாடல்தான் பிரபலமான பாடல். கோழி அடைகாப்பதுபோல் சில காசெட்டுக்களை வாங்கிவைத்துக்கொண்டு நாம் மட்டுமே பார்த்து சிலாகித்துக்கொண்டிருக்கும் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  39. இதை விமல் என்ற எல்லாம் தெரிந்த அதி மேதாவிக்கு எழுதவேண்டும் என்றுதான் துவங்கினேன். ஆனால் அதற்குள் ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.

    பேராசிரியர் தருமிக்கு நான் பாடம் எடுக்கிறேன் என்று சொல்லும் விமலுக்கு வழக்கம் போலவே ராஜாவின் இசை என்ற ஒரு வஸ்துவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதை கூட முழுமையாக கேட்டிருப்பாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. அவருக்கு ராஜாவைப் புகழ்வதைக் காட்டிலும் அமுதவனையும் என்னையும் வசை பாடுவதே ஆனந்தமாக இருக்கிறது . அது நன்றாகவே தெரிகிறது. இந்த கன்றாவிக் குப்பைக் கருத்துக்களுக்கு ஒரு தளம் வேறு அமைத்துக் கொடுத்துவிட்டார் சால்ஸ். வாழ்க. நீங்கள் செய்வது கருத்து மோதல்களா அல்லது குடுமிப் பிடி சண்டையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

    இது தனிப்பட்ட ஒருவரின் சொந்த விருப்பங்களை சொல்லும் ஒரு தளம்- நான் எழுதுவதைப் போன்றே சால்ஸ் பதிவுகள் எழுதுகிறார். . என்னை எவ்வாறு ஒரு அன்னியர் எதை எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாதோ அதே போல என்னாலும் திரு சால்ஸ் அவர்களை கட்டாயப் படுத்தமுடியாது. தருமி சார் சொல்வதைப் போல அவர் எழுத்து அவருக்கு. நான் எங்கே இதில் குறுக்கே வந்தேன்? பத்ரகாளி படம் வெற்றி பெற்றதின் பின்னே இருந்த ஒரு முக்கியமான காரணியை - அது உண்மையும் கூட- தெரிவித்தேன். உடனே பற்றிக்கொண்டு வருகிறது சிலருக்கு. முதலில் கொஞ்சம் விஷயம் அறிந்திருக்க வேண்டும். அல்லது தெரியாததை தெரிந்துகொள்ளும் ஆர்வமாவது வேண்டும். இந்த இரண்டு அடிப்படை ஞானமும் ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன் - தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்) அளவு கூட இல்லாத சில அவஸ்தைகள் இளையராஜா அறிமுகம் செய்த சுண்டெலி சித்ரா போல கூச்சலிடுகின்றன. சால்ஸ்சாவது இப்போது பதிவுகள் எழுத ஆரம்பித்துவிட்டார் எனவே அவருக்குத் தெரியும் பதிவு எழுதுவது விமல் என்ற புத்திசாலி சொல்வதைப் போல (".இது போன்ற பாடல்களின் வரிசையை யாரும் இலகுவாக எழுதி சென்று விடலாம்.") அல்ல என்று. இலகுவாக ஏன் நீங்களே ஒரு ராஜா பதிவு எழுதக்கூடாது விமல்? கட்டுரைகளைப் படிக்காமலே பின்னூட்டம் போடும் நீங்கள் இதைச் சொல்ல கொஞ்சமாவது வெட்கப்படவேன்டாமா? உங்களின் நோக்கம் என்னை மற்றும் அமுதவன் இருவரையும் தாக்குவது. அவ்வளவே. அதற்காகவே நீங்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வருகிறீர்கள். இதேபோல எனது தளத்தில் புரளி பேசும் ஒரு நபர் புகுந்தால் நான் "கொஞ்சம் அந்தப் பக்கம் போய் உங்க விளையாட்டை வச்சுக்கங்க" என்று சொல்லிவிடுவேன். ஒருமுறை இதே போல டி சவுந்தர் தளத்தில் விமல் என்னைப் பற்றி எதோ பற்ற வைக்க அவர் (நாகரீகம் தெரிந்தவர்) இந்த குப்பையெல்லாம் இங்கே கொட்டாதீர்கள் என்று பட்டென சொல்லிவிட்டார். பட்டும் இன்னும் தெளியவில்லை. எல்லாம் ராச பாசம்.

    சால்ஸ் எம் எஸ் வி இசையை ரசிப்பதாகச் சொல்வது ஒரு கண்துடைப்பு. அவரால் ஒரு எம் எஸ் வி பாடலைக்கூட உருப்படியாக சொல்லத் தெரியவில்லை. இசை ராட்சஷன் என்ற தலைப்பே எத்தனை ஒரு தலை பட்சமானது! பின் அவர் எதற்கு எம் எஸ் வி இசை எனக்குப் பிடிக்கும் என்று டமாரம் அடிக்கவேண்டும்? எப்படியும் வழக்கம்போல ஒரு குட்டைக்குள்தான் படிப்பவர்களை இழுத்துக்கொண்டு வரப்போகிறார் என்று தெரிந்த பின்னரும் இவரது எழுத்தை நடுநிலைமை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

    இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன். அதை நான் மறுத்ததேயில்லை. அவரது பெரும்பான்மைப் பாடல்கள் எதோ போகிற போக்கில் (பேருந்து பயணம், சலூன் காத்திருப்பு போன்று ) ஒரு திடீர் திருப்திக்கு உகந்தவை. கிளாசிக் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள நீங்கள் அறுபதுகளுக்குப் போயாக வேண்டும். ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலை விமல் கேட்டிருப்பாரா என்று தெரியவில்லை. எத்தனை ராக வளைவுகள் அந்தப் பாடலுக்குள் சுகமாக நம்மை அழைத்துச் செல்கின்றன என்ற வியப்பு ஏற்படாமல் இருக்காது.
    ...தொடரும்..

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. இந்த அபத்தமான அக்கப்போரெல்லாம் பத்ரகாளி படத்தைப் பற்றி நான் சொன்னதினால் வந்தது. அது ஒரு மிகச் சிறிய தகவல். அந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகையின் மரணமும் ஒரு காரணம் என்றே சொல்லியிருந்தேன். இல்லை என்று நடந்ததை மறுக்கிறீர்கள். அது வாடிக்கைதான். இதில் அமுதவன் சொன்னதையும் அவர் போனாராம் பார்த்தாராம் அவருக்குத்தான் தெரியுமாம் என்று நாலாந்தர நக்கல் அடிக்கும் பாங்கு வேறு.

    சரி. பத்ரகாளி இளையராஜாவுக்காக ஓடியது என்று நிறுவ முயலும் அதே வேளையில் பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, இது எப்படி இருக்கு போன்ற படங்கள் ஏன் பெட்டிக்குள் போய் முடங்கின? அதிலும் உங்கள் ஆள்தானே இசை அமைத்தார்? அந்தப் படங்கள் வெற்றி பெறாதது குறித்து என்ன சொல்வீர்கள்? வெற்றி பெற்றால் அதற்கு ராஜாதான் காரணம். அப்படி இல்லையா "பாட்டு நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. இயக்குனர் சொதப்பிட்டான்." இதுதானே விமல்தனம்?(வில்லத்தனம் என்று படிக்கவேண்டாம்.)நினைவெல்லாம் நித்யா படத்தின் பாடல்கள் அற்புதமானவை. ஆனால் படம் வந்த சுவடே யாருக்கும் தெரியாது. இதெல்லாம் திரைஉலகின் இயல்புகள். வேடிக்கைப் பேச்சு ஒன்றுக்கும் ஆகாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும்.

    குட்டிப் பிசாசு என்ன எழுதினார் என்று நான் கோடிட்டது நான் மட்டுமே உங்களின் ராஜாவை துவைத்துப் போடவில்லை என்று காட்டத்தான். அதற்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்பது முட்டையை கீழே போட்டால் உடைந்துவிடும் என்பது போன்றது. உடனே கு பி யை அவருக்கு என்ன தெரியும்? என்று குதறும் வகையில் ஆயிரத்தெட்டாவது முறையாக அதே ஆலாபனை. ஞான சூனியங்கள்! இதே கு பி ராஜாவை புகழ்ந்து எழுதியிருந்தால் இதே நேர்மையாளர் விமலின் பார்வை இப்படி இருக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அதற்கான பதில் தெரிந்ததுதானே.

    ஆபாசப் பாடல்களை நடு வீட்டில் பந்தி போட்டு நம்மை உபசரித்தது இளையராஜாதான். விரக இசை விரச இசை ஆபாச இசை முக்கல் முனகல் இசை என பலவித பரிமாணங்களில் இந்த புதிய இசை பாணி விஷத்தைப் பாய்ச்சியது. இதற்காகவே இருந்த பல நாலாந்தர ரசிகர்கள் இம்மாதிரியான பாடல்களை விரும்பியதால் இந்தச் சாக்கடைகள் சங்கீதமாகிவிடுமா?

    எம் எஸ் வி செய்தார் அவர் இது போல பாடல் அமைக்கவில்லையா என்ற கேள்விகள் இன்னொருவனின் முதுக்குப் பின் ஒளிந்துகொள்ளும் கோழைத்தனம். இதழே இதழே தேன் வேண்டும் பாடல் மக்களின் மனதில் இடம் பிடித்த கிளாசிக் பாடலா? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எம் ஜி ஆர் ரசிகர்களே அந்தப் பாடலை விரும்பவில்லை. அந்தப் பாடலை நான் நியாயப் படுத்தியோ அதிலுள்ள சிறப்புகளை விவரித்தோ எங்காவது எழுதியிருந்தால் உங்களின் வாதம் ஒரு நேர்மையானது என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் எம் எஸ் வி இதுபோன்று ஒரு நரகல் பாணியை தமிழில் ஏற்படுத்தவில்லை. அதைச் செய்தது உங்களின் பெருமைக்குரிய இளையராஜா. உங்களால் இரண்டு மூன்று பாடல்களை மட்டும்தான் இங்கே கொண்டுவர முடியும். நான் சுட்டிக்காட்ட ஏகப்பட்ட கருமாந்திரங்கள் இளையராஜாவின் இசையில் பாடல் என்ற போர்வையில் இருக்கின்றன. எடுத்துவிட்டால் அது ஒரு தேவையான அம்சம் என்று பின் வாங்குவதைத் தவிர உங்களால் வேறொன்றும் புதிதாகச் சொல்லமுடியாது. எனவே நீங்களாகவே காலில் கல்லைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதிக்கவேண்டாம்.

    ......தொடரும்.........

    ReplyDelete
  42. சால்ஸ். தங்கள் பதிவில் காரிகனின் பின்னூட்டத்திற்கான பதில் . தன்னை நடுநிலை ரசிகன் என்றும் எல்லாம் அறிந்த அதிமேதாவி என்றும் பிதற்றிக்கொண்டிருப பவர் இளையராஜா ரசிகர்கள் மரமண்டைகள் ,கிணற்றுதவளைகள். மற்றவர்களை நாலாந்திர நக்கல் செய்பவர்கள் என பலவகையான வசைமொழிகளால் வறுத்தெடுக்கிறார். இதில் தான் நாகரிகம் தெரிந்தவர் என்கிறார் . இசைஞானியின் பாடல்கள் எல்லாமே வெற்றியடைந்திருக்கின்றன என்றோ இசைஞானியால் தான் பாடல்கள் வலுப்பெற்றன என்றோ சால்ஸ் தன் பதிவில் எங்கே கூறியுள்ளார் ?இசையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் பாமரனும் கேட்கும் இசையையும் வழங்கியிருக்கிறார் என்றும் தானே பதிவு செய்திருக்கிறார் .தன் அபிமான இசையமைப்பாளர் குறித்த செய்திகளையும் தெரிவித்திருக்கிறார் . இதில் பதிவை முழுதும் படிக்காமல் நாங்கள் கருத்து தெரிவிப்பதாக காரிகன் நையாண்டி செய்கிறார் .இசையமைப்பாளர் இசைக்கும் அத்தனை பாடல்களும் வெற்றிபெற வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ?உங்கள் கணிப்பின்படி எம் எஸ் .வி.யின். அனைத்துப் பாடல்களும் வெற்றியடைந்திருக்கின்றனவா ? சூப்பர் சிங்கரில் இடம்பெற்ற கிளாசிக் பாடல்களில் எம் எஸ் .வி.யின் பாடல்களே பிரபலமானவை என்றும் இசைஞானியின் பாடல்களில் ஜன னி ஜன னி என்ற பாடலைத்தவிர மற்ற பாடல்கள் யாரும் கேட்டிராத ,பிரபலமடையாத பாடல் கள் என்றும் காரிகனுக்கு அமுதவன் ஒத்து ஊதியிருக்கிறார். ... வேதம் நீ,.,ஆடல்கலையே தேவன் தந்தது ,அழகுமலராட ,போன்ற பாடல்கள் யாரும் கேட்டிராத பாடல்களா?முட்டையை சோற்றுக்குள் அமுக்கலாம். முழு பூசணிக்காயை மறைக்க நினைப்பது நியாயமா?..

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. விமல்,

    இப்போதாவது காமெண்ட் ரிமூவ்ட் பை தி ஆதர் மற்றும் அட்மினிஸ்ட்ரேடர் என்பதின் விளக்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனவே மடத்தனமான கேள்விகள் கேட்கவேண்டாம்.

    இப்போது அந்த ஆங்கிலப் பொன்மொழி பற்றி. ஸ்மால் மைன்ட்ஸ் டிஸ்கஸ் பீபிள் என்பதை ஆங்கிலத்திலும் தமிழும் சொல்ல விரும்பியதால் அந்த பின்னூட்டம். அது விமல் என்ற ஒரு "மேதாவிககான" பின்னூட்டம். தவறுதலாக சால்ஸ் அதை தனக்கென நினைத்து என்னை ஆங்கில மோகி என்று பழித்துரைக்கிறார். இளையராஜாவே அப்படிப் பார்த்தால் கவுண்டர் பாய்ன்ட் போன்ற மேல்நாட்டு செவ்வியல் இசையை நகல் எடுத்தவர்தானே?அவரை மேல்நாட்டு மோகி என்று அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வெறும் கர்நாடக இசையை வைத்துக்கொண்டு இங்கே யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்த் திரையின் பாடல்கள் எல்லாமே மேற்கத்திய கலப்பினால் வந்தவைதான். இங்கே கர்நாடக ராகத்தின் துல்லியமான பதிப்பு என்று எதுவுமே கிடையாது. அது எம் எஸ் வி, ஜி ராமநாதன், கே வி எம் ஆகட்டும் உங்களின் இளையராஜா ஆகட்டும். வெறும் ராகங்களை வைத்துக்கொண்டு சபாக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமைகளோடு மட்டுமே ஜல்லியடிக்க முடியும். இசை பற்றி ஏதாவது அரிச்சுவடி அறிந்திருந்தால் உங்களின் கருத்து ஏற்புடையதாக இருக்கும். உங்களுக்கு என்னை திட்டுவதிலேயே கவனம் செல்வதால் இசை பற்றிய புரிதலைப் பற்றிய எந்த சிறிய எண்ணமும் ஒரு சிறு விதையாகக் கூட தோன்றவில்லை.

    எனக்குக் கோபம் வந்ததால் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறேன் என நீங்கள் தப்பிப்பது ஒரு கீழ்த்தரமான நகைச்சுவை. இளையராஜா பாரம் நடத்திய ராஜா சிகாமணிகளின் குகைகுள்ளே சென்று வந்தவன் நான். ஐந்து ஆறு பேர் என்னை சூழ்ந்தபோதும் தனி ஒருவனாக நின்றேன். துப்பிருந்தால் இளையராஜா பற்றி பேசும் அந்த நபர்கள் முதலில் தமிழில் பேசட்டும். என்னை எதிர்க்கட்டும். இளையராஜா பற்றி பேசும் போது எதற்காக ஆங்கிலம்? நீயும் நானும் என்ன இங்கிலாந்திலா இருக்கிறோம்? உங்கள் இளையராஜா தமிழ் மணத்தை பரப்பியவர் என்று கூறு போட்டு விற்கும் அற்பர்களே பின் ஏன் அலட்டலான ஆங்கிலம்? நான் இதுவரை கேட்ட இசையில் பாதி கூட கேட்டிராத நீங்கள் என்னை விமர்சிப்பது வேடிக்கைதான். முடிந்தால் தமிழில் ஒரு வார்த்தை எழுதுங்கள். நலம். அதில் ஒருவர் சொல்கிறார். இனிமேல் இணையத்தில் எந்த பாரத்திலும் நான் பங்கு பெற முடியாதாம். நீங்கள் யார் என்னை தடை செய்ய? இணையம் என்ன உங்கள் வீட்டு தோட்டமா? கோழைகள். இங்கே என்னிடம் வீராப்பு பேசிய நபர் இன்னொரு இடத்தில் எம் எஸ் வி- டி கே ஆர் இசைத்த மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலை சிறப்பித்துப் பேசுகிறார். எதற்கு இந்த இரட்டை முகம்? இசை என்றால் அது இளையராஜா இல்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கும் போது என்னை எதற்கு வீணாக விமர்சனம் செய்கிறீர்கள்? துணிவிருந்தால் உங்கள் இளையராஜாவிடமே சென்று இதைச் சொல்லிப் பாருங்கள். அடுத்த நொடியே அவர் உங்களை வெளியே துரத்திவிடுவார்.

    இளையராஜாவை துதிப்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் அவர் அந்த அரசியலை துவைத்துப் போட்டுவிட்டார். பாவம் ராஜா துதிபாடிகள். விமல் சால்ஸ் அருள் ஜீவா வகையறாக்கள்.

    ReplyDelete
  45. அமுதவன் சார்


    ///இளையராஜா பாடல்கள் என்று பாடப்பட்ட பாடல்களில் ஜனனி ஜனனி ஒன்றைத்தவிர வேறு எந்தப் பாடலாவது யாருக்காவது தெரியுமா? மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களா அவை? ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.
    மக்கள் மத்தியில் நிலைபெறும் பாடல்கள் என்றால் அவை எவை என்கிற புரிதலே உங்களுக்கு இல்லை போலும்.///

    மேலே குறிப்பிட்ட உங்களின் கருத்தில் உண்மை குறைவாக உள்ளது . ஜனனி என்ற பாடல் போக , சலங்கை ஒலியில் ' வேதம் நீ ' , ராகவேந்திராவில் ' ஆடல் கலையே' , காதல் ஓவியத்தில் ' சங்கீத ஜாதி முல்லை ' , சிந்து பைரவியில் ' பாடறியேன் ' , வைதேகி காத்திருந்தாளில் ' அழகு மலர் ஆட ' போன்ற பாடல்கள் லட்சக்கணக்கான மக்களின் மத்தியிலும் மனதிலும் நிலை பெற்ற பாடல்கள் . 'இசைஅரசி ' என்ற ஒரு பாடல் மட்டுமே அதிக பிரபலத்தை அடையவில்லை. ஆனால் அதுவும் நல்லதொரு பாடல். நடுவர்களால் வியந்து போற்றப்பட்ட பாடல்.

    இளையராஜா அவர்கள் முறையாக கர்னாடக இசை பயின்றவர் . அவர் இதுவரை 142 ராகங்களை அடிப்படையாகக் கொண்டு பற்பல பாடல்கள் படைத்தவர்.

    ReplyDelete
  46. ஹலோ காரிகன்

    உஷ்ணமாகி விட்டீர்கள் . காது மூக்கிலிருந்தெல்லாம் புகை வருவது தெரிகிறது ....சரி... சரி... அமைதி . இவ்வளவு சூடாக வேண்டுமா என்ன!? இளையராஜா பாட்டு கேளுங்கள் . கொஞ்சம் சாந்தம் அடைவீர்கள் . ஓ...அதற்கும் கோபம் வருகிறதா...சரி .... வரும் வாரம் சூப்பர் சிங்கர் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான மெல்லிசை மன்னர் வருகிறார். அற்புத பாடல்கள் அரங்கேறும் . ரசியுங்கள், ருசியுங்கள் . எம்.எஸ் .வி அவர்களின் பாடல்களையும் நான் விரும்புகிறவன்தான்! அது கண்துடைப்பு என்பது உங்களின் கற்பனை.

    ReplyDelete
  47. காரிகன்

    இளையராஜா ரசிகர்களை விளிக்கும் உங்கள் வார்த்தைகள் ஞாயமில்லை. நிறைய unparliamentary words பயன்படுத்துகிறீர்கள் . மதியீனர்கள், முட்டாள்கள் , மரமண்டைகள் , வெங்காயங்கள், அரைவேக்காடுகள் , அறிவிலிகள் , முண்டங்கள் போன்ற வார்த்தைகளோடு இன்னும் மறந்து போன வார்த்தைகளும் அடங்கும் . ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள் . ஆரோக்கியமாகவே வாதாடுவோம் .

    ReplyDelete
  48. திரு அமுதவன் அவர்கள் தனது வழமையான ஸ்டைலில் உங்களுக்கு என்ன தெரியும் என்ற பல்லவியை பாடி கச்சேரியை ஆரம்பித்திருக்கிறார்.அவர் சொவது கீழே :

    ஒன்று தெரியுமா? அந்த முன்னோர்களின் பாடல்களெல்லாமே எல்லோருக்கும் தெரிந்த பாடல்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நூற்றுக்கணக்கான வித்வான்களால் ஆயிரக்கணக்கான முறைகள் மேடைகளில் பாடப்பட்டு, வானொலியில் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஆண்டுகள் கடந்து இதயத்திலும் உதடுகளிலும் உட்கார்ந்திருக்கும் பாடல்கள்.........அவையெல்லாம் அந்த அளவு சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்.

    இளையராஜா பாடல்கள் என்று பாடப்பட்ட பாடல்களில் ஜனனி ஜனனி ஒன்றைத்தவிர வேறு எந்தப் பாடலாவது யாருக்காவது தெரியுமா? மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களா அவை? ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.//

    அவருக்கு மட்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியது போல எழுதுகிறார்.நாமும் நிகழ்ச்சியை பார்த்தோம் அல்லவா !

    ஜனனி ஜனனி , பாடறியேன் , இசையரசி , ஆடல் கலையே போன்ற பாடல்கள் பிரபலமானவையே.
    அவர்க்கு தெரிந்தது ஜனனி ஜனனி மட்டுமே என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
    இன்னும் ஒரு புரட்சிகரமான தகவலை அமுதவன் சொல்லியிருக்கின்றார்.அது கீழே :
    /// ...மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நூற்றுக்கணக்கான வித்வான்களால் ஆயிரக்கணக்கான முறைகள் மேடைகளில் பாடப்பட்டு, வானொலியில் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் //
    அந்த பாடல்களை எந்த சபாவில் ,எந்த வித்துவான் பாடினார் என்று சொல்லுவீர்களா அமுதவன் ?
    இன்னுமொரு அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகிறார் அமுதவன்! அது கீழே :
    /// ...ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.///

    இளையராஜா பாடல்களை சாதாரண ஒலிப்பதுவு கூடங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.பார்த்திபன் கனவு பாடல்களைத்தான் தேடி பிடிக்க வேண்டும் என்பது தான் நிதர்சனம் ! பொய்யை பேசினாலும் நம்பக்கூடிய முறையில் பேச வேண்டும் ஐய்யா !!
    காரிகன் ஐய்யா .....இசையறிவுமிக்க எல்லாம் தெரிந்த மேதாவியே .
    pornmusic. என்று ஏதோ பினாத்திநீர்கள்.அதற்க்கு விளக்கம் கேட்டோம் .முதுகுக்குப் பின்னால் ஒளிக்கும் சாமாச்சாரம் எல்லாம் பேசுகிறீர்கள் !

    மேதாவி போல தொடங்கியது நீங்கள் !!

    VIMAL

    ReplyDelete
  49. சால்ஸ்,

    நீங்களும் விமல் பாணியை பின்பற்றவேண்டாம். பள்ளிச் சிறுவர்கள்தாம் மற்றவரை வெறுப்பேற்ற அவருடைய கருத்தோடு மோதாமல் சரி சரி கோபப்படாதே என்று இன்னும் கிண்டி விடுவார்கள். அது ஒரு கீழ்த்தரமான போக்கு. நான் சொல்லியிருக்கும் வாதங்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் நீங்களும் அதையே செய்வது உங்களுக்கும் வேறு பாதைகள் தெரியவில்லை என்பதை காட்டுகிறது.

    பேசாவிட்டால் பயந்து விட்டான். பதில் சொன்னால் கோபம் கொண்டான் என்பது என்ன விவேகமோ? எனக்கு சொல்லும் உங்களின் பொன் போன்ற அறிவுரைகளை உங்கள் நண்பர்கள் விமல் போன்ற ஆட்களுக்கு முதலில் சொல்லுங்கள். இல்லை என்னை விடாது தாக்குவது ஒன்றே உங்களின் நோக்கம் என்றால் நான் என்ன சொல்லியும் பயனில்லை. வணக்கம்.

    ReplyDelete
  50. விமல்,

    porn music பற்றி நான் சொல்வதை விட உங்களின் இளையராஜாவின் இசை சிறப்பாக உங்களுக்கு புரியவைக்கும். ஏதேனும் பாடல்களை கோடிட வேண்டுமா? கேடுகெட்ட அந்தப் பாடல்களை நான் உதாரணம் வேறு காட்டவேண்டுமாக்கும்?

    கண்றாவி படுக்கையறை இசைக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கும் உங்களின் இசையறிவுக்கு ஒரு ஆழ்ந்த அனுதாபம். இளையராஜாவின் ரசிகராக இருப்பதற்கு தேவையான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
  51. காரிகன்
    சவுந்தர் என்னை சொன்னது உணமைதான்.அவரது படைப்புக்களை இன்றும் படிக்கிறன்.அவருடன் வாதம் புரியும் தகுதி எனக்கில்லை.அவர் சொன்னதும் நியாமே !உங்களையும் நன்றாக ,நாகரீகமாக ஓடிப்போ என்று துரத்தியதை மறந்தா போனீர்கள்

    சார்ல்ஸ் எம் எஸ் வீயை ரசிப்பது பொய் என்று அவருக்குள்ளே புகுந்து பார்த்தீர்களா ?

    வசைக்கு காளமேகம் இல்லை இல்லை காரிகன் சித்ரா பற்றிய புதுமையான சொல்லாடல்.வாழ்த்துக்கள்.உங்கள் சொல்லகராதியை ஒழுங்காகத் தொகுக்கும் முயற்ச்சியில் உள்ளேன்.இன்னும் நிறைய சொற்கள் தேவை.குறிப்பாக திரை இசைக்கலைஞர்களை தாங்கள் விழிக்கும் விதம் என்னை நெகிழ வைக்கிறது.

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

    ஏமப் புனையைச் சுடும் - திருக்குறள் -306

    சினமென்னும் தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு அவனை அழிப்பதுடன் அவனுக்குத் துணையாக நின்ற பாதுகாவலரையும் அழிக்கும்

    வள்ளுவனையும் ராஜா ரசிகன் என்று திட்ட வேண்டாம்!

    விமல்

    ReplyDelete
  52. சார்லஸ், நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் உங்கள் தளம் தகித்துச் சூடுபிடித்திருக்கிறது. காரிகன் அவர்களை நீங்களும் உங்கள் நண்பர்களும் அவசியமற்றுச் சீண்டிவிடப்போய் அவர் இங்கே வந்து போடு போடென்று போட்டுத்தள்ளிவிட்டார். இன்னமும் அவர் கேள்விகளும், வாதங்களும் பதில் சொல்லப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன. அவர் வாதங்களுக்கு பதில் சொல்லுவதை விட்டுவிட்டு அவரை ஆங்கிலமோகி என்று பிதற்றலான வாதத்தை ஆரம்பித்தது முதல் தவறு.
    ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பொதுவெளியில் எழுத அல்லது பேச வருகிறவர்கள் ஏதாவது ஒரு துறையிலாவது தேர்ந்த அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அல்லது, பொதுவான பல விஷயங்களிலும் பரிச்சயமுள்ளவர்களாகவாவது இருந்தாகவேண்டும். இங்கே இணையத்தில் இசை பற்றித் தமிழில் எழுதுகிறவர்களில் காரிகன் அளவுக்கு மேற்கத்திய இசையில் பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அந்த அளவுகோள்களின் வழியாகத்தான் இசைகுறித்த எதையும் பார்க்கமுடியும். அவருக்கிருக்கும் மேற்கத்திய இசை பற்றிய பரிச்சயங்கள் அவருக்குப் பெருமைதானே தவிர நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அது அவரைக் கேலியோ கிண்டலோ செய்வதற்குரிய விஷயம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
    நல்ல வேளை, இங்கே நீங்களும் உங்கள் நண்பர்களான அருள்ஜீவா மற்றும் விமல் ஆகியோர் மட்டும் வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இன்னொரு நண்பர் இருந்தாரே பைந்தமிழ் அறிஞர்- என்னப்பெ, வாப்பெ, போப்பெ- என்று பேசிக்கொண்டு...நல்ல வேளை, அவரைக் காணவில்லை.
    \\இளையராஜா அவர்கள் முறையாக கர்னாடக இசை பயின்றவர் . அவர் இதுவரை 142 ராகங்களை அடிப்படையாகக் கொண்டு பற்பல பாடல்கள் படைத்தவர்.\\
    இளையராஜா கர்நாடக இசையைக் 'கற்றவர்தான்'. யாரிடம் கற்றார், எப்போது கற்றார் என்பது உட்படத் தெரியும். அவர் கற்றவர் தானேதவிர அதில் நிபுணத்துவம் பெற்றவரோ, துறைபோகியவரோ அல்ல.
    142 ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைத்தவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். 846 ராகங்களைக் கொண்டு இசையமைத்திருப்பதாக அல்லவா சொல்லிக்கொள்கிறார்கள்..........

    இங்கே அருள்ஜீவாவும், நண்பர் விமலும் என்னை ஒவ்வொரு பின்னூட்டத்திலும் வம்புக்கிழுக்காமல் இருப்பதில்லை. போகட்டும். அதில் அவர்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
    \\சூப்பர் சிங்கரில் இடம்பெற்ற கிளாசிக் பாடல்களில் எம் எஸ் .வி.யின் பாடல்களே பிரபலமானவை என்றும்\\
    நான் இப்படிச் சொல்லியிருக்கிறேனா? ஜி,ராமனாதன், எஸ்விவெங்கட்ராமன், விஸ்வநாதன்-ராம மூர்த்தி, கேவிஎம் பாடல்கள் என்றுதான் சொன்ன ஞாபகம்....... அப்படியே பார்த்தாலும் அங்கு பாடப்பட்ட மற்றவர்களின் பாடல்கள் அளவுக்கு ஜனனி ஜனனி தவிர வேறு இ.ராவின் பாடல்கள் புகழ்பெற்றவை அல்ல.

    \\அந்த பாடல்களை எந்த சபாவில் ,எந்த வித்துவான் பாடினார் என்று சொல்லுவீர்களா அமுதவன் ?\\
    இதை எதற்கு நான் பட்டியல் போட்டுச் சொல்லவேண்டும்? எல்லா சங்கீத மேடைகளிலும் எல்லா வித்துவான்களாலும் பாடப்படும் பாடல்களாகத்தான் எம்எஸ், எம்எல்வி, டிகேபட்டம்மாள் ஆகியோர் பாடல்கள் இருக்கின்றன. விஸ்வநாதன் ராம மூர்த்தி பாடல்களை எல்லா ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் ஐம்பது அறுபது வருடங்களாகப் பாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்....

    \\இளையராஜா பாடல்களை சாதாரண ஒலிப்பதுவு கூடங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.\\

    இவர் என்ன சொல்லவருகிறார் என்பதே புரியவில்லை. காசெட் விற்கிற கடைகளைச் சொல்லுகிறார் என்பதாகப் புரிந்துகொள்ளட்டுமா?

    \\வள்ளுவனையும் ராஜா ரசிகன் என்று திட்ட வேண்டாம்!\\
    எதற்காக இப்படியொரு கறுப்பு ஜோக் விமல்? தயவுசெய்து வள்ளுவரை எல்லாம் விட்டுவிடுங்கள். அவரை எதற்காக 'ராஜா ரசிகன்' என்று சொல்லப்போகிறார்கள்?
    உலக மேதையாக இருப்பவர் எல்லாம் ராஜா ரசிகராக இருக்கமுடியுமா என்ன?

    ReplyDelete
  53. திரு அமுதவன் அவர்களே

    எம்எஸ், எம்எல்வி, டிகேபட்டம்மாள் ஆகியோர் பாடல்கள் சபைகளில் பாடுவதைப் பற்றியா கூறினீர்கள்! ஓகே ..நல்லது.

    நான் நினைத்தேன் நீங்கள் எம் எஸ் வீ , கே வீ எம் , பாடலைக் குறிப்பிடுகின்றீர்கள் என்று.பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டதால் வந்த விளைவு அது. முன்னோர்கள் என்று விழிப்புக்குள் பொதுவாக எம் எஸ் வீ , கே வீ எம் , ராமநாதன் என்று பேசுவதால் வந்தது.விட்டால் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கு போவீர்கள் போலே !!
    1940,1950 ,கலீல் வந்த படங்கள் பெரும்பாலும் புராண இதிகாச , மன்னர் கதைகள் என்பதால் பாடல்கள் கர்நாடகம் சார்ந்து தான் இருந்தது இளையராஜா அந்தக் காலத்தில் இசையமைத்திருந்தால் அப்படித்தான் இசைத்திருப்பார்.

    அதற்க்கான திறமையும் தகுதியும் கொண்டவர் தான். நீங்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சியில் தாளவாத்தியக் கலைஞர் விக்கு விநாயக ராம் இளையராஜா அமைத்த தாள நுட்பத்தை வியந்து பார்ட்டியத்தை நீங்க கவனிக்க வில்லையா ?

    திரும்பவும் புதிய அறியாமையை கக்கியுள்ளீர்கள் அமுதவன் அவர்களே !!

    //... அவர் கற்றவர் தானேதவிர அதில் நிபுணத்துவம் பெற்றவரோ, துறைபோகியவரோ அல்ல///

    இது நீங்கள் சுய புத்தியில் தானே எழுதினீர்கள் ? நீங்கள் கருதும் "துறைபோகியவர் " என்பதன் அர்த்தம் என்னவோ ? ஒப்பிப்பவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ...?
    துறைபோகாமலா ராகம் கண்டு பிடித்தார் ...?

    காரிகனை புகழ் பாடியுள்ளீர்கள் ....நல்ல விஷயம்.
    //..தமிழில் எழுதுகிறவர்களில் காரிகன் அளவுக்கு மேற்கத்திய இசையில் பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.//

    அவரை அங்கேயே நிற்க சொல்லுங்கள்.தேவை என்றால் ஜெர்மனையும் எழுத சொல்லுங்கள்.தமிழ் பாடல்கள் பற்றி நமக்கு கதை விட வேண்டாம் என்று சொன்னால் புண்ணியம்.



    porn music பற்றி புரளி கிளப்பியது காரிகன் தான் .ராஜாவுக்கு முன்னையவர் செய்யவில்லையா என்று கேட்டால் கணக்கு போட்டு காட்டுகிறார்.தனது முன்னோர்கள் காட்டிய வழியில் தான் செல்கிறார் ராஜா !!![ அவர்களையும் தாண்டியது வேறு கதை ]

    ராஜாவும் ,முன்னையவர்களும் படத்துக்குத் தான் இசையமைக்கிறார்கள்!! சபா கச்சேரி அல்ல !


    எதை எடுத்தாலும் புரட்டுவதும் , திசை திருப்புவதும் தான் அவர் ஸ்டைல்.
    சினிமா இசைக்கலைஞர்களை அவர் அடைமொழியுடன் அழைப்பது நன்றாக இருக்கிறது.

    இந்த லட்சணத்தில் நாகரீகம் பற்றி புலம்பல் வேறு !!மன உளைச்சல் என்றால்றாஜாவின் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேளுங்கள்.

    உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்ணத்தை விட்டுத் தொலையுங்கள் !

    விமல்

    ReplyDelete
  54. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. விமல், ஓடி ஒளிய வேண்டாம். சிலவற்றை சந்திப்போம்.

    திரையிசை ராகங்கள் பகுதி
    காரிகன்
    Posted on 04/03/2013 at 15:43
    திரு டி சவுந்தரின் இசை பற்றிய பதிவுகள் எப்போதுமே வெகு நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கும். இந்த பதிவு கூட தமிழ் திரை இசையின் நாட்டுபுற இசையை பற்றிய அபாரமான பதிவு. இளையராஜாவை பற்றி குறிப்படும் போதுமட்டும் சவுந்தர் உணர்சிவசப்படுவது தவிர மற்ற செய்திகள் உண்மையே. சவுந்தர் இளையராஜாவை ஆராதனை செய்யாமல் இசை பற்றி எழுதுவதாக இருந்தால் அது உண்மையிலேயே வெகு நடுநிலைமையோடு இருக்கும் என்பது என் கருத்து.
    Reply

    kamalan
    Posted on 04/04/2013 at 15:03
    போட்டானே ஒரு போடு …! அவன் கேட்டானே ஒரு கேள்வி …!!
    காரிகன் கச்சிதமையா ..!!!

    திரையிசை ராகங்கள் பகுதி 9.

    விமல்
    Posted on 08/16/2013 at 02:17
    திரு.சுவுந்தர்
    எல்லோரும் வாழ்த்துவது போலவே நானும் தங்களை வாழ்த்துகிறேன்.இப்படியான அருமையான கட்டுரைகளை தரும் உங்களை வாழ்த்துவதை தவிர வேறு வழியில்லை.இங்கே சிலர் இளையராஜா காய்ச்சலில் திரிகிறார்கள்.அவர்களுக்கும் கொஞ்சம் பாடம் புகட்டுங்கள்.
    விமல்
    Reply

    T.சௌந்தர்
    Posted on 08/18/2013 at 02:35
    // ” இங்கே சிலர் இளையராஜா காய்ச்சலில் திரிகிறார்கள்.”// – விமல்
    திரு விமல் அவர்களே ,
    காய்ச்சலில் திரிபவர்கள் பற்றி நான் என்ன சொல்வது.ராகங்களில் நல்ல மருத்துவ குணம் இருப்பது உங்களுக்குத் தெரியும்.
    நான் எழுதியுள்ள ராகங்களை கேட்டால் அவர்கள் “காய்ச்சல் ” தெளிய வாய்ப்புண்டு உங்கள் “பித்தமும் “தெளிய வாய்ப்புண்டு.
    காரிகன் , தொடர்ந்து எனது ஆக்கங்களை வாசிப்பவர்.ஒருவரை ஒருவர் அனாவசியமாக வம்புக்கு இழுக்கும் இடம் அல்ல இது என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
    உங்கள் கச்சேரியை வேறு இடத்தில் நீங்களே நடாத்துங்கள்.
    நன்றி.

    இது சவுந்தர் உங்களுக்கு கொடுத்த சூடு. நான் பகுதி 4இல் சவுந்தருடன் சற்று முரண்பட்டேன். விவாதம் செய்தேன். அவ்வளவே.

    ---!உங்களையும் நன்றாக ,நாகரீகமாக ஓடிப்போ என்று துரத்தியதை மறந்தா போனீர்கள் ---

    அப்படியா ? எங்கே குறிப்பு காட்டவும். சவுந்தர் எழுத்தில் பிடிவாதமாக வரும் இளையராஜா ஆலாபனை என்னை இன்னும் சில நாட்களில் அவருடன் மோத வைத்துவிடும் என்று உணர்ந்ததால் நான் அந்தத் தளத்தில் எனது கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறேன். நீங்கள்தானே சொன்னீர்கள் நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்று?

    நீங்கள் என்னைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன வசைச் சொற்கள் உபயோகித்தீர்கள் என்று நானும் ஒரு சொல்லகராதி தயாரித்துக்கொண்டிருக்கிறேன். என்னைத் திட்டுவதே உங்களின் ஒரே நோக்கம் போல தோன்றுகிறது. உங்களின் மேதாவித்தனமெல்லாம் என்னை வசை பாடுவதிலேயே செலவழிகிறது.

    ---சவுந்தர் என்னை சொன்னது உணமைதான்.அவரது படைப்புக்களை இன்றும் படிக்கிறன்.அவருடன் வாதம் புரியும் தகுதி எனக்கில்லை.அவர் சொன்னதும் நியாமே !---

    விமல் முதலில் ஒழுங்காக தமிழில் எழுதக் கற்றுக்கொண்டு வாருங்கள் வந்து பிதற்றுங்கள். கீழே உள்ள உங்களின் தங்கத் தமிழைப் படித்தால் வள்ளுவனே சினம் கொள்வான்.

    உணமைதான். --உண்மைதான் என்றிருக்க வேண்டும் இல்லையா?
    படிக்கிறன் - இது படிக்கிறேன் என்பதன் துரிதத் தமிழ் போல.
    நியாமே - கண்ராவி. நியாயத்தை இத்தனை அலங்கோலம் செய்யும் உங்களுக்கு தமிழ்ப் பாடல்கள் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை.
    வசைக்கு காளமேகம் இல்லை இல்லை. -ஏனிந்த இரட்டை இல்லை? புரியவில்லை.
    திரை இசைக்கலைஞர்களை தாங்கள் விழிக்கும் விதம் - விளிக்கும் என்று பொதுவாக நாங்கள் சொல்வோம். உங்கள் தமிழ் விழிக்கிறது.

    தமிழைக் கழுத்தறுத்துவிட்டு இந்த லட்சணத்தில் வள்ளுவனை மேற்கோள் காட்டும் அடாவடித்தனம் வேறு. கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இல்லையா? நீங்களெல்லாம் என்ன பெரிய கருத்தை எழுதப் போகிறீர்கள் இந்த அலங்கோலத் தமிழை வைத்துக்கொண்டு? இந்த அவஸ்தை போதாதென்று பித்தம் தெளிய ராஜா பாடல்களைக் கேட்கவேண்டுமாம். அதைக் கேட்டதால்தானே உங்கள் தமிழ் இந்தச் சிரிப்பு சிரிகிறது. இன்னும் கேளுங்கள்-தமிழைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு.

    இதற்கு முன் இன்னொரு வஸ்து என்னப்ப போப்ப கேளுப்ப எழுத்துப்ப என்று திக்கிவிட்டு போனது. ராஜா ரசிகர்களுக்கு தமிழ் ஒழுங்காக வராதுபோல. பாவம். ராசா இசையின் பாதிப்பு. அவர்தான் நல்ல கவிதையை தூர எறிந்துவிட்டு டப்பாங்குத்து கச்சேரி நடத்தியவராயிற்றே? பின் எப்படி நல்ல தமிழ் அங்கு இருக்கும்?

    இதுவரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு பதிலையும் காணோம். ஜெர்மன் பிரெஞ்ச் என்று நக்கல் வேறு. நான் நல்ல பாடல்களை ரசிக்கிறேன். தமிழாகட்டும் ஹிந்தியாகட்டும் ஆங்கிலமாகட்டும். உங்களைப் போன்று ஒரே புளித்துப் போன இசைச் சக்கைகளை ரசிக்கும் மனம் எனக்கில்லை. நாற்றமெடுக்கும் அந்தக் குட்டையிலே குதித்து கும்மாளம் போடுங்கள். கூடவே சில உயிரினங்களும் வரும்.

    ReplyDelete
  58. வாங்க காரிகன்

    வாதங்களில் சூடு இருக்கட்டும் . வார்த்தைகளில் வேண்டாம் . அதைத்தான் குறிப்பிட்டேன். அதனால் உங்களுக்கு நான் அட்வைஸ் செய்த மாதிரி நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள். தூண்டி விடுவது மாதிரியும் நினைக்கலாம். அப்படியில்லை . விமல் , அருள் ஜீவா இருவருக்கே நீங்கள் இவ்வளவு எழுகிறீர்களே ! இன்னும் ராஜா ரசிகர்கள் அதிகம் வந்தால் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறீர்களோ?

    ராஜாவின் முன்னோர்களைப் பற்றி நீங்கள் எடுத்துச் சொல்லும் சங்கதிகளை விட இன்னமொரு மடங்கு சங்கதிகள் இருக்கிறது ராஜாவைப் பற்றி எடுத்துச் சொல்ல! இந்தப் பதிவிலேயே எல்லாவற்றையும் கொட்ட வேண்டாம் என்று பொறுமையாய் இருக்கிறோம் . தொடர்ந்து வாருங்கள் . ராஜாவைப் பற்றி நீங்கள் அவதூறாய் சொல்லச் சொல்ல அத்தனையும் தவறு என்று வாசகர்களுக்குப் புரியட்டும் !

    ReplyDelete
  59. சால்ஸ்,

    எதற்காக இந்த வீண் சமாளிப்பு? என் கேள்விக்கு என்ன பதில்? உங்களுக்கு விமல் போன்றவர்கள் வந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். தெரிந்ததுதான். என்னை குற்றம் சொல்லும் உங்களால் விமல் கூறும் அபத்தங்கள் அநாகரீகங்கள் கண்ணுக்குத் தெரியாதது ராசா பாசம் போலும்.

    --இன்னும் ராஜா ரசிகர்கள் அதிகம் வந்தால் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறீர்களோ?---

    இது என்ன புதுக் கதை? அப்படி யாரும் இங்கே வரப்போவதில்லை. வந்தாலும் பிரச்சினை எனக்கல்ல. அவர்களுக்குத்தான். என் விவாதத்தை எதிர்கொள்ளும் தைரியம் உங்களைப் போன்ற அவர்களுக்கும் இருக்காது என்பது என் எண்ணம். நிறைய பார்த்தாயிற்று. பதிவுகள் புதிதாக எழுதுவதால் உங்களுக்கு இது ஒரு புதிய சங்கதியாகத் தெரியலாம். எனக்கு அப்படியல்ல.

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்ட கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொன்னதில்லை . எப்போதும் சொல்வதுமில்லை. அப்புறம் சிறுபிள்ளை போல எழுத்துப் பிழை சுட்டிக் காட்டி நக்கல் அடிப்பதை நிறுத்துங்கள் . அது கொஞ்சம் அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் எழுதியிருப்பதிலும் எழுத்துப் பிழை உண்டு .

      Delete
  60. அமுதவன் சார்

    காரிகன் மேற்கத்திய இசை அதிகம் கேட்டு வளர்ந்திருக்கிறார் என்பது அவர் பதிவுகளில் நன்கு தெரிகிறது . ஆனால் தமிழிசைக்கு அதையெல்லாம் அளவுகோல்களாக எடுத்துக் கொள்ள முடியாது. மேற்கத்திய இசையை எல்லா இசை அமைப்பாளர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் . அதுவும் தமிழ்த் திரை இசைக்கு ஏற்றார் போல....ஒரு அகத் தூண்டலாக எடுத்துக் கொண்டு இசைத்திருப்பார்கள் . பல இசை வடிவங்கள் அந்தப் பாடல்களில் கலந்திருக்கும் . அதுதானே மெல்லிசை, திரையிசை . சினிமாவில் இசை புகுத்தியதாலேயே நாம் எல்லோரும் இசை கேட்டு வளர்ந்திருக்கிறோம் . திரை இசையை பொறுத்தவரை காரிகனுக்கு எந்த அளவு பரிச்சயம் உள்ளதோ அதே அளவு எனக்கும் விமலுக்கும் இருக்கும் என்பது தெரியாமல் காரிகன் சவால் விடுகிறாரே ! அந்த சவடால் எங்களையும் பேச வைக்காதா?

    நாம் எழுத்துலக நண்பர்கள் . முகமறியா நண்பர்கள் . நம் இசை ரசனைகள் , அனுபவங்கள் எவ்வளவு என்று ஒருவருக்கொருவர் அறியமுடியாது . அதை விடுத்து 'என்னை விட உனக்கு என்ன தெரிந்துவிடும்' என்று காரிகன் அதிகப்படியாக சொல்வது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது . அவர் அதை திருத்திக் கொள்ளவேண்டும் . எழுத்தில் அவர் வன்மையை காட்டட்டும் . சங்கதிகளில் காட்டட்டும் . சொல்லும் செய்திகளில் காட்டட்டும். ஆனால் காட்டம் அல்லவா காட்டுகிறார் . அதனால் அவரைப் போல நாங்களும் மாறுகிறோம் .



    ReplyDelete
  61. \\காரிகன் மேற்கத்திய இசை அதிகம் கேட்டு வளர்ந்திருக்கிறார் என்பது அவர் பதிவுகளில் நன்கு தெரிகிறது . ஆனால் தமிழிசைக்கு அதையெல்லாம் அளவுகோல்களாக எடுத்துக் கொள்ள முடியாது.\\
    சரியாப்போச்சு போங்க. நான் என்ன சொல்லவந்தேன் என்பதே உங்களுக்குப் புரியவில்லையென்றால் என்ன செய்யட்டும்?
    \\ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பொதுவெளியில் எழுத அல்லது பேச வருகிறவர்கள் ஏதாவது ஒரு துறையிலாவது தேர்ந்த அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அல்லது, பொதுவான பல விஷயங்களிலும் பரிச்சயமுள்ளவர்களாகவாவது இருந்தாகவேண்டும். இங்கே இணையத்தில் இசை பற்றித் தமிழில் எழுதுகிறவர்களில் காரிகன் அளவுக்கு மேற்கத்திய இசையில் பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அந்த அளவுகோள்களின் வழியாகத்தான் இசைகுறித்த எதையும் பார்க்கமுடியும். அவருக்கிருக்கும் மேற்கத்திய இசை பற்றிய பரிச்சயங்கள் அவருக்குப் பெருமைதானே தவிர நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அது அவரைக் கேலியோ கிண்டலோ செய்வதற்குரிய விஷயம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். \\
    இதுதான் நான் சொல்லவந்தது. உங்களின் பதில் இதையொட்டி இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. சார்

      நானும் ஆது குறித்துதான் பேசியிருக்கிறேன் . மேற்கத்திய இசை அதிகம் கேட்டதினால் தமிழ்த் திரையிசை பற்றி பேசும் தகுதி அடைந்துவிட்டார் என்பது பொருந்தாது . இளையராஜாவின் இசைத் துணுக்கை கூட புரிந்து கொள்ள தெரியவில்லை . என்ன பெரிய தகுதி?
      ஆங்கில இசையில் காட்டுக் கூச்சல்கள் அதிகம் கேட்டிருப்பார்.

      Delete
  62. காரிகன்

    ஓயாமல் இளையராஜாவை நொட்டை சொல்லி போகிற இடமெல்லாம் குட்டு வாங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கதான் !

    சவுந்தர் என்னை சொன்னது உண்மை தான் ! அவர் உங்கள் சுயரூபம் தெரியாமல் சொல்லியிருக்கிறார்.நீங்க அவருடன் விவாதித்தீர்களா ? நல்ல நகைச்சுவை ! ஆரம்பத்தில் அவரை புகழ்ந்த நீங்கள் அவர் இளையராஜா ராகங்களில் மற்றவர்களை விட அதிகம் பாடல்கள் இசையமைத்திருப்பதை சொன்னதும் தான் கொதிக்க தொடங்கினீர்கள் ,இல்லையா ?

    ராகம் பற்றி அதிகம் தெரியாது என்று சொன்னவர் நீங்கள் , ராகம் தெரிந்தவரிடம் நீங்க என்ன விவாதிப்பீர்கள் ..?அவர் இசை பற்றி ஆழமாக எழுதி வருபவர் .அவரின் பாதிப்பும் உங்கள் ஆக்கங்களில் உள்ளது.அதற்குள் போக வேண்டாம்!

    நீங்கள் மறைத்த சில பின்னூட்டங்களையும் இணைத்துள்ளேன் பாருங்கள்!
    Reply






    காரிகன்

    Posted on 04/03/2013 at 15:43

    திரு டி சவுந்தரின் இசை பற்றிய பதிவுகள் எப்போதுமே வெகு நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கும். இந்த பதிவு கூட தமிழ் திரை இசையின் நாட்டுபுற இசையை பற்றிய அபாரமான பதிவு. இளையராஜாவை பற்றி குறிப்படும் போதுமட்டும் சவுந்தர் உணர்சிவசப்படுவது தவிர மற்ற செய்திகள் உண்மையே. சவுந்தர் இளையராஜாவை ஆராதனை செய்யாமல் இசை பற்றி எழுதுவதாக இருந்தால் அது உண்மையிலேயே வெகு நடுநிலைமையோடு இருக்கும் என்பது என் கருத்து.

    Reply




    kamalan

    Posted on 04/04/2013 at 15:03

    போட்டானே ஒரு போடு …! அவன் கேட்டானே ஒரு கேள்வி …!!
    காரிகன் கச்சிதமையா ..!!!

    Reply




    ஹரீஸ்

    Posted on 04/05/2013 at 10:14

    அந்தோ பரிதாபம் !!

    Reply






    Uma Chelvan

    Posted on 11/03/2013 at 15:19

    Mr.Karigan, Just like sounder, he gets very emotional when he talks about Raja, you get so much of animosity when we talk about Raja I know you for very long time , you always express so much of hate towards Raja. . Take care.

    Reply






    Guna

    Posted on 09/10/2013 at 05:26

    Extensive research article on Isai. Very nice article.

    காரிகன்

    pornmusic என்ற புரளியால் ராஜாவை கேவலப்படுத்தியது நீங்க ! அதைப் போல நீங்க சும்மா சகட்டுமேனிக்கு புகழும் எம் எஸ் வீ செய்யவில்லையா என்றதும் கணக்குப் பாடம் நடத்துகிறீர்கள்.2 பாடலோ 10 பாடலோ எம் எஸ் வீ காலத்தைப் பார்த்தால் அது மிகப் பெரிய விஷயம் ! படத்திற்கு இசையமைப்பவர்கள் அவர்கள் ! காட்சிக்கு ஏற்ப தான் இசையிருக்கும் ! அவர்கள் அல்பம் வெளியிடுபவர்களல்ல .

    40 ,50 கலீல் பக்தி படங்கள் வந்தன,கதைக்குத் தான் இசை.இளையராஜா மட்டும் தவறா ?

    உங்கள் கொதிப்பில் ஒரு துளி தானும் நியாமில்லை,நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்து எழுதப் பழகுங்கள் ! ஆறுவது சினம் !

    உங்கள் பின்னூடங்களை நீங்களே ஆற அமர வாசித்தால் புரியும்.

    இளையராஜா உலக இசையமைப்பாளன்.உலகின் சிறந்த திரையிசையமைப்பாளர்கள் 24 பேரில் ஒருவர்.அவரைத் திட்டி நீங்க மீண்டும் ஒரு "ரசமட்டம் " என நிரூபிக்க வேண்டாம்.



    விமல்

    ReplyDelete
  63. அமுதவன் அவர்களே,

    நன்றி. இது எதற்காக என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்கே புரியும். நீங்கள் என்னதான் நேர்மையாக நாகரீகமாக சில கோட்பாடுகளுக்கு உட்பட்டு கருத்தைச் சொன்னாலும் சால்ஸ் (விமல் போன்றே இவரும் தற்போது இவர் மாறிவிட்டார்.) வகையறாக்களின் வாலை நிமிர்த்த முடியாது. அவர்களுக்கு உண்மைகளை எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் உங்களையும் என்னையும் விடாமல் தாக்குவதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது.

    பத்ரகாளி படம் பெற்ற வெற்றிக்கு அந்த நடிகை திடீரென இறந்தது ஒரு காரணம் என்றேன் நான். விவாதம் துவங்கியது. இளையராஜாவே காரணம் என்றார் சால்ஸ்.அருள் ஜீவா ஒத்து ஊதினார். பின்னர் வந்தார் நமது ராஜா ரசிகர் விமல். அவரும் இதையே சொன்னார். மேற்கொண்டு அமுதவன் காரிகன் என்று நாலாந்திர வசை பாடல்கள் அரங்கேறின.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் சால்ஸ் தன் தளத்தில் காமெண்ட் அதிகம் வருவதால் இந்த கருப்பு விமர்சனங்களை ஒரு வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார் என்று தோன்றுகிறது. அது சரிதான். இப்போதுதான் பதிவுகள் எழுதுகிறார். இதுபோன்ற சூடான பின்னூட்டங்கள் அவருடைய தளத்திற்கு அதிக விளம்பரம் அளிப்பவைதான். அதுதான் அவருக்கு தேவை. ஒரு பதிவுலக வியாபாரி போல தோன்றுகிறார்.

    விமல் சொல்லும் புரளிகள், அறிவற்ற கருத்துக்கள், தனி மனித வசைகள் அவர் பார்வையில் படாதது எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. இளையராஜாவை விமர்சிக்கும் எல்லோருக்கும் இணையத்தில் கிடைக்கும் வரவேற்பு இதுதானே. உண்மைகள் சுடும் என்று சும்மாவா சொன்னார்கள்? இதில் எனக்கு உஷ்ணமாம். வேடிக்கைதான்.இப்படிச் சொல்லியே எனது பதிலளிக்க வேண்டிய நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மேற்கத்திய இசை ஆங்கில மோகி என்று திசை திருப்பி தங்களது மதியீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். ஏனென்றால் இதுவரை எனது கேள்விகள் பதில் சொள்ளப்படமலேயே இருக்கின்றன. அதைப் பற்றி ஒரு வார்த்தையைக் காணோம். மற்ற எல்லா வம்படிகளும் வரிசையாக வந்து நிற்கின்றன.

    இவர்களிடம் பேசிப் பயனில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். தனி மனித தாக்குதலின் மூலம் அதிக பின்னூட்டங்கள் கிடைக்கச் செய்யும் ஒரு மலிவான யுக்தியே இது. நேர்மை இருப்பின் விவாதங்கள் மூலம் எனது கருத்துக்களை எதிர்க்கட்டும். ஆனால் அந்தத் திராணி இவர்களிடம் இல்லை என்பதே உண்மை. இப்போது விமல் அல்லது சால்ஸ் யாராவது பத்ரகாளி படம் பற்றிப் பேசுகிறார்களா என்று பாருங்கள். அது ஒரு துருப்புச் சீட்டு. இப்போது எனது மேற்கத்திய இசை பற்றி நக்கல். அவர்கள் கேட்கவில்லை என்பதால் நான் கேட்கும் இசையை இகழ்வது ஒரு கீழ்த்தரமான அணுகுமுறை. விமல் முதலில் டேபேச்சே மோட் என்று எனது பதிவில் ஆரம்பித்தார். என்னுடைய ஆங்கில இசை குறித்த பதிவுகள் வந்ததும் அதைப் பற்றி பேச அவருக்கு ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை. சால்ஸ், விமல், அப்பறம் அந்த வாப்ப போப்ப ஜந்துக்களை விட நான் அதிக இசை வடிவங்கள் கேட்டவன்.

    ஆங்கில இசை கேட்பவன் எப்படி எம் எஸ் வி என்று பழைய இசை அமைப்பாளர்களை விரும்புகிறான் என்ற எண்ணமே இவர்கள் என்னை விமர்சிப்பதன் மூல காரணம்.

    ReplyDelete
    Replies
    1. காரிகன்

      உங்களின் பதிவு ஒன்றுக்கு 200 பின்னூட்டங்கள் வந்தன . வவ்வால் கூட prophecy சொன்னார் . அதுவும் அதிக பின்னூட்டங்கள் கிடைக்கச் செய்த மலிவான யுக்தியா?

      Delete


  64. Amudhavan

    \\காரிகன் மேற்கத்திய இசை அதிகம் கேட்டு வளர்ந்திருக்கிறார் என்பது அவர் பதிவுகளில் நன்கு தெரிகிறது . ஆனால் தமிழிசைக்கு அதையெல்லாம் அளவுகோல்களாக எடுத்துக் கொள்ள முடியாது.\\
    சரியாப்போச்சு போங்க. நான் என்ன சொல்லவந்தேன் என்பதே உங்களுக்குப் புரியவில்லையென்றால் என்ன செய்யட்டும்?

    அமுதவன் அவர்களே

    அது உங்களுக்கு தான் புரியும் மற்றவர்களுக்கு ஒன்றுமே புரியாது ! அது தானே !
    நீங்களும் காரிகனும் அறிவாளி படத்தில் வரும் தங்கவேலு ,முத்துலட்சுமி பூரி நகைச்சுவையைப் போன்றவர்கள்.அதிமேதாவிகள்!!
    அப்படிதான் தங்கவேலு முத்துலட்சுமியை திட்டுவார். முத்துலட்சிமி எல்லாவற்றிற்கும் " அது தானே தெரியுமே " என்பார்.

    vimal

    ReplyDelete
  65. ஐயா அமுதவன் அவர்களே , ஏதோவொரு செய்தியைப் பற்றி பொது வெளியில் பேச அல்லது எழுத வருகிறவர்கள் ஏதாவதொரு துறையில் தேர்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் அல்லது பொதுவான விஷயங்களில் பரிச்சயம் அடைந்திருக்க வேண்டுமென்பது சரியே .மேற்கூறியவைகளின்படி காரிகன் ஒருவரே இசை நுணுக்கங்கள் தெரிந்தவர் என்றும் இசையறிவு நிரம்பப்பட்டவர் என்றும் மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் கூறுவது ஆரோக்கியமான விவாத த்திற்கு அழகல்லவே .எழுத்துரிமை யாவருக்கும் பொதுவானதே .எல்லாம் தெரிந்த காரிகனுக்கு எழுதும் முறையைக் கற்றுத்தாருங்கள் .வார்த்தைகளால் பிறரை வசைபாடுவதை (மட்டமான வார்த்தைகளால் )தவிர்க்க செய்யுங்கள் . பதிவின் போது சிற்சில எழுத்துப் பிழைகள் வருவது முறையே . இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத இசையறிவு நிரம்பப்பட்டவர் என்றும் தங்களால் வர்ணிக்கப்படும் காரிகன் விமலை தமிழ் கற்று வரச்சொல்கிறார் . இளையராஜா ரசிகர்கள் கிணற்றுத்தவளைகள் என வசைபாடுபவர்கள்,கருத்தோடு மோதுவதை விடுத்து கருத்துரைப்பவர்களை அநாகரிகமான வார்த்தைகளால் காயப்படுத்துதல் என்பதை இனியாவது விட்டொழிக்கச்செய்யுங்கள் . (காரிகனுக்கு அமுதவன் வாக்கே அருள் வாக்கு ) விஸ்வநாதன் ,ராம மூர்த்தி போன்று இவர்கள் இருவர் மட்டுமே இசையறிவு பிம்பங்கள் .

    ReplyDelete
  66. சார்ல்ஸ் அவர்களே
    இப்போது தான் தங்கள் பதிவை வாசித்தேன்.ரசிக்கும் வண்ணம் எளிமையான நடையில் எழுதுவது என்னைக் கவர்ந்துள்ளது.அதற்க்கு முதற்க்கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராஜா சாரின் பாடல்களை பற்றி அதிகம் எழுதப்படுவது பெருமை தருகிறது.ஒவ்வொரு அனுபவமும் அவரது இசை நம்மை எப்படி பாதித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

    சின்னக்கண்ணன் பாடல் எனக்கும் என் பால்ய காலத்தை ஞாபகப்படுத்தும் மறக்க முடியாத பாடல்.தொடர்ந்து அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.ஆவலுடன்.
    நன்றி !


    சுரேன்

    ReplyDelete
  67. வாங்க நரேன்

    தங்கள் வருகைக்கு நன்றி . முதல்முறையாக வந்து பதிவை ரசித்துள்ளீர்கள் . இளையராஜாவின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் நினைவையும் நம்முள் எழுப்பும் . எனக்குள்ளது உங்களுக்கோ உங்களுக்கானது எனக்கோ ஏற்பட்ட அனுபவமாகவும் அமையலாம் . பகிர்வோம். தொடருங்கள்.

    ReplyDelete
  68. மன்னிக்கவும். எனது பெயர் சுரேஷ்

    ReplyDelete
    Replies
    1. காரிகன். தளத்தில் ஒரு பதிவை எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் சென்று பயின்றிருக்க வேண்டுமென சொல்வீர்கள் போல .உங்கள் அகராதியில் இசையறிவு என்பதற்கு என்ன அளவுகோல் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது .நூற்றுக்கணக்கான பாடல்களைக் கேட்பதனால் கிடைத்த அறிவா?,இசைப்பயிற்சியா அல்லது இசையமைப்பாளர்களுடனான தொடர்பா என்பது விளங்கவில்லை . சால்ஸ் தனது தளத்தில் தன் அபிமான இசையமைப்பாளரான இளையராஜாவின் இசை குறித்த செய்திகளை தான் கேட்ட ,படித்த ,அறிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் .இதை எல்லோரும் அப்படியே ஏற்க வேண்டுமென்று எங்கேயும் அவர் சொல்லவில்லை .விரும்பும் ஒன்றை எழுதுவதற்கு உரிமை இருப்பது போலவே யாருக்கும் மறுக்கவும் உரிமையுண்டு .ஆனால் அதுவும் பண்புடையதாக இருக்கவேண்டுமேயொழிய பாழ்பட்டதாய் இருக்கக்கூடாது . குறைகள் சுட்டிக்காட்டப்படலாம் .குத்திக் காட்டுதல் மரபாகாது . காரிகனுக்குத் தான் எவ்வளவு கோபம்!இத்தளத்தில் பின்னூட்டம் எழுதுபவர்கள் தொடங்கி இசையமைப்பாளர் மற்றும் அவரது இசையில் பாடிய பாடகிகளான ஜானகி ,(கீச்குரல்),சித்ரா (சுண்டெலி )என அனைவரையும் கேவலப்படுத்துகிறார் .இச்செயல்(சுவரை நோக்கி வீசும் பந்து தன்னை நோக்கி வரும் என்பதை உணராத )வேதனைக்குரியதே . இசையறிவு நிரம்பி வழிவதாய் நினைத்துப் பெருமிதம் கொள்ளும் காரிகனுக்கு இங்கிதம் தெரியவில்லையே . (கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும் )

      Delete
    2. சுரேன் என்பதை நான் நரேன் என்று தவறாக வாசித்துவிட்டேன் சுரேஷ் . கண்ணாடி போடணும் !

      Delete
  69. காரிகனும் அமுதவனும் எல்லாம் தெரிந்தவர்கள் ?!! இசையை எப்படி ரசிக்கவேண்டும் என்று அவர்கள் பாடம் நடாத்த புறப்பட்டு விடுவார்கள் போல் இருக்கிறது.

    இவர்களின் முட்டாள்த்தனமான ரசனையை நினைத்தால் சிரிப்பு தான் வரும்.ரசமட்டங்கள் !!

    vimal

    ReplyDelete
    Replies
    1. \\இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை.
      எனக்கு இவரின் இசை பிடிக்கிறது என்று ஒருவரைக் கை காண்பிப்பது தவறா? அவர் மற்றவரின் இசையைக் குறைத்துப் பேசினால் அவரைக் “குதறலாம்” ... இல்லாவிடில் அவர் போக்கில் விட்டு விடுவதுதானே சரி. உன்க்குப் பிடிக்குதா ... சரி..சரி... வச்சுக்கோ...என்று விட்டுவிடலாமே!\\

      இது தருமி அவர்களின் கூற்று. இதற்கு பதில் சொல்கிறார் பாருங்கள் விமல். இதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

      \\தனது முன்னோர்கள் காட்டிய வழியில் தான் செல்கிறார் ராஜா !!![ அவர்களையும் தாண்டியது வேறு கதை ]\\
      எப்படித்தாண்டினார், எங்கே தாண்டினார், யாரைத் தாண்டினார், எப்போது தாண்டினார் என்ற கேள்விகளைத்தானே கேட்கிறோம். இது ஒருவேளை காரிகன் பேசும் 'porn music கிற்கான பதில் மட்டுமே' எனில் ஓகே.

      \\1940,1950 ,கலீல் வந்த படங்கள் பெரும்பாலும் புராண இதிகாச , மன்னர் கதைகள் என்பதால் பாடல்கள் கர்நாடகம் சார்ந்து தான் இருந்தது இளையராஜா அந்தக் காலத்தில் இசையமைத்திருந்தால் அப்படித்தான் இசைத்திருப்பார்.\\
      இது நல்ல பதிலாக இருக்கிறது. 80களில் மற்றும் 90 ஆரம்பங்களில் அந்தக் கால இசையமைப்பாளர்களான டி.ஆர்.பாப்பாவோ, எஸ்எம்சுப்பையா நாயுடுவோகூட பிரதானமாக இசையமைத்திருந்தால் இ.ராவைப் போலவோ, அல்லது அவரையும்விடச் சிறப்பாகவோதான் இசையமைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டால் போயிற்று.

      Delete
  70. ஐயா அமுதவன் அவர்களே

    எம் எஸ் வீ இப்போதும் உயிருடன் தானே இருக்கிறார்.யாரவது நல்லிசை தரவேண்டாம் என்று மறுத்தார்களா ?

    1980 , 1990 கலீல் T.R.பாப்பா ,சுப்பையா நாயுடு செத்தா போனார்கள்?உயிருடன் தானே இருந்தார்கள்.ஏன் சங்கர் கணேஷ் இப்போதும் உயிருடன் தானே வாழ்கிறார்.

    ராஜா மட்டும் தன சொந்த செலவிலா படம் எடுத்து இசையமைக்கிறார்? தங்களைப் போல பழைய இசையமைப்பாளர்களை மதிக்கிறேன் தோரணையில் ராஜாவை மட்டம் தட்டுவது போல நான் இதை குறிப்பிடவில்லை.

    1980 கலீல் உயிருடன் இருந்த ராமமூர்த்தி , கோவர்த்தனம் ,சுதர்சனம் , லிங்கப்பா , ராஜேஸ்வரராவ் இன்னும் பலரை யாரும் சீந்தவில்லை என்பதே உண்மை.இன்னும் எத்தனையோ பேர் ராஜாவுக்கு பின்னால் வந்தவர்களுக்கும் இதே கதி நடக்கிறது உங்களுக்கு தெரியாதா ..?

    ஏன் ராஜ மட்டும் தந்து 70 வயதிலும் இசையமைக்கிறார் எனபதை உன்கள் வயது அனுபவத்துடன் நிதானமாக பதில் சொல்லுங்கள் ! கொதிக்க வேண்டாம்.

    ராஜா உலகின் 24 சிறந்த திரை இசையமைப்பாளர்களில் ஒருவர்.அவரது திறன் Isai அறிந்தவர்கள் அறிவார்கள்!

    மீண்டும் வருவேன் !

    விமல்

    ReplyDelete
    Replies
    1. விமல்

      உங்கள் வாதிடும் திறமையும் செய்திகளும் அபாரம் .

      Delete
  71. \\இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை.
    எனக்கு இவரின் இசை பிடிக்கிறது என்று ஒருவரைக் கை காண்பிப்பது தவறா? அவர் மற்றவரின் இசையைக் குறைத்துப் பேசினால் அவரைக் “குதறலாம்” ... இல்லாவிடில் அவர் போக்கில் விட்டு விடுவதுதானே சரி. உன்க்குப் பிடிக்குதா ... சரி..சரி... வச்சுக்கோ...என்று விட்டுவிடலாமே!\\

    இது தருமி அவர்களின் கூற்று.
    என்று ஒன்றும் தெரியாத அப்பிராணி போல ஆரம்பிக்கிறார் அமுதவன்.இங்கே இளைய ராஜா ரசிகர்கள் எழுதும் தளங்களில் புகுந்து " கலகம் " செய்வது பின் ஓட , ஓட குட்டு வாங்குவது நாகரீகம் பேசும் இரண்டு மனிதர்களின் வேடிக்கையான செயல்

    சார்ல்ஸ் எந்த இடத்தில் மற்ற இசையமைப்பாளர்களை குற்றம் சொல்கிறார் என்றால் பதிலில்லை.

    ///எப்படித்தாண்டினார், எங்கே தாண்டினார், யாரைத் தாண்டினார், எப்போது தாண்டினார் என்ற கேள்விகளைத்தானே கேட்கிறோம்./// அமுதவன்


    வெட்கமில்லாமல் குழந்தைப்பிள்ளை போல் கேட்கிறார் !!!

    ராஜா தாண்டியதில் சில ,உங்கள் மூளையில் ஏற்றிக்கொள்ளுங்கள் அமுதவன் ஐய்யா ,

    ராஜாவின் சாதனை :

    எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற்றது

    1976 லிருந்து தொடர்ச்சியாக இசையமைப்பது.

    இளையராஜா ஒருவரே தனி இசை ராஜ்ஜியம் நடாத்தியவர்.அதிகமான படங்களுக்கு இசையமைத்ததுடன் , தொடர்ச்சியாக ஹிட் பாடல்கள் தந்தது.

    ஒரு இசையமைப்பாளன் சினிமா நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டது.

    தொடர்ந்து அவரின் பாடல்கள் ஹிட் ஆனது, அந்த ஹிட்டை அவருடைய பாடல்கள் தான் முறியடித்தது. அவை பற்றி இன்றும் இணையத்தில் பத்திரிகைகளில் , மற்ற ஊடகங்களில் பேசப்படுதல்,

    இந்தியாவில் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் வைத்தது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் தான்! இது முக்கியமான இந்திய சினிமா வரலாறு !


    இசையமைக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளாதது.

    பாடல் எழுதும் ஆற்றல் உள்ளமை.
    இது கொஞ்சமே.

    இதில் எந்த இடத்திர்க்காவது அவருக்கு முன்னைய இசையமைப்பாளர்கள் வருகிறார்களா சொல்லுங்கள் அமுதவன் ஐய்யா !

    இன்று அதிகம் இணையத்தில் அவரது பாடல்களைப் பற்றி பேசப்படுவது.

    இந்த உண்மைகளை இசை ரசிகர்கள் சொன்னால் முன்னையவர்களை மட்டம் தட்டுகிறார்கள் என்று அர்த்தமா ..?

    அவருக்கு முன்னையவர்களைப் பற்றியோ அவரது சமகால இசையமைப்பாளர்களான [சங்கர் கணேஷ் ,கங்கை அமரன் ,சியாம் ,சந்திரபோஸ் , சௌந்தர்யன் , த.ராஜேந்தர் ] பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்.?

    அவர்களுக்கு ராஜா நிதி கொடுத்து எழுத வைக்கிறாரா ..?

    'porn music மியூசிக் என்று கழிசடைத்தனம் பேசியது காரிகன்.ராஜா ரசிகர்கள் எழுதும் கருத்துக்களை எழுதினால் அவர்களைத் திட்ட வேண்டுமே ஒழிய இசைக்கலைஞர்களை திட்ட வேண்டாம் என்று அவருக்கு புத்திமதி புகட்டுங்கள் .

    'porn music " வகையில் நான் சொன்ன எம் எஸ் வீ இசை அட்சங்காதா ..?

    பதிலைக்காணோம்!

    ஜானகி ,(கீச்குரல்),சித்ரா (சுண்டெலி ]இந்த ரேஞ்சில் எழுதுவது எந்த ஊர் நாகரீகம் ,?
    இந்த விதமான அருமையான அடைமொழிகள் வேறு யாருக்காகவாவது வருமா தெரியாது .?

    ஏனென்றால் காரிகன் ஆங்கில மோகி !நாங்கள் ஆங்கில படங்கள் தான் பார்ப்போம் என்பது தங்களை அறிவாளிகள் என்று காட்டும் போலித்தனம் , அந்த காலம் விட்டது என்பதும் சிலருக்கு இன்னும் புரியவில்லை !

    விமல்





    ReplyDelete
  72. \\அமுதவன் மற்றும் காரிகன் இப்போ உங்களுக்குச் சந்தோசமா?
    இவர்களிடம் வாதிடுவது நமக்கு மரியாதை இல்லை.\\
    கண்ணன்
    நன்றி கண்ணன், நான் இவர்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை. விலகிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சார்

      மன்னிக்கணும் . கண்ணனின் வார்த்தைகள் நிராகரிக்கப்பட்டன. நீங்கள் தொடர்ந்து வரவேண்டும்.

      Delete
  73. ஐய்யா அமுதவன் அவர்களே

    முறைகேடாக வார்த்தை பிரயோகங்கள் நடாத்துபவர்களை நிராகரிக்க வேண்டும்.அந்த வகையில் காரிகன் பல இசைக்கலைஞர்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி இகழ்ந்து தள்ளுகிறார்.அதை நீங்களும் நன்றாகக் கவனித்து இருப்பீர்கள்.

    கண்ணன் என்பவரை கண்டிக்கும் அதே வேளை காரிகன் போன்றோரையும் நாம் கண்டிக்கின்றோம்.சாள்ஸ் கண்ணனைக் கண்டித்துவிட்டார்.

    தாங்கள் கேட்ட இளையராஜா " தாண்டிய " விஷயத்தை சொல்லியுள்ளேன் .பதில் இருந்தால் தாருங்கள்.இல்லாவிட்டாலும் பரவாய்இல்லை.


    விமல்

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
  75. ஒரு பின்னூட்டம் ஆரம்பித்தேன்.
    அனுமார் வாலானது.
    தனிப்பதிவானது.

    பார்க்க; http://dharumi.blogspot.in/2014/11/804.html

    ReplyDelete
  76. சார்

    பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன் ....மலைத்தேன் இவருக்கா இசை புரியாது என்று!?

    ReplyDelete
  77. தர்மி சார்

    மிக அருமையாக எளிமையாக விஷயத்தை விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    புரிந்தாலும் புரியாதது போல வேறு புரளியை அவர்கள் கிளப்பாமல் இருந்தால் சரி.

    பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டா போச்சு ?

    அமுதவன் அய்யாவுக்கு நல்ல சாக்கு வாய்த்து விட்டது , தங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படி தான் எஸ்கேப் ஆகிவிடுவார்கள் !

    இல்லை என்றால் ராஜா ரசிகர்களுக்கு இது கூட தெரியவில்லை என்று ஒப்பாரி வைப்பார்கள்.

    ஒருவர் ஓடிவிட்டார் மற்றவராவது வருவாரா பார்ப்போம் .

    விமல்

    ReplyDelete
  78. விமல்

    இறைவன் கிணற்றில் இரண்டு தவளைகளை எப்படிப் படைத்திருக்கின்றான் என்ற எண்ணம் என்னுள்ளில் எழுந்தது.ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.
    எப்படி ராஜா தாண்டினார் என்பதை மண்டையில் ஏறும்படி சொன்னமைக்கு நன்றி.
    அபாரமான வாதத் திறமை உங்களுக்கு.!

    இனிமேல் ராஜா என்ன மற்றவர்களை விட என்ன செய்தார் என்று கேட்கமாட்டார்கள்.

    ஹரி

    ReplyDelete
  79. சால்ஸ்,

    நூறாவது பின்னூட்டம் வர வாழ்த்துக்கள்.

    நான் ஓடிப் போய்விட்டதாக சில குள்ளநரிகள் கூச்சல் போடுகின்றன. இந்த இணையத் தொடர்பு திடீரென விட்டுப்போய் இப்போதுதான் வந்தது. முதலில் தருமி சாருக்கு ஒரு இல்லை இரண்டு பின்னூட்டம் போட்டுவிட்டு நேராக இங்கே வருகிறேன். இனிமேல் இருக்கிறது ஆட்டம்.

    நான் அநாகரீகமாக எழுதுவதாக உங்கள் தரப்பு ஆட்கள் குதிப்பது இருக்கட்டும். சுண்டெலி என்று சொல்வதையே இப்படி எதிர்க்கும் உங்களின் நேர்மை விமல் என்ற கீழ்த்தரமான இசை சூனியம் மட்டரகமாக எழுதிய இந்தப் பின்னூட்டத்திற்கு எந்த எதிர்ப்பையுமே காட்டவில்லையே.

    விமல் சொல்கிறார்; "எம் எஸ் வீ இப்போதும் உயிருடன் தானே இருக்கிறார்.யாரவது நல்லிசை தரவேண்டாம் என்று மறுத்தார்களா ? 1980 , 1990 கலீல் T.R.பாப்பா ,சுப்பையா நாயுடு செத்தா போனார்கள்?உயிருடன் தானே இருந்தார்கள்.ஏன் சங்கர் கணேஷ் இப்போதும் உயிருடன் தானே வாழ்கிறார்.

    1980 கலீல் உயிருடன் இருந்த ராமமூர்த்தி , கோவர்த்தனம் ,சுதர்சனம் , லிங்கப்பா , ராஜேஸ்வரராவ் இன்னும் பலரை யாரும் சீந்தவில்லை என்பதே உண்மை.இன்னும் எத்தனையோ பேர் ராஜாவுக்கு பின்னால் வந்தவர்களுக்கும் இதே கதி நடக்கிறது உங்களுக்கு தெரியாதா ..?---

    என்ன ஒரு பக்குவமான மிகுந்த நாகரீகமான வார்த்தைகள் கொண்ட கருத்து! இதற்கு நீங்கள் கூறிய பதில்-------விமல்
    உங்கள் வாதிடும் திறமையும் செய்திகளும் அபாரம் .------

    இதையே எனது தளத்தில் இளையராஜா பற்றி ஒருவர் எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும்? சாதாரண சுண்டெலிக்கே இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் என்ற ஆசாமி, இந்த வெறிகொண்ட ராஜா ரசிகருக்கு வக்காலத்து வாங்கும் அருள் ஜீவா, ஒத்து ஊதும் ஹரி போன்ற இடைச் செருகல்கள் என்ன குதி குதித்திருக்கும்! அல்லது இதை நான் எ ஆர் ரஹ்மான் வந்தபிறகு என்ன உங்கள் இளையராஜா என்ன செத்தா போய்விட்டார் என்று எழுதியிருந்தால்? (இப்படி எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியை போலத்தான் எனக்கும் ஏற்பட்டது. இதை உணர்த்தவே இந்த பூமராங். இந்த பூமராங் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் ஒரு வகை ஆயுதம். ) இந்நேரம் உங்கள் தளம் என்ன ஆகியிருக்கும்? நானாக இருந்தால் உடனே அந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிட்டு எழுதியவரை எச்சரித்திருப்பேன் . நீங்களோ அவரை பாராட்டுகிறீர்கள். இதுதான் உங்களுக்குத் தெரிந்த பண்பாடு போலும். பழைய இசை அமைப்பாளர்களை இப்படி கேவலமாக இகழும் இந்தப் பண்புதான் நான் அடிக்கடி குறிப்பிடும் ராஜா ரசிகர்களின் நாகரீகம். இந்த லட்சணத்தில் நான் இந்த கருமாந்திரங்களை வசை பாடுவதாக முதலைக் கண்ணீர் வேறு! பக்குவமற்ற இதுபோன்ற கழிசடைக் கருத்துக்களை வைத்துக்கொண்டு உங்கள் தளம் நாறிய காற்றாக மாறாமல் இருந்தால் நலமே.

    -------தொடரும்-------------

    ReplyDelete
  80. விமல் என்ற ராஜா வெறியருக்கு,

    ஆங்கில மோகி என்று என்னை அழைப்பது முட்டாள்தனம். அப்படிப் பார்த்தால் இணையத்தில் நீங்கள் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் இளையராஜா கிடார் வாசிக்க முடியாது. ஏன் மேற்கத்திய கலப்பில் இசையே அமைக்க முடியாது. எல்லாமே மேல்நாட்டு இசைதான். உங்களுக்கு கிடைக்கவில்லை அல்லது புரியவில்லை என்பதால் ஆங்கில இசை கேட்பவனைஎல்லாம் வசை பாடுவது உங்களின் தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறது. நீங்கதானே depeche mode பற்றி எதையோ உளறிவிட்டு பின்னர் என் தளத்திலிருந்து காணாமல் போனவர்? நான் ஆங்கில இசை மட்டுமல்ல பிரெஞ்ச் அரபிய ஸ்பானிஷ் இசை கேட்பவன். இப்போது இன்னும் எகிறுமே? இத்தனை கேட்டுவிட்டு நீங்கள் சிலாக்கிக்கும் இளையராஜாவைக் கேட்டால் அதில் இந்தப் பதிவர்கள் எழுதும் எந்தப் புதுமையும் என் காதுகளுக்கு எட்டவில்லை. மாறாக அவர் எப்படி சாமர்த்தியமாக மேற்கத்திய செவ்வியல் இசையிலிருந்து தன் இசை பாணியை வடிவமைத்துக்கொண்டார் என்ற உண்மைதான் புலப்படுகிறது. அதையும் அவர் வெகு சாமானிய இசையாக மாற்றிவிட்டார்.

    இப்போது உங்களின் அடுத்த பட்டியலுக்கு வருகிறேன். இது சற்று நீண்ட பின்னூட்டம். பொறுமை அவசியம். படித்துவிட்டு கன்னாபின்னாவென சூடேறி வழக்கத்தை விட இன்னும் தப்புத்தப்பாக எதுவும் கிறுக்கவேண்டாம் . தமிழே தகராறு இதில் வீராப்பு பேச்சு! நான் ஆங்கில மோகி, சரி தமிழை இத்தனை நாசப்படுத்தும் நீங்கள் தமிழ் ஆர்வலரோ? போய் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுங்கள்.

    1. ராஜா உலகின் 24 சிறந்த திரை இசையமைப்பாளர்களில் ஒருவர்.அவரது திறன் Isai அறிந்தவர்கள் அறிவார்கள்!

    இதை ராஜா ரசிகர்கள் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் என்பதெல்லாம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது. மேலும் இதை எந்த அமைப்பு தீர்மானிகிறது என்பது குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன. அப்படியானால் இசைக்காக கொடுக்கப்படும் உயரிய விருதான கிராமியை இரண்டு முறை வென்றவர் எ ஆர் ரஹ்மான் இளையராஜாவை விட அதிக உயரத்தில் இருக்கிறார் என்று அர்த்தமாகிறது. எப்படி வசதி விமல்?

    2.ராஜாவின் சாதனை :
    எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற்றது

    இது அவருக்கு மட்டுமல்ல ரஹ்மானுக்கும் நடந்தது. அன்னக்கிளியாவது தமிழ்நாட்டில் மட்டும்தான் பறந்தது. ரோஜா இந்தியா முழுதும் வாசம் வீசியது. மேலும் தான் இசை அமைத்த முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற ஒரே இந்திய இசை அமைப்பாளர் எ ஆர் ரஹ்மான்தான். ஏன் அணிரூத்தின் ஒய் திஸ் கொலவெறி பெற்ற வெற்றி ஒரு தற்போதைய வரலாறு. இதோடு ஒப்பிட்டால் இளையராஜாவின் அன்னக்கிளி புகழ் ரொம்பவும் குறுகியது. மூன்றாம் இடம்.

    3.1976 லிருந்து தொடர்ச்சியாக இசையமைப்பது.

    1952இல் இருந்து 1980களின் இறுதிவரை எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்துக்கொண்டிருந்தார். எப்படி அவரது இசைபாணி மக்களிடம் அவரது அந்திம காலங்களில் புகழ் பெறவில்லையோ அதே போல இளையராஜாவின் வணிக உச்சம் 1995-96 ஆண்டுடன் (சிலர் ரஹ்மான் வந்த 1992 என்று சொல்கிறார்கள்.) முடிவடைந்துவிட்டது. அவரது காலம் காலாவதியாகி ஒரு புதிய தலைமுறையே தோன்றிவிட்டது. இன்னும் இருக்கிறார் என்பதெல்லாம் வெறும் கணக்குக்கு மட்டுமே உதவும் தகவல். It's just a matter of statistics not the matter of people's choice.

    4.இளையராஜா ஒருவரே தனி இசை ராஜ்ஜியம் "நடாத்தியவர்".அதிகமான படங்களுக்கு இசையமைத்ததுடன் , தொடர்ச்சியாக ஹிட் பாடல்கள் தந்தது.

    அதாவது நடத்தியவர் என்று அர்த்தம் கொள்ளவும். உங்களின் முதல் தகவலும் இரண்டாவது தகவலும் முரண்படுகின்றன. எப்படிஎன்றால் இளையராஜா ஒருவரே தனி ராஜ்ஜியம் நடத்தினார் என்றால் அவரது பாடல்கள் மட்டும்தானே தொடர்ச்சியாக ஹிட் ஆக முடியும்? இதில் சிறப்பித்துச் சொல்ல என்ன இருக்கிறது?பத்துபேர் ஓடும் ஓட்டத்தில் முதலில் வருபவனை பாராட்டலாம். எவனையும் ஓட விடாமல் தானே ஓடும் ஒருவனை உச்சி முகர்ந்து பாராட்டுவது கேலிக்குரியது. கடைந்தெடுத்த நகைச்சுவை. முதலில் அவ்வாறான நிலையை நாம் எண்பதுகளில் அடைந்திருந்தோம் என்பதே நமது இசை ரசனையின் வீழ்ச்சி. அது ஒரு ஆரோக்கியமற்ற நிலை. நல்லவேளையாக 92 வந்தது.

    ------------தொடரும்---------------

    ReplyDelete
  81. தொடர்ச்சி இங்கே.. விமல் வியர்க்காமல் படியுங்கள்

    5.ஒரு இசையமைப்பாளன் சினிமா நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டது.

    ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு கிடைத்த கைத்தட்டலை நினைவு கூர்ந்து சொல்லியிருந்தார். இந்தத் தளத்தின் நாயகர் சால்ஸ் தான் எழுதிய முதல் ராட்சஷன் பதிவில் இப்படி எழுதியிருக்கிறார்:"அப்போது மெல்லிசை மன்னரின் பாடல்கள் என்றால் கொள்ளைப்பிரியம். கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்களை வழங்குவதில் அவருக்கு யாரும் நிகரேயில்லை. "பாடல்கள் எட்டு அத்தனையும் தேன் சொட்டு" என்று ஏதாவது ஒரு படத்திற்கு விளம்பரம் கொடுப்பார்கள். உடனே படம் பார்க்க ஓடுவேன். மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் என்று பெயர் போடும் போது எல்லோரோடும் சேர்ந்து நானும் கைதட்டுவேன்." கைத்தட்டல்கள் இளையராஜாவுக்கு முன்பே இசை அமைப்பாளர்களுக்கு கிடைத்துவிட்டது விமல். உண்மைகளைப் புரட்டவேண்டாம். வேண்டுமானால் சினிமா போஸ்டரில் ஒரு இசை அமைப்பாளரின் படத்தை போட்டது என்று இளையராஜாவை சொல்லலாம். அதுகூட அவர் தயாரிப்பாளர்களை நிர்பந்தப் படுத்தியதால் என்றொரு கருத்து இருக்கிறது திரை உலகில். இளையராஜாவின் கட் அவுட்டுக்கும் இதையே சொல்லலாம். ஆடிய ஆட்டமென்ன தேடிய செல்வமென்ன என்ற எம் எஸ் வி- டி கே ஆர் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

    6.தொடர்ந்து அவரின் பாடல்கள் ஹிட் ஆனது, அந்த ஹிட்டை அவருடைய பாடல்கள் தான் முறியடித்தது. அவை பற்றி இன்றும் இணையத்தில் பத்திரிகைகளில் , மற்ற ஊடகங்களில் பேசப்படுதல்,

    இந்தியாவில் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் வைத்தது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் தான்! இது முக்கியமான இந்திய சினிமா வரலாறு !

    தொடர்ந்து ஹிட் அடித்தது குறித்து நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கட்டவுட் கதையும் பேசியாயிற்று.

    7.இசையமைக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளாதது.

    இளையராஜா நோட்ஸ் எழுதுவதில் திறமை கொண்டவர். உதவியாளர்கள் அதனால் தேவையில்லாது போயிருக்கலாம். மேலும் இதை ஒரு சிறப்பாகச் சொல்வது சிறுபிள்ளைத்தனம்.நீ கார்ல வந்த நா பஸ்ல வந்தேன் என்ற அபத்தம். மேலும் இளையராஜாவிடம் பணியாற்றிய பல திறமை வாய்ந்த இசைஞர்கள் பிற்காலங்களில் அவருடன் இல்லை. உதாரணமாக இளைய நிலா பொழிகிறதே பாடலின் கிடார் இசைக்கும் அஞ்சலி பாடல்களின் கிடார் என்று சொல்லிக்கொண்டு வரும் இசைக்கும் இருக்கும் அப்பட்டமான வித்தியாசம்.

    8.பாடல் எழுதும் ஆற்றல் உள்ளமை. இது கொஞ்சமே.

    சரிதான். ஆத்தா என்ன பெத்துப் போட்டா, தேகம் நோவுது பூவு நீவுது என்று கழிசடை கவிதைகளை பாடல் எழுதும் ஆற்றல் என்று விளிக்கும் விமல் என்ற "தமிழ்க் கவிஞரே" உங்களின் ரசனைக்கு புதுசாக ஒரு குண்டை தயாரித்துத்தான் வைக்கவேண்டும். இளையராஜா நன்றாக பாடல் எழுதுவார் என்பது மட்டித்தனமான கருத்து. நல்லவேளை சிறப்பாகப் பாடக்கூடியவர் என்று சொல்லாமல் விட்டதற்கு நன்றி.

    இத்தனையும் இளையராஜாவின் சிறப்புக்களாம். இவரே சொல்லிக்கொள்கிறார். இத்தனை நாள் என்னத்தை ராஜாவின் சிறப்பாக சொல்லலாம் என்று மண்டை காய்ந்து யோசித்து கடைசியில் இந்த கேலிக்கூத்தான பட்டியலை வெளியிட்டு தனது இசையறிவை நமக்கு உணர்த்திவிட்டார். சரிதான். சரக்கு அவ்வளவுதானா? இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன். நானே இதைவிட இளையராஜாவின் சிறப்பை அழகாகச் சொல்வேனே? இதுவே சிறப்பென்றால் மக்களின் மனதில் இன்னும் தீரா நதியாக சலசலக்கும் காவியப் பாடல்களை என்னவென்று சொல்வது? உங்களின் இசை பற்றிய ஞானம் வியப்பளிக்கிறது. நீங்கள் இனிமேலும் பின்னூட்டங்கள் போடும்முன் கொஞ்சமேனும் இசை பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டு வரவும். அதுவரை (விமல் போன்ற சிறுபிள்ளைகள்) கொஞ்சம் தள்ளி விளையாடுங்கள்.

    ------------தொடரும்---------------

    ReplyDelete
  82. சால்ஸ்,

    இது உங்கள் தளத்திற்கு வரும் 100வது பின்னூட்டம். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பேசவேண்டும்.

    என்னை விமர்சித்தால் கைதட்டல். நான் நியாயமாக ஒன்றைச் சொன்னால் வம்படியான முட்டல். தருமி தளத்தில் இரண்டு பின்னூட்டங்கள் போட்டிருக்கிறேன். இதுவரை அவைகளை காணோம். உங்களுக்கு வருண் பதில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது இந்தத் தளத்திற்கு அவசியம் என்பதால் இதோ அது;

    வருண் சொல்கிறார்-----------அமுதவன் சார்

    நீங்கள் சொல்வது முழுக்க உண்மை இல்லை . ராணிச்சந்திரா என்ற நடிகை நடித்துக் கொண்டிருக்கும்போது விபத்தில் இறந்துபோன விஷயம் நானும் அந்த நேரத்தில் அறிந்திருந்ததே! அந்தப் படத்திற்கு நானும் சென்று பார்த்து பயந்து எனக்குக் காய்ச்சல் வந்த கதையெல்லாம் தனி ! இறுதிக் காட்சிகள் பயமுறுத்தும் . ராணிச்சந்திரா அதைவிட பயமுறுத்துவார் . எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது ***

    Amudhavan Sir,

    ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. சார்ல்ஸின் "விதண்டாவாதத் திறமைக்கு" சான்றுனு பார்க்கப்போனால..

    "பத்ரகாளி" உதவுவாள்..

    பத்ரகாளி (ஒரு ப்ளாக் அண்ட் வைட் படம்) வெற்றிக்கு ராணி சந்திரா ஆக்ஸிடெண்டல் மரணம் காரணம் என்பது பச்சைக்குழந்தைக்குக்கூடத் தெரியும். பாவம் சார்ஸ்க்கு என்ற அறியாக் குழந்தைக்குத் தெரியவில்லை. தெரியாதது தவறில்லை. தெரிந்து கொள்ள மறுப்பதுதான் பிரச்சினை. It is hard to prove though. It is just like giving credit to the God for someone's accidental success. Our Charles's God is IR!

    இது போதுமா இன்னும் வேறு எதுவும் வேணுமா?

    ReplyDelete
  83. வாங்க காரிகன்

    வாராமல் போய் விடுவீர்களோ என்று நினைத்தேன் . விட்ட குறை தொட்ட குறை இன்னும் இருக்கிறது. இளையராஜா பற்றி நீங்கள் கூறுவதை நாங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை . நாங்கள் சொல்லுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் நாம் அவரைப் பற்றி பேசிக்கொண்டேதான் இருப்போம் . இப்போதே நிறைய பேசிவிடாமல் கொஞ்சம் மிச்சம் வைப்போம் . நீங்கள் சொன்னது போல் 20 அல்லது 30 பதிவு போனாலும் போகும் . அவ்வளவு செய்திகள் இருக்கிறது .

    வெளி நாட்டு இசையை நானும் கேட்டவன்தான்! எனக்கென்னவோ பெரும்பான்மை பாடல்கள் ஒரே வடிவத்தில் இருப்பது போலவே உள்ளது. அவற்றில் நீங்கள் என்ன வித்தியாசம் கண்டீர்கள் என்று தெரியவில்லை. சோகம், சுகம் ,துக்கம், வெட்கம், பாசம்,பரிவு , காதல், மோதல், நய்யாண்டி, நக்கல், வீரம், தீரம் , பாராட்டு, தாலாட்டு , நீராட்டு, விளையாட்டு , இன்பம், துன்பம் , தாய்மை , தந்தைமை ( இப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா!?) ஒப்பாரி , முளைப்பாரி , விரகம், கரகம் , ஒயிலாட்டம் , மயிலாட்டம் ,கற்பு, நட்பு , விடுதலை , போர் , பயம் , சவால், மிரட்டல் , பக்தி, முக்தி , உல்லாசம், உற்சாகம் , இப்படி எல்லாவற்றுக்கும் பாடல்களை நமது மொழியில்தான் நாம் கேட்டிருக்கிறோம்...கேட்க முடியும் . எல்லா இசை அமைப்பாளர்களும் இத்தனை விசயங்களுக்கும் பாடல்கள் அமைத்திருக்கிறார்கள் . அதில் இசை ஞானியும் ஒருவர்.


    உண்மையைச் சொல்லுங்கள் . நான் மேலே குறிப்பிட்ட அத்தனை விசயங்களிலும் உணர்ச்சிகளிலும் மேற்கத்திய இசை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இவற்றுள் பெரும்பான்மையை இளையராஜா ரசிகர்கள் அவருடைய பாடல்களில் கேட்டிருக்கிறோம் . 500 வருடத்திற்கு முன்னாள் உருவாகி வந்தவன் பாட்டை தூக்கி வைத்து ஆடுகிறீர்கள். 3000 வருடங்களுக்கு முன்னாள் மொழி, இசை இரண்டையும் ஒன்றாய் வளர்த்த நமது தமிழனின் பாட்டை தூக்கி எறிகிறீர்கள் . விமல் உங்களை ஆங்கில மோகி என்று சொன்னதில் என்ன தவறு?






    ReplyDelete
  84. காரிகன்

    ///பத்துபேர் ஓடும் ஓட்டத்தில் முதலில் வருபவனை பாராட்டலாம். எவனையும் ஓட விடாமல் தானே ஓடும் ஒருவனை உச்சி முகர்ந்து பாராட்டுவது கேலிக்குரியது. கடைந்தெடுத்த நகைச்சுவை.///

    80 களில் இளையராஜா மட்டும் ஓடவில்லை . எம்.எஸ்.வி , சங்கர் கணேஷ் , சந்திர போஸ் , பழைய இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஓடினார்கள் . ஓட முடியாமல் ஓய்ந்து போனார்கள் . இளையராஜா முந்தினார். அது கேலிக்குரியதில்லை . நிஜம். உங்களுக்கு கசக்கும் .


    ///சினிமா போஸ்டரில் ஒரு இசை அமைப்பாளரின் படத்தை போட்டது என்று இளையராஜாவை சொல்லலாம். அதுகூட அவர் தயாரிப்பாளர்களை நிர்பந்தப் படுத்தியதால் என்றொரு கருத்து இருக்கிறது திரை உலகில். இளையராஜாவின் கட் அவுட்டுக்கும் இதையே சொல்லலாம்.///

    இதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவை! எம்.ஜி.ஆர் , சிவாஜி, ரஜினிக்கெல்லாம் இப்படிதான் கட்அவுட் வைக்கிறார்களா!?
    மற்ற இசை அமைப்பாளர்களுக்கு ஏன் வைக்கவில்லை?
    நிர்ப்பந்திக்கவில்லையோ ?

    தருமி அவர்களின் தளத்தில் திரு வருண் அவர்கள் நீங்கள் ஒப்பித்ததை மீண்டும் ஒப்பித்திருக்கிறார் . அவ்வளவுதான் ! என்ன புது செய்தி சொன்னார்? அந்தப் படம் 100 நாட்கள் ஓடிய படம் . 100 நாட்களும் செத்துப் போன நடிகைக்காக ஓடியது என்று சொன்னால் உங்களுக்கே அது விசித்திரமாக தோன்றவில்லையா? 100 நாட்கள் படம் ஓடுகிறது என்றால் மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருப்பார்கள் என்று அர்த்தம் . செத்த நடிகைக்காகவா பார்த்தார்கள்? அந்தப் படம் கதை , திரைக்கதைக்காகவும் இசைக்காகவும் 90 சதவீதம் ஓடிய படம் . விபத்தில் மாண்ட நடிகை மேல் ஏற்பட்ட பரிதாபம் 10 சதவீதம் இருக்கலாம் . பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதியது கிடைத்தால் படியுங்கள். நாங்களும் இந்த உலகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வருணுக்கு நான் குழந்தை போல் தெரியலாம் . விஷயம் தெரியா குழந்தை அல்ல!

    ReplyDelete
  85. காரிகன் . (கழிசடைக் கருத்துக்களைப் பதிவதன் மூலம் சால்ஸ அவர்களின் தளம் நாறிய காற்றாக மாறாமல் இருந்தால் நலம் .)என்ன அக்கறை ?பின்னூட்டம் போடுவதற்கு முன் கருமாந்திரங்கள் (அருள் ஜீவா ,விமல் ,ஹரி )இசையறிவு பெற்று வரவேண்டுமாம் . பண்பாடு தெரிந்தவர் ,இசையறிவு நிரம்பப்பட்டவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் காரிகனே சற்று யோசித்துப் பேசுங்கள் .நீண்ட பின்னூட்டமாயிருக்கிறதேயொழிய நேர்மையில்லையே .தங்கள் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்வதில்லை என்று கூறியிருக்கிறீர்கள் . உண்மையில் இசை ஞானியின் அபிமானிகளான எங்களது கேள்விகளுக்கு தாங்களே பதில் அளிக்க மறுத்து ஒதுங்கியிருக்கிறீர்கள் பொய்யை உண்மையாக மாற்ற நினைக்கும் ஒருவன் (தான் சொன்னதையே உரத்த குரலில் மீண்டும் மீண்டும் சொல்வான் )அப்படி த்தான் உங்கள் நிலையும் இருக்கிறது . இசை சார்ந்த கருத்துக்களை வெளியிடுவதாக நினைத்தநினைத்துக்கொண்டு ஏதேதோ புலம்புகிறீர்கள். வாதம் செய்வதாக எண்ணி பண்பற்ற வார்த்தைகளை உபயோகித்து பண்பாடு தெரிந்தவரென பிதற்றுகிறீர்கள் . எல்லோரும் ஏற்கும் ஒன்றை மறுத்தல் . சிலருக்கு விருப்பமான ஒன்று .நீங்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் போலும் . தூங்குபவரை எழுப்பலாம் .தூங்குவது போல் நடிப்பவரை எழுப்பமுடியாது . விவாதம் புரிவோருக்குப் பதிலளிக்கலாம் .வாதம் புரிவோருக்கு என்செய்வது? புரியாதோருக்கு குருவாக இருந்து புரியவைப்பது. புதியகாற்று இதைத்தான் செய்துகொண்டிருக்கிறது . அப்படியிருக்க நாறிய காற்றாக எப்படி மாறும் ?

    ReplyDelete
  86. இசைஞானி ரசிகர்களே

    காரிகன் ஓயாமல் எழுதும் திரிபுகளை வாசித்தீர்களா ?ஏதாவது ஒன்றுக்கு நேராக பதில் சொல்லுகிறாரா பாருங்கள் .

    வேப்பிலைக்காரர் [அமுதவன் ] அடித்த அடியில் காரிகன் சாமி ஆடுகிறார்

    நான் பட்டியலிட்டுக் கேட்டது அமுதவனிடம், பதிலளிப்பது காரிகன் !

    தனது முன்னவர்களை இசைஞானி " தாண்டியதை " சொன்னால், தேவையற்ற வியாக்கியானங்கள் சொல்கிறார் காரிகன்.

    என்னுடைய கேள்வி தாண்டி விட்டாரா இல்லையா என்பதே ! காரிகன் ரஜனி கைதட்டிய கதை சொல்கிறார்.தியட்டரில் கதை தட்டியதை ரஜனி சொன்னாராம்.இருக்கட்டுமே ! கை தட்டியதை பற்றி நான் கேட்கவில்லையே !

    முன்னையவர்களை " தாண்டிய கதை " யை ஏற்க முடியாதவர் , பின்னையவரை கூத்துக்கு அழைக்கிறார்.அதையும் ஆனந்தமாக வரவேற்கிறோம்.அதை பின் ஒரு நாள் தனிக் கூத்தாகவே நடாத்தலாம்.

    அமுதவன் ஸ்டைலில் சொன்னால் " ராஜா சாரின் இசை ஒஸ்கார் விருதுக்கு மேலானது " என்று பின்னையவரே [ ரகுமான் ]சொல்லிவிட்டாரே "

    ரஜனி ஸ்டைலில் சொல்வதானால் " இது எப்படி இருக்கு ?"

    கடைசியாக காரிகன் எழுதிய வசனங்களில் ஒரு சொல் உண்மையும் இல்லை!

    ஆழ்ந்த அனுதாபங்கள் காரிகன் !

    விமல்

    ReplyDelete
  87. சரக்கு அவ்வளவுதானா? இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன். நானே இதைவிட இளையராஜாவின் சிறப்பை அழகாகச் சொல்வேனே? ------காரிகன்

    இது தான் காரிகனின் தனி முத்திரை ! அவருக்குதான் எல்லாம் தெரியும் !

    இதுவே சிறப்பென்றால் மக்களின் மனதில் இன்னும் தீரா நதியாக சலசலக்கும் காவியப் பாடல்களை என்னவென்று சொல்வது? - காரிகன்

    அருமையிலும் அருமை காரிகன் . "நீங்கள் சொன்னால் காவியம் ."


    விமல்

    ReplyDelete
  88. ஜானகி ,(கீச்குரல்),சித்ரா (சுண்டெலி ]இந்த ரேஞ்சில் எழுதுவது எந்த ஊர் நாகரீகம் ,?
    இந்த விதமான அருமையான அடைமொழிகள் வேறு யாருக்காகவாவது வருமா தெரியாது .?

    விமல்,

    உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்களின் குரலை ரசித்த கணங்களில் நான் இதே ஜானகியையும் சித்ராவையும் இப்படியே அழைத்திருந்தால் அதை குற்றமாகச் சொல்லலாம். சரி. நீங்கள் எ ஆர் ரஹ்மானை எவ்வளவு படு மட்டமாக சவுந்தரின் தளத்தில் திட்டி எழுதியிருந்தீர்கள்? இல்லை என்று சொல்ல வேண்டாம். அப்போது எங்கே போனது என்னிடம் காட்டும் இந்த வேகம் வீராப்பு எல்லாம்?

    உங்களுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கில இசை புரியாது என்று தெரிகிறது. எனவே என்னை ஆங்கில மோகி என்று அடைமொழி வைத்து அழைப்பதன் மூலம் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விளம்பரப்படுத்தவேண்டாம். மேலும் இசைக்கு மொழி முக்கியமில்லை என்பது எனது -- உண்மையான இசை விரும்பிகளின் கருத்து. அது ராச பாசங்களுக்கு பொருந்தாது. அதுசரி ரசமட்டம் என்பது ரொம்ப பண்பான சொல்லோ?

    கண்ணன் சொன்னதை நீக்கிவிட்டு நடுநிலை என்று டார்சான் பாணியில் மார்தட்டும் மடத்தனம் வேறு! எம் எஸ் வி செத்தா போனார் என்று நீங்கள் கேட்டதை ரசித்து கைத்தட்டிய மாமனிதரல்லவா சால்ஸ்? பொதுவெளியில் எதை வெளியிட வேண்டும் என்ற சிறிய நாகரீகம் கூட தெரியாத இவர் எம் எஸ் வியை ரசித்தாராம்! இதே பாணியில் உங்களின் ராஜாவை விமர்சிக்க எனக்கு அதிக நேரமாகாது. கொஞ்சம் அடக்கமாகப் பேசவும். அதுசரி, நீங்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கூடவே இன்னும் இரண்டு மூன்று புதிய மட்டைகளும் வந்துசேரும். கொண்டாட்டமாக புரளி பேசுங்கள்.

    இடையில் சுரேன் என்றொரு திடீர் வருகை. அவரை சால்ஸ் நரேன் என்று சொல்ல உடனே சுரேன் இல்லை இல்லை என் பெயர் சுரேஷ் என்று அவரைத் திருத்த படிக்க படு வேடிக்கையாக இருக்கிறது.தன் பெயரைக் கூட சரியாக எழுதத் தெரியாத நபரெல்லாம் இந்த சால்சுக்கு காவடி தூக்குவது இந்தப் பதிவுடன் படிப்பவர்களுக்குக் கிடைக்கும் இலவச சிரிப்புத் துணுக்குகள். முதலில் அதை எழுதியது சுரேனா சுரேஷா என்றே குழப்பம் வருகிறது.

    ஹரி என்று இன்னொரு ஜால்ரா கிணற்றுத் தவளைகள் என்று பேசுகிறது. கொஞ்சம் உள்ளே பார்க்கவும் நீங்கள் இருப்பதுதான் கிணறு. நீங்கள்தான் அந்தத் தவளைகள். இது கூட தெரியாமல் ஏகத்து உணர்ச்சிவசப்படவேண்டாம். --இனிமேல் ராஜா என்ன மற்றவர்களை விட என்ன செய்தார் என்று கேட்கமாட்டார்கள்.----உண்மைதான். ராஜா மற்றவர்களை விட என்ன செய்தார் என்று கேட்கவே மாட்டேன். ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் எனக்குத் தெரியுமே. விமலுக்கு அதே மண்டையில் உறைக்கும் படி பதில் எழுதியிருக்கிறேன். முடிந்தால் அதையும் படிக்கவும். உங்களைப் போன்று எத்தனைப் பூச்சாண்டிகளைப் பார்த்திருக்கிறேன் நான்.

    நான் எழுதுவது வளவள எழுத்து என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு அது அல்ல பிரச்சினை. இதே காவியப் பாடல் என்று இளையராஜாவின் பாடலைக் குறித்து எழுதினால் அப்போது உங்கள் முகம் எங்கு போகும் என்றும் எனக்குத் தெரியும். நான் இப்போதுதான் பழைய பாடல்களைக் கேட்கிறேன் என்ற அடுத்த கண்டுபிடிப்பு. நீங்கள் 50களில் பிறந்து 60களில் தமிழின் பொற்காலப் பாடல்களைக் கேட்டு எழுபதுகளில் எம் எஸ் வி கேட்டு எண்பதுகளில் இளையராஜாவிடம் வந்தவரோ? நானும் எல்லோரையும் போல எழுபதுகளில் வானொலிகளில் எம் எஸ் வி சங்கர் கணேஷ் வி குமார் கே வி மகாதேவன் கேட்டுவிட்டு பிறகு பால்ய விருப்பத்தின்படி இளையராஜாவையும் ரசித்தவன். இப்போது இளையராஜா மற்றொரு நல்ல இசை அமைப்பாளர் என்ற அளவில் என் நினைவுகளில் தங்கியிருக்கிறார்.

    நான் தேடி அலைந்ததுதெல்லாம் ஆங்கில இசைக்காம். இதுவும் நான் எழுதிய பதிவுகளில் கிடைத்த செய்தி. துப்பு கெட்டத் தனமாக இதை சொல்ல வெட்கமாக இல்லை? தமிழ் இசையை நான் குப்பை என்று ஒதுக்கிவிட்டு ஆங்கில இசை கேட்டவனாம். இதோ சொல்கிறார் "இவர் பைத்தியமாய் அலைந்து பாடல் கேட்டதெல்லாம் ஆங்கிலப்பாடல்கள்.தமிழ் பாடல்களை எல்லாம்குப்பை என்று ஒதுக்கியவர்." உண்மைதான். ஆனால் தமிழ்ப் பாடல்கள் எல்லாவற்றையுமல்ல. இளையராஜாவின் பாடல்களை குப்பை என்று ஒதுக்கிவிட்டு சென்றவன். டி ராஜேந்தர், ஷங்கர் கணேஷ், ஏன் ஒரே ஒரு படம் கொடுத்த சிவாஜி ராவ், மனோஜ் கியான், ஷியாம் என இளையராஜாவின் தேய்ந்து போன சக்கை இசை இல்லாத பாடல்களை அப்போதே நன்றாக ரசித்துக்கேட்டவன்.

    இன்னும் பத்து பாய்ன்ட் இளையராஜாவைப் பற்றி தயாரித்துக்கொண்டு வாருங்கள். இன்னும் அதிகமாக விவாதிக்கலாம். ஆனால் கட்டவுட் வைத்தது, ரசிகர் மன்றம் ஆரம்பித்தது, ஐரோப்பா சென்றது போன்றவைகளை எல்லாம் ஒரு சாதனையாக சொல்லவேண்டாம். கடுகுக் சிந்தனை! எலிகள் வேட்டையாடுமா?

    ReplyDelete
  89. வரா விட்டால் ஓடி ஒளிந்துகொண்டான். பதில் சொன்னால் நீ எதற்கு வருகிறாய்? இது என்னப்பா புது கதை? என் எழுத்தின் தீவிரத்தை எதிர்கொள்ள தயங்கும் கோழைத்தனம் இப்படியெல்லாம் பேச வைக்கிறது போலும்.

    எனக்கு அமுதவன் வேப்பிலை அடித்தார். அப்படியா? உங்களுக்கு சால்ஸ் என்ன சாமரம் வீசுகிறாரோ?

    இன்னும் எழுதவேண்டும் நீங்கள். அப்போதுதான் என்னால் இன்னும் உக்கிரமாகப் பேச முடியும். உங்களின் பாய்ண்டுகள் அனைத்தும் invalid. முடிந்தால் நான் சொல்லியிருப்பதை மறுத்துப் பாருங்கள். விவாதத்தை தொடர்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.

    ReplyDelete
  90. //, நீங்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கூடவே இன்னும் இரண்டு மூன்று புதிய மட்டைகளும் வந்துசேரும். கொண்டாட்டமாக புரளி பேசுங்கள்.//

    thanks, kari gun!

    ReplyDelete
    Replies
    1. முதலில் எனக்கு உங்கள் தளத்தில் பதில் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள் தருமி சார், அதன் பின்னர் இந்த மதுரை லந்தையெல்லாம் வைத்துக்கொள்ளலாம். புதிய மட்டைகள் என்று நான் உங்களைக் குறிப்பிடவில்லையே பின்னர் எதற்காக இந்த தேவையில்லாத திடீர் வருகை?

      Delete
  91. காரிகன் கரகத்தைத் தலையில் வைத்து விட்டார் சாமியும் வந்து விட்டது.ஒருவர் பட்டியல் போட்டு
    எப்படி தாண்டினார் ?
    எங்கே தாண்டினார் ?

    என்று கருணாநிதி ஸ்டைலில் கேள்வி கேட்டார்.

    முன்னையவர்களை விட எப்படி தாண்டினார் என்று சொன்னோம்.

    அதற்கு ஒரு சின்ன பீசை எடுத்து விட்டோம்.துள்ளுகிறார் , குதிக்கிறார்.பாருங்கள் இது தான் தன்னை மறந்த நிலை.வேப்படி சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது.அவர் ஆடிய ஆட்டம் அருமை.ஆனால் பித்தலாட்டமாகவே எனக்கு தெரிகிறது.

    ராஜா எதிர்ப்பு குட்டையில் ஊறிய மட்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பவர்.

    துள்ளி குதித்ததில் உண்மையை காண மறுத்துவிட்டார் ஆங்கில இசை விற்பனர்.

    நாகரீகக் கோமாளி உதிர்த்த செம்மொழித் தமிழை அவர் பதிவுகளிலிருந்தும் ,அவரது சொற்சுவை கூட்டும் பின்னூட்டங்களிலிருந்தும் தொகுத்துக் கொண்டிருகின்றேன்.

    எனது கேள்விக்கு ரசமட்டங்களிடமிருந்து , மட்டைகளிடமிருந்து பதில் இன்னமும் வரவில்லை.இப்படி ஐய்யா பெரியவர் அமுதவன் , நாகரீக கோமான் காரிகநிடமும் பல கேள்விகள் நிலுவையில் உள்ளன.

    நேரான பதில் சொல்ல முடியாதவர்,சுற்றி வளைந்து துள்ளி துள்ளி காவடி ஆடுகிறார்.

    ராஜா இசையமைத்த மாரியம்மா மாரியம்மா திரிசூலியம்மா , நீலியம்மா பாடல் கன கச்சிதம்.

    எம் எஸ் வீ தந்த பாடலும் பொருந்துமோ :
    தட்டிக் கேட்க ஆளில்லாடி
    தம்பி தண்டப் பிரசண்டன்


    விமல்

    ReplyDelete
  92. காரிகன்
    நீங்க பதில் சொல்லவில்லை.
    சொன்னது பொழிப்புரை!

    தாண்டியது பற்றி ...
    எனக்குத் தேவை yes. அல்லது No

    ப்ளீஸ்

    விமல்

    ReplyDelete
  93. விமல் ஓடி ஒளியவேண்டாம். தருமி முதற்கொண்டு எத்தனை தமிழ்க் கவிஞர்கள் வந்தாலும் சரி. அவருக்கு என் மீது கோபம் வருவது இயல்பானதே.

    நான் கூறிய பதில்களை எதிர்த்து சொல்ல ஒரு வார்த்தை கூட கிட்டவில்லையா? இது பதிலல்ல என்று சொல்வது வெகு சுலபம். ஏனென்றால் உங்களால் எதுவும் பேச முடியவில்லை. நான் வரமாட்டேன் என்று எண்ணியிருந்தீர்கள். இப்போது உங்கள் பக்கம் அரண்கள் உடைந்துகொண்டிருகின்றன. மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டி உங்கள் இசை ஞானத்தை சிரிப்பாய் சிரிக்கவைத்து விடாதீர்கள்.

    பதில் சொல்ல திராணி இல்லாத ஜென்மங்களுக்கு வீண் முறைப்பு வேறு. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
    (நாய் என்று திட்டவில்லை. இதுவும் நீங்கள் சொன்னதே.)

    ReplyDelete
  94. ஆமாம் விமல், அது என்ன ?

    தட்டிக் கேட்க ஆளில்லாடி
    தம்பி தண்டப் பிரசண்டன் ?

    நீங்கள் சொல்ல வந்த கருத்து இப்படி தண்டமாகப் போய்விட்டதே? அது தண்டப் பிரசண்டன் இல்லையப்பா.. சண்டப் பிரசண்டன்.. தெரியாவிட்டால் அறிந்துகொள்ளவும். வழக்கம் போல தமிழ்த் தகராறு. இந்த லட்சணத்தில் என் பிழைகளை தொகுக்கும் பணியை செய்கிறாராம். ஏதாவது கிட்டும். ஆனால் அதற்கு முன் தமிழ் வார்த்தைகளை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொண்டு வாரும். நீங்களெல்லாம் எந்த மாதிரியான இசைக்கு காவடி தூக்கப் போகிறீர்கள் என்று நனறாகவே தெரிகிறது. முடிந்தால் ஏதாவது தமிழ் ஆசிரியரை நாடவும்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்துப் பிழையையெல்லாம் சுட்டிக் காட்டிப் பேசுவது சின்னபுள்ள தனமா இருக்கு . பண்பாடற்ற செயல் .

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சால்ஸ், உங்கள் நியாயம் எனக்குப் புரிபடவில்லை. எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டுவதே பண்பற்ற செயல் என்கிறீர்கள். நல்லது. வயதான காலத்தில் வாழும் சில பெரியவர்களை அதுவும் தமிழ்த் திரையில் சாதனைகள் செய்தவர்களை பொதுவாக இங்கே எல்லோருக்கும் பரிச்சயமானவர்களை இன்னும் அவர்கள் சாக வில்லையா என்ற அர்த்தத்தில் பேசுவது மட்டும் ஒரு சிறிய தவறா? இதை நீங்கள் உணர்ந்துதான் சொல்கிறீர்களா? உங்களின் கருத்தில் இருக்கும் அற்பத்தனம் அல்லது அபத்தம் உங்கள் மனதுக்கு படவில்லையா? ராஜா ரசிகர் என்பதாலேயே நீங்கள் விமல் போன்றவர்களை கைத்தட்டி தூக்கிவிடுவது ஒரு மோசமான முன்னுதாரணம்.

      Delete
  95. காரிகன்
    நீங்க பதில் சொல்லவில்லை.
    சொன்னது பொழிப்புரை!

    தாண்டியது பற்றி ...
    எனக்குத் தேவை yes. அல்லது No

    ப்ளீஸ்

    விமல்

    ReplyDelete
  96. ---காரிகன்
    நீங்க பதில் சொல்லவில்லை.
    சொன்னது பொழிப்புரை!
    தாண்டியது பற்றி ...
    எனக்குத் தேவை yes. அல்லது No
    ப்ளீஸ்
    விமல்--

    ஏனப்பா விமல் எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆகிவிட்டீர்கள்? பத்துப் பாயிண்ட்கள் சேகரிக்க அதிக நாட்கள் ஆகும்போல தெரிகிறது. பேசவும் எதுவுமில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே சொன்னதையே காப்பி பேஸ்ட் செய்துவிட்டு வேற என்ன செய்யலாம் என்று காத்திருக்கிறீர்கள் போலும். அடப் பாவமே! வேறு ஏதாவது புதிதாக எழுதினால் அதிலும் தண்டப் பிரசண்டன் போல ஏதாவது தண்டம் வந்துவிடும் என்று பயமா?

    ReplyDelete
  97. காரிகன்

    கண்ணன் என்ன எழுதியிருந்தார் என்று தெரியாமலேயே பேசுகிறீர்கள் . உங்களையும் அமுதவன் சாரையும் கேவலப்படுத்தி எழுதி இருந்தார் . அதனால் அதை நீக்கி விட்டேன் . விபரம் புரியாமல் கொதித்துக் கொண்டே இருக்கிறீர்கள் . விமல் எழுதியது ஒன்றும் மோசமில்லை. 'செத்தா போய்விட்டார்?' என்றுதானே கேட்கிறார் . போகவில்லை என்று சொல்லிவிட்டு போகவேண்டியதுதான் . அதுதானே நிஜம். உங்களை பேசியதைவிட மோசமான வார்த்தை இல்லை. சரி...சரி... நாம் இருவரும் அடுத்த பதிவுக்கு போவோம்.

    ReplyDelete
    Replies
    1. தரமற்ற வார்த்தைகளை எழுதிய விமலை சொன்னதை அப்படியே திசை மாற்ற வேண்டாம்.............கண்ணன்

      Delete
    2. விமல் எழுதியது ஒன்றும் மோசமில்லை. 'செத்தா போய்விட்டார்?' என்றுதானே கேட்கிறார் . போகவில்லை என்று சொல்லிவிட்டு போகவேண்டியதுதான் . அதுதானே நிஜம்.

      சால்ஸ்,

      நான் கேட்கிறேன்,ரஹ்மான் வந்தபிறகு இளையராஜா என்ன செத்தா போனார்? ஏன் ரஹ்மானின் வரவுக்குப் பின் அவரது இசை பெரிதாகப் பேசப்படவில்லை? இன்னின்ன படங்களில் இசை அமைத்தார் என்று கணக்கு காட்டவேண்டாம். அதுதான் இன்னும் இருக்கிறாரே? ஏன் அவரால் 80களின் மந்திரத்தை மீட்டுக் கொண்டுவரமுடியவில்லை? அவர் இருக்கிறார் ஆனால் அவரது இசைக்கு சாவு வந்துவிட்டது என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

      Delete
  98. காரிகன்

    குலை நடுங்குதா ..? பதற்றம் தெரிகிறது.பதற வேண்டாம்.நான் கேட்டதற்கு இன்னும் ஒரு நேரான பதில் சொல்லாமல் 1000 மைல் ஓடி சற்றி வளைக்கிறீர் ?

    நான் கேட்டதற்கு 1000 மைல் சுற்றி விளக்கம் சொல்கிறீரே ..? இசைரசமட்டமான நீங்கள் எப்படி பதில் சொல்ல முடியும் !

    குதர்க்க நாயகரே ! உங்கள் வியாக்கியானம் , புளுகுத்தனங்கள் எல்லாம் நமக்கு புதிதல்ல.

    உங்கள் குருநாதர் முன்னையவ்ர்களை எப்படி தாண்டினார் என்று கேட்டார் , நேரான பதில் சொல்லியாயிற்று !

    ஆமா ..? இல்லையா ..? என்பதை மட்டும் சொல்லுமைய்யா ?

    பழையவர்களை பூச்சாண்டி காட்டி தானே உங்கள் பதிவுகளை கப்பலேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள்,,,விதண்டா வாதம் பண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள் !

    முன்னையவர்களைத் தாண்டினார் என்று நேராக பதில் சொல்லியாயிற்று !
    உங்கள் பாசி பிடித்த கருத்துக்கள் எந்த சபையிலும் ஏறாது!

    ஐய்யா காரிகன்
    porn. மியூசிக் புரளிக்கும் பதில்லையே !? அதற்கும் எண்ணிக்கயை தானே சொல்கிறீங்க !

    உங்கள் அசட்டுத்தனத்தை விட்டு நேராக பதில் சொல்லுங்க

    நீங்க எழுதும் மைல் கணக்கான பதிவுகளை ஒன்றும் தெரியாதவர்கள் பாராட்டலாம்.
    ராஜா ரசிகர்களை பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது!
    உங்கள் மட்டமான கருத்துக்களை நமக்கு ஏற்ற வேண்டாம் !

    உங்கள் வாதக் குப்பைகளை உங்களுக்கு குஞ்சம் கட்டிக்கொண்டிருப்பவர்களிடம் கொண்டு போய் கொட்டுங்கள் !

    விமல்










    ReplyDelete
  99. விமல்,

    மறுபடியும் ஆழம் தெரியாமல் காலை விடுகிறீர்கள். சால்ஸ் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நினைத்து வீணாக தீவிர மோதலில் ஈடுபடவேண்டாம்.

    என்ன பெரிய கேள்வியைக் கேட்டுவிட்டதாக இப்படி அளப்புகிரீர்கள்? முதலில் உங்களுக்கு என்ன இசை ஞானம் இருக்கிறது என்பதே சந்தேகம். தமிழை நாசம் செய்யும் நீங்கள் என்ன தகுதியை வைத்துக்கொண்டு இப்படி வாய்ச் சவடால் விடுகிறீர்கள்? என்னுடைய இசை ரசனையின் நூறில் பத்து பங்கு கூட இல்லாத நீங்களெல்லாம் என்னை விமர்சிப்பது ஒரு வேடிக்கையான முரண். சால்ஸ் தமிழ் இசை மட்டுமே கேட்டவர். அவருமே என்னை விமர்சிப்பது வேண்டாத வேலை. நான் என்னுடைய பதிவுகளில் நல்ல இசை கொடுத்த எல்லா தமிழ் இசை அமைப்பாளர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். சால்ஸ் இளையராஜா தவிர வேறு யார் பற்றி எழுதியிருக்கிறார்? இதுபோன்ற இளையராஜா பதிவுகள் நிறைய உண்டு இணையத்தில். இது ஒன்றும் வித்தியாசமானதல்ல.

    விமல் porn இசை பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. இதற்கும் மேல் நான் எழுதினால் அது நன்றாக இருக்காது என்று நிறுத்தியிருக்கிறேன். இளையராஜா தமிழ் இசையை சீரழித்தவர் என்பதை நான் என்றுமே மறுக்கப் போவதில்லை. நீங்கள் அதுபோன்ற கீழ்த்தரமான இசையை விசிலடித்து ரசிக்கும் பண்பாடற்ற கும்பலில் ஓர் அங்கம்.

    முதலில் துப்பு இருந்தால் ஒரு பதிவு எழுதுங்கள். அங்கே நான் வரும் பட்சத்தில் இந்த வீராப்பை காட்டுங்கள். எழுதும் தமிழும் தவறு. கருத்தும் மிக மட்டரகம். என் அளவுக்கு உங்களைப் போன்றவர்களை வைத்துப் பேசுவதே என் தரத்திற்கு இழுக்கு என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு வில்லத்தனம்!?

      Delete
  100. என் எழுத்து எத்தனை பேரை பாதித்திருக்கிறது என்று இணையத்தில் சிலரது எழுத்துக்களை படித்துப் பார்த்தால் தெரியும். இதில் விமல் போன்ற இசை சூனியங்கள் கொண்டாடும் சிலரது எழுத்துக்களும் அடக்கம்.

    ReplyDelete
  101. சால்ஸ்,

    ரொம்ப குதிக்க வேண்டாம். தருமி தளத்தில் நீங்கள் விமல் போன்ற காமெடி பீஸுக்கள் துவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஒரு விசிட் அடிக்கவும்.

    அதுசரி, என்ன செத்தா போய்விட்டார்கள் என்பது ஒரு நாகரீகமான கருத்து என்று நீங்கள் எண்ணுவது உண்மையில் எனக்கு வியப்பளிக்கிறது. அப்படியில்லை என்று சொல்லிவிட்டு போய்விடுங்கள் என்று நீங்கள் அறிவுறுத்துவது அதை விட மடத்தனம். சாவு எல்லோருக்கும் உண்டு. இளையராஜாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நானும் அதைப் போல எழுதட்டுமா? சரி என்று நகர்ந்து போய்க்கொண்டிருப்பீர்களா?

    அதுசரி,

    கண்ணன் எதோ புதிதாக சொல்கிறார். அவருடைய கருத்தை ஏன் அவசரமாக நீக்கினீர்கள் என்று புதிராக இருக்கிறது. விமல் சொல்லாத காட்டுமிராண்டி கருத்தையா அவர் சொல்லியிருக்கப் போகிறார்? இளையராஜாவைப் பாதுகாக்க இப்படி அரைவேக்காட்டுதனமான மூடச் செயலில் ஈடுபடவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. கண்ணன் என்பவர் நீங்களும் அமுதவன் சாரும் நல்ல குடும்பத்தில் பிறக்கவில்லை என்று சொன்னார் . அதனால் அவர் பின்னூட்டத்தை நீக்கினேன் . விமல் ஒன்றும் மோசமாக விமர்சிக்கவில்லை. ஆனால் நீங்கள் அவரை அதிகமாக விமர்சிக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் திமிர்வாதம் அதிகம் இருக்கிறது. ஆங்கில இசை கேட்டதால் பெரிய இசைஞானம் எல்லாம் வந்துவிடாது. தமிழிசை அதனால்தான் உங்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லலாம் . நாங்கள் உங்கள் அளவிற்கு இசை கேட்டவர்கள் இல்லை என்று நீங்களாக கற்பனை செய்ய வேண்டாம்.

      'செத்தா போய்விட்டார்' என்று விமல் ஒருமுறைதான் சொன்னார் . நீங்கள் அதை பலமுறை எடுத்து எதிரொலித்து விட்டீர்கள். சந்தடி சாக்கில் 'இளையராஜா செத்தா போய்விட்டார்' என்று கேள்வியை எழுப்பினால் எப்படி இருக்கும் என்று கேட்டுக் கொண்டே அதையும் இரண்டு முறை பயன்படுத்திவிட்டீர்கள். சந்தோசமா?

      Delete
    2. விவாதத்தின் போக்கை இன்னும் கேவலமான பாதைக்கு நீங்கள் அழைத்துச் செல்வது போலிருக்கிறது. என்னைத் தாக்கிக்கொண்டே இருப்பதில்தான் உங்கள் பதிவுகள் வெற்றிபெறும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள்.

      Delete
  102. sekar29 November 2014 06:40

    சார்லஸ்
    //பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன் ....மலைத்தேன்//
    நீங்கள் தருமிக்கு எழுதிய பின்னுட்டம் தான் இது.
    ............................................................................................
    இதுதான் மூத்த இசையமைப்பாளர்களின் வெற்றி.
    பாகுபாடின்றி அனைவரின் உணர்வுகளில் கலந்துள்ள மெட்டுக்களும் அதன் வரிகளும் என்றும் மனிதர்களுடன் பயணிக்கும்.

    "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ" / "நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே" விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    இது சேகர் என்ற நண்பர் (உங்களுக்கும் தெரிந்தவர்தான்) எனது தளத்தில் சொன்ன கருத்துக்கள். பகடி செய்வதற்கும் பாராடுவதற்கும் கூட உங்களுக்கு எம் எஸ் வி போன்ற பழைய இசை அமைப்பாளர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். சேகர் சொல்வது சரிதான். இந்த அளவுக்கு உங்களின் ராஜா இசை கூட உங்களைப் பாதிக்கவில்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  103. காரிகன் அவர்களே
    ஒரு மூடன் கதை சொன்னால் என் கதை அதுதான் - என்று நீங்கள் பாடும் பாடல் நமக்கு வேண்டாம்.

    எனக்கு வேண்டியது நேரடியான பதில் தான்! உங்கள் வண்டவாளங்கள் எல்லாம் நாம் அறிந்ததே.
    ஏன் வீணான மயிர் பிளக்கும் விவாதங்கள் ..?
    நீங்கள் தானே நாகரீக மனிதர் ! பதிலைத் தாருங்கள் , விலகிக் கொள்கிறேன் .

    பொதுவில் சரியாக தீர்ப்பு சொன்ன தர்மி அவர்களையும் நீங்கள் ராஜா ரசிகன் என்று ஆக்கிவிட்டீர்களே !

    வாழ்த்துக்கள் !

    விமல்

    ReplyDelete
  104. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  105. விமல் சோடி போட்டு பார்க்கலாம் வாங்க வாங்க .

    ReplyDelete
  106. விமல்,

    தரம் தாழ்ந்து பேசும் உங்களை தடுக்க இந்த தளத்தில் யாருமில்லை. சால்ஸ் ஒரு தவறான பாதையில் இந்த விவாதத்தை இட்டுச் செல்வது நன்றாகத் தெரிகிறது. அவர் இதை இனிமேல்தான் புரிந்துகொள்வார். முதல் தவறு மிகவும் அநாகரீகமாக கருத்து (அதை நான் மீண்டும் சொன்னால் சால்ஸ் என் மீதுதான் பாய்வார். நல்ல நியாயம்!) வெளியிட்ட உங்களின் அந்தப் பின்னூட்டத்தை அவர் அனுமதித்திருக்கவே கூடாது. அடுத்து அந்த நரகல் கருத்தை அவரும் கைதட்டி சிறப்பாக எழுதுகிறீர்கள் என்று வாழ்த்தியது இரண்டாவது தவறு. மூன்றாவது இன்னும் தன் தவறை திருத்திக்கொள்ளாமல் இறுமாப்புடன் நடந்து கொள்வது. இது அவர் தளம். அவர் விருப்பம். ஆனால் ஒரு வரைமுறை கிடையாதா? இளையராஜாவை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக நான் பேசுவது எல்லாமே அபத்தமாகிவிடுமா? இது என்ன பயித்தியக்காரத்தனம்.(உடனே இதையும் பார்த்தீர்களா இந்த காரிகன் எப்படி மட்டமாக பேசுகிறான் என்று என்னை கட்டம் கட்டுவார்.)

    விமல், உங்களுக்கு இசைஞானம், நாகரீகம், பண்புடன் பொதுவெளியில் வார்த்தைகளை உபயோகித்தல் போன்ற ஒரு தரமான இணைய வாசிப்பிற்கான நியாயமான வரம்புகள் தெரியவில்லை. மயிர் பிளப்பதைப் பற்றி நீங்கள் தான் பேசியிருக்கிறீர்கள். நாய் வால் என்றதும் நீங்களே. சாவு என்று விளித்ததும் (உங்கள் மொழியில் விழித்ததும் ) நீங்களே. நான் எங்குமே என்னை எல்லாம் தெரிந்த மேதை என்று முட்டாள்தனமாக சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் அப்படியில்லை. நீங்களாகவே என்னைப் பற்றிய ஒரு புனைவான கருத்தை வைத்துகொண்டு (அப்போதுதானே என்னை வசைபாட முடியும்.)தனி மனித தாக்குதலில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருகிறீர்கள். கீழே இருப்பது நீங்கள் போனவருடம் எனது தளத்தில் வீண் வாதம் செய்துவிட்டு ஓடிப் போய் ஒளிந்துகொண்டு புதிய காற்று தளத்தில் என்னைப் பற்றி எழுதியது.

    விமல்3 September 2013 15:13
    திரு சார்ல்ஸ்
    கர்ரிகனுக்கு நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்.இனிஒருவில் சௌந்தர் என்பவர் "காப்பியடித்தல் " சம்பந்தமாக அருமையான தொடர் எழுதியிருக்கின்றார்.எம்.எஸ்.வீ., ரகுமானின் நீண்ட பட்டியல் போட்டுள்ளார்.நான் தற்போது தான் பார்த்தேன்.தொடர் கட்டுரை அது.
    "தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்"
    என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது.
    காரிகனை இந்த முறை விடுவதாக இல்லை.
    நட்புடன் விமல்.
    இந்தப்பதிவை பிரசுரிக்கவேண்டாம்.

    (இதிலும் தமிழ்த் தகராறு.) I have a reason to believe that you are stalking me.

    ReplyDelete
  107. This comment has been removed by the author.

    ReplyDelete
  108. This comment has been removed by the author.

    ReplyDelete
  109. விமல்,

    நான் பதில் கொடுத்தால்தான் விலகிக் கொள்வீரோ? அப்படியானால் இந்நேரம் அதை நீங்கள் செய்திருக்க வேண்டுமே? எனது பதில் உங்களுக்குத் தெரிந்ததுதானே?. இதில் என்ன சப்பைக் கேள்வி? இளையராஜா சாதனை பற்றி இன்னும் பத்து பாயிண்டுகள் கொண்டுவர முடியாத பேடித்தனத்தை சமாளிக்க சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். .விவாதம் செய்யத் தேவையான தகவல்கள் இருந்தால் வாருங்கள். ரசிகர் மன்றம் ஆரம்பித்தது, கல்யாண மண்டபம் கட்டியது, கோவில் கோபுரம் கட்டியது என்று எதையாவது கேனத்தனமாக எடுத்துக்கொண்டு வராதவரை தாராளமாக இன்னும் நூறு பின்னூட்டம் வரை பேசலாம்.

    ReplyDelete
  110. காரிகன்

    வணக்கம்.
    உங்கள் நண்பர் வருண் என்ற உங்கள் சொல் சித்தரையும் களத்தில் இறக்கிவிட்டீர்கள்.நல்லது.
    உங்கள் புல்லாங்குழலை ஊத கண்ணனையும் இறக்கி விட்டுள்ளீர்கள்.

    நீங்கள் எழுத்து இசை அபத்தங்களை , கிணற்றுதவளைத் தனத்தை அவ்வப்போது சுட்டுகின்றேன் .அதுமட்டுமல்ல மோசமான ராஜா வெறுப்பையும், இசைக்கலைஞர்களை நீங்கள் அருவருப்பான அடைமொழி போட்டு அழைக்கும் அறியாமையையும் சேர்ந்தே சுட்டிக் காட்டும் போது ஒரு கட்டுரையாளன் என்ற முறையில் நேர்மையாக பதிலளிக்க முடியாமல் 1000,2000 மைல் சுற்றி வளைக்கிறீர்கள்.!

    பொருளை விட்டு சொற் பிழை பிடித்து விவாதத்தை திருப்பும் உங்களைப் போன்ற "தப்பி ஓடும் " பண்பு என்னிடமில்லை.

    நான் கேட்டதில் கட் அவுட் மட்டும் விஷயம் மட்டும் உங்கள் அறிவுக்கு தட்டியுள்ளது.கட் அவுட் பின்னணி பற்றிய உங்கள் பின்னணி ஆராய்ச்சியை விட்டு விட்டு ராஜாவுக்கு முன்னர் எந்த இசையமைப்பாளருக்கு வைத்தார்கள் என்று சொன்னால் புண்ணியம் கிடைக்கும்.

    அமுதவன் கேட்டது பின்வருமாறு :

    \\தனது முன்னோர்கள் காட்டிய வழியில் தான் செல்கிறார் ராஜா !!![ அவர்களையும் தாண்டியது வேறு கதை ]\\ -விமல்

    எப்படித்தாண்டினார், எங்கே தாண்டினார், யாரைத் தாண்டினார், எப்போது தாண்டினார் என்ற கேள்விகளைத்தானே கேட்கிறோம். இது ஒருவேளை காரிகன் பேசும் 'porn music கிற்கான பதில் மட்டுமே' எனில் ஓகே. அமுதவன்

    நான் ராஜா முன்னையவர்களைத் தாண்டியதை விளக்கமாகச் சொன்னேன் .

    ராஜாவின் சாதனை :

    01 எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற்றது

    02 1976 லிருந்து தொடர்ச்சியாக இசையமைப்பது.

    03 இளையராஜா ஒருவரே தனி இசை ராஜ்ஜியம் நடாத்தியவர்.அதிகமான படங்களுக்கு இசையமைத்ததுடன் , தொடர்ச்சியாக ஹிட் பாடல்கள் தந்தது.

    04 ஒரு இசையமைப்பாளன் சினிமா நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டது.

    05 தொடர்ந்து அவரின் பாடல்கள் ஹிட் ஆனது, அந்த ஹிட்டை அவருடைய பாடல்கள் தான் முறியடித்தது. அவை பற்றி இன்றும் இணையத்தில் பத்திரிகைகளில் , மற்ற ஊடகங்களில் பேசப்படுதல்,

    06 இந்தியாவில் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளருக்கு கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் வைத்தது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் தான்! இது முக்கியமான இந்திய சினிமா வரலாறு !


    07 இசையமைக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளாதது.

    08 பாடல் எழுதும் ஆற்றல் உள்ளமை. தமிழ் திரையில் முக்கியமான கவிஞராக இருந்த வாலி அவர்களுக்கு வெண்பா எழுத கற்று கொடுத்தது.இதை அவரே பாலா மேடைகளில் சொல்லியிருக்கிறார்.


    இதில் எந்த இடத்திர்க்காவது அவருக்கு முன்னைய இசையமைப்பாளர்கள் வருகிறார்களா சொல்லுங்கள் அமுதவன் ஐய்யா !

    அன்பர்கள் கவனிக்க : இங்கே ராஜாவுக்கு முன்னையவர்கள் பற்றி தான் கேள்வி !

    இது இப்படி இருக்க காரிகன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாருங்கள்

    எம் எஸ் வீ க்கு கை தட்டிய கதை சொல்கிறார். நல்ல விஷயம் தானே !

    எம் எஸ் வீ தனித்தா கோலோச்சினார் ? எம் ஜி ஆர் - சிவாஜி விடுவார்களா?
    இளையராஜா கதை தனிக்கதை.அது ஊருக்கே தெரியும் .

    ரோஜா படம் பற்றி உங்கள் வண்டவாளத்தை கிளப்பியுள்ளீர்கள்.அவர் ராஜாவுக்கு பின் வந்தவர் அவரின் கதையை தனித்து ஆடுவோம்.பின்னையவரைப்பற்றி இங்கே யாரும் இப்போது பேசவில்லை.சரிதானே ..

    பொழிப்புரை தராமல் விடை தாரும் என்று கேட்டால் ,உங்கள் அடியாட்கள் புனிதமான வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனரே ! ஆகா ..ஆகா ....! அருமை ..அருமை !

    உங்கள் வார்த்தையில் சொன்னால் பன்னிகள் கும்பலாகத்தான் வரும்.என் வார்த்தையில் சொன்னால் சிங்கம் சிங்கிளாகத் தான் வரும்.

    நீங்கள் விவாதிக்க வாங்க என்கிறீர்கள் ,உங்கள் சிரங்கு வார்த்தை நண்பர்கள் ஏன் பதிலளிக்க வேண்டும் என்கிறார்கள் நான் என்ன செய்யட்டும் ?

    வருண் , நீங்கள் எழுதும் குப்பைகளை பிரிண்ட் எடுத்து ஒரு பானை வெந்நீர் எரித்து அழுக்கு போக குளியுங்கள் .அதன் பின் நல்ல சூப் தருகிறேன்!


    எனது கேள்விக்கான நேரடியான பதில் நிலுவையில் நிற்கிறது காரிகன் !

    முன்னையவர்களை தாண்டினாரா ..இல்லையா ..?ராஜாவுக்கு முன்னர் யாருக்காவது " கட் அவுட் " வைக்கப்பட்டதா ...?[ அது எப்படி ஏன் ,சரி தவறு பற்றி பின்னர் பேசலாம் ]

    vimal

    ReplyDelete
    Replies
    1. விமல் நீங்க எழுதின எழுத்தை பிரிண்ட் எடுத்து வெந்நீர் வைத்து குளித்ததால் வந்த சொற்கள் அவை அதில் உள்ள பிழைக்கு நீங்களே பொறுப்பு .
      ----------------------------------------------------------------------------------------------------------
      வருண்

      Delete
  111. வருண்

    நீங்கள் அழுக்குபோக குளித்தது நல்ல விஷயம் தான்.உங்கள் வாயையும் கழுவிக் கொள்ளுங்கள்.நாற்றம் தாங்க முடியவில்லை.புதிய காற்றை சாக்கடையாக்க வேண்டாம்.

    vimal

    ReplyDelete
    Replies
    1. அந்த நாற்றம் உங்க கீழ் வாயில் இருந்து தான் வருகிறது நன்றாக கழுவி விட்டு வாருங்கள் பிறகு அடுத்தவரை பற்றி பேசலாம்.

      Delete
  112. விமல்,

    வீணாக வருண் பற்றி எதுவும் கிளப்பாதீர்கள். அவர் கொஞ்சம் அதிரடியாகப் பேசுபவர். அப்பறம் இந்தத் தளம் வேறு மாதிரியாக மாறிவிடும். சால்ஸ் அதை விரும்பமாட்டார். உங்களுக்கு ஹரி, செல்வநாயகம், அருள் ஜீவா, நியோ,தருமி போன்றவர்கள் வந்தால் அவர்களாகவே வந்தார்கள். என் கருத்தை ஆதரித்து சிலர் எழுதினால் நான் கூட்டிக்கொண்டு வருகிறேன். பள்ளிச் சிறுவர்கள் இப்படித்தான் பேசிக்கொள்வார்கள். உங்களுக்கு பக்குவம் போதாது என்பது தெரிந்திருந்தாலும் இந்த அளவுக்கா? அடப் பாவி! (டவுசர் போட்ட பயலுக கிட்டயெலாம் பேச வேண்டியதிருக்கு.)

    நிலா காயுது பாடலுக்கு விசிலடிக்கும் சாக்கடை ரசனை கொண்ட நீங்களா அருவருப்பைப் பற்றி பேசுகிறீர்கள்? நான் நேரடியாக விவாதத்தில் இறங்கும் நாகரீகம் அறிந்தவன். தப்புத் தப்பாக எழுதிவிட்டு - இவ்வளவு குதறிய பின்னும் அந்த விஷயத்தில் கொஞ்சமும் திருந்தாமல் இருக்கும் தன்மை இருக்கிறதே அபாரம்!--என்ன சால்ஜாப்பு? உண்மையைத்தானே சொன்னேன்?

    உங்கள் பட்டியல் கடைசியில் இளையராஜாவுக்கு முன்னர் வேறு எந்த இசை அமைப்பாளருக்கு கட்டவுட் வைத்தார்கள் என்ற மிக முக்கியமான கேள்வியில் வந்து நிற்கிறது. வேதனைதான். எனது பதில்: யாருக்கும் வைக்கவில்லை. எனவே இளையராஜாவே மற்ற எல்லோரையும் விட சிறந்தவர் என்று தீர்ப்பு சொல்லிவிடுங்கள். இளையராஜாவின் இசைஞானம் புகழ் எல்லாமே ஆளுயர கட்டவுட்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது இப்போது. படிப்பவர்களே யாரை முட்டாள் என்று தீர்மானிக்கட்டும்.

    முதல் கேள்விக்கு ரஹ்மானை அடையாளம் காட்டியதும் அவர் இவருக்கு பின்னே வந்தவர் என்று சமாளித்தாலும் இளையராஜா ஒருவரே இப்படியான சாதனைகள் செய்தார் என்ற உங்களின் புனைவு நொறுங்கிப் போவதை காணமுடிகிறது. இருந்தும் இதை தவிர மற்ற கேள்விகளுக்கு நான் சொன்ன பதிலை மறுக்க முடியாமல் நீங்கள் திணறுவதையும் பார்க்க முடிகிறது. பரிதாபம்.

    நீங்கள் தேவையில்லாமல் மற்றவர்கள் பற்றி வீண் வார்த்தைகளை விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அநாகரீக கருத்தை வெளியிட்டது நீங்கள்தான். நான் கூட இளையராஜாவை கடுமையாக விமர்சிப்பேனே ஒழிய நீங்கள் பழைய இசை அமைப்பாளர்களை பண்பற்ற முறையில் பேசியது போல பேச மாட்டேன். அந்த எண்ணமே எனக்குத் தோன்றாது. எனவே அவ்வாறான கீழ்த்தரமான உங்களின் கருத்துக்கு உங்களுக்குத் தெரிந்த மொழியில்தானே பதில் வரும்? இதில் எதற்கு வருண் போன்றவர்களை திட்டுகிறீர்கள்?

    ReplyDelete
  113. ///உங்கள் பட்டியல் கடைசியில் இளையராஜாவுக்கு முன்னர் வேறு எந்த இசை அமைப்பாளருக்கு கட்டவுட் வைத்தார்கள் என்ற மிக முக்கியமான கேள்வியில் வந்து நிற்கிறது. வேதனைதான். எனது பதில்: யாருக்கும் வைக்கவில்லை. எனவே இளையராஜாவே மற்ற எல்லோரையும் விட சிறந்தவர் என்று தீர்ப்பு சொல்லிவிடுங்கள்./// காரிகன்

    முந்த வேண்டாம் காரிகன், கட்டவுட் விஷயத்திலும் வெற்றி பெற்றவர் மட்டுமல்ல மற்ற விசயங்களிலும் அவர் தான் என்பதை முழு மனதுடன் ஒத்துக்கொள்ளுங்கள்.அதிலே ஏன் வேண்டாத உள் குத்து !

    முதல் முறையாக உங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டீர்கள் , வாழ்த்துக்கள் !

    மற்ற கேள்விகளுக்கும் மனம் திறந்த பதிலை சொல்லுங்கள், உங்களை நல்லவர் என்று சொன்ன வருணின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

    மற்றப்படி உங்கள் பண்பையும் உத்தமர் வேடத்தையும் ராஜா ரசிகர்கள் அறிவார்கள் !இங்கே அசிங்கமாக பேச தொடங்கியது யார் என்றும் ராஜா ரசிகர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
    அதெல்லாம் அற்ப விஷயங்கள், நீங்க தோல்வியை ஒத்துக் கொண்டீர்களே ! அது தான் இங்கே முக்கியம் :

    விமல்

    ReplyDelete
  114. கட்டவுட் வைத்ததை வைத்துக்கொண்டு இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர் என்று நீங்கள் முடிவு செய்தால் எனக்கு அதில் ஆட்சேபனையே கிடையாது. இன்றைக்கு சிவ கார்திகேயனுக்குக் கூடத்தான் இது நடக்கிறது. நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். எப்படியாவது என்னுடன் விவாதிப்பதை முடிவுக்கு கொண்டுவர உங்களுக்குக் கிடைத்த குறுக்கு வழி இது. ஓடிப்போங்கள். நான் இன்னும் பத்துப் பாயிண்டுகளுக்கு தயாராகவே இருக்கிறேன். நீங்கள் இனிமேல் வரமாட்டீர்கள். இதையே சொல்லிக்கொண்டு தப்பித்துக்கொள்ளும் உங்களின் கோழைத்தனம் உங்களை மீண்டும் என்னுடன் மோத விடாது. முடிந்தால் வாருங்கள்.

    ReplyDelete
  115. The dog needs a bone. I have thrown it. Take it and go away.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாய் வாலை நிமிர்த்தியாச்சோ ,,? ! சொல்லுங்க பாஸ் ! சொல்லுங்க பாஸ் !

      Delete
  116. சார்லஸ் என்னத்தை எழுதிவிட்டார் என்று இத்தனை குழாயடி சண்டை? இது ஒரு மொக்கையான பதிவு. இதுக்கு இத்தனை பின்னூட்டமா? வேற வேலையைப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதானே நானே இதை எதிர் பார்க்கவில்லை அனானி . ஏன் பெயர் சொல்ல தயக்கம் ? இது மொக்கை பதிவு . ஆனால் உங்களையும் வரவழைத்துவிட்டதே ! இன்னும் எழுத நிறைய இருக்கு. தொடர்ந்து வாங்க .

      Delete
  117. குஷ்புவுக்கு கோயில் கட்டிய வெறியர்கள் இருக்கும் வரை உண்மையான திறமைக்கு மரியாதை இல்லை.

    ReplyDelete
  118. காரிகன் அவர்களே

    நான் கேட்டதில் ஒன்றுக்குத்தான் ஒரு பதில் அரைமனதுடன் கூறி ஒத்துக்கொண்டீர்கள்.

    வாழ்த்துக்கள் ! நீங்கள் தானே உண்மையை ஒத்துக்கொள்பவர்.

    ஆயினும் மற்ற கேள்விகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன.

    Pornmusic. இல் எம் எஸ் வீ பாடல்கள் சேரவில்லையா என்பதையும் சொல்லிவிட்டால் நான் போய் விடுகிறேன். நிறைய வேலை இருக்கப்பா ! தயவு செய்து 2 பாடல் தானே என்று 2000 மைல்கல் சுற்ற வைக்க வேண்டாம்.


    நன்றி காரிகன் !

    விமல்

    ReplyDelete
  119. கட் அவுட் வைச்சதாலதான் இளையராஜா இசை ஞானியா ஆனாரா? விமல் இத்தனை காலம் இது எனக்கு தெரியாமே போச்சே.

    ReplyDelete
  120. விமல்,

    உங்களின் பேடித்தனம் நன்றாகவே வெளிப்படுகிறது.

    கட்டவுட் என்ற மகா காமெடி சாதனையை உங்கள் இளையராஜாவின் மிகப் பெரிய சாதனையாக நீங்கள் உறுதி செய்கிறீர்கள். - இளையராஜாவுக்கு வேற எதுவும் பெருமைகள் இல்லை என்று --சொன்னதயே சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். உங்கள் இசை ஞானி உலகத்திலேயே இவரைப் போன்று வேறு எவரும் இல்லை என்று நீங்கள் குதிக்கும் இளையராஜாவின் பெருமைகள் வெறும் பத்தடி கட்டவுட் தானா? வேறு எதுவும் இல்லையா?

    நன்றி. இதைதான் நான் எதிர்பார்த்தேன்.

    மற்ற பத்து பாயிண்டுகள் என்ன ஆயின?

    தமிழிசையை சீரழித்த இளையராஜாவை நான் என்றைக்கும் பழைய இசை அமைப்பாளர்களின் அருகே கூட வைக்க மாட்டேன். இதுதான் எனது தீர்மானமான முடிவு.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நாங்கள் அவரை முன்னோர்களின் அருகில் வைத்து அழகு பார்ப்போம். அப்படி பார்த்ததால்தான் இளையராஜாவின் இசை அழகு தெரிந்தது.

      Delete
  121. இல்லை காரிகன்.இசையில் எல்லோரையும் மயங்க வைத்து ,மகிழ்வித்ததால் அவரை இசைஞானி என்று அழைத்து பின் கட்டவுட் கட்டி மகிழ்ந்தார்கள்.

    vimal

    ReplyDelete
  122. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  123. ஆயினும் மற்ற கேள்விகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன.

    Pornmusic. இல் எம் எஸ் வீ பாடல்கள் சேரவில்லையா என்பதையும் சொல்லிவிட்டால் நான் போய் விடுகிறேன். நிறைய வேலை இருக்கப்பா ! தயவு செய்து 2 பாடல் தானே என்று 2000 மைல்கல் சுற்ற வைக்க வேண்டாம்

    நேரடியான பதில் ப்ளீஸ் !

    உங்கள் ரத்தக் கொதிப்பு ஏறி இருப்பது தெரிகிறது."மனசு மயங்கும் மௌன கீதம் பாடு "கேளுங்க ! மனப்பாரம் இறங்கும் !


    vimal

    ReplyDelete
    Replies
    1. குட்டிப் பயலே!
      அந்தப் பாடல் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறது என்பது தெரியாமல் எதற்கு விவாதம் செய்ய வந்தாய்.

      Delete
  124. விமல்,

    மீண்டும் porn இசை பற்றி பேச ஆரம்பிக்கிறீர்கள். தமிழ்த் திரையிசையில் படுக்கையறை இசையை விரக ஓசையை அந்த நரகல் இசை பாணியை அறிமுகம் செய்து அதன் மூலம் தன் புகழின் அடர்த்தியை மேருகேற்றிக்கொண்டவர் இளையராஜா. அவர்தான் இவ்விதமான இசையின் முன்னோடி. அவர் ஆரம்பித்த அந்த கேடுகெட்ட இசை வடிவம்தான் தரமான தமிழிசையை சீரழித்தது.இளையராஜாவுக்கு முன் வேறு எந்த இசை அமைப்பாளர்களும் இதைச் செய்யவில்லை.

    ReplyDelete
  125. விமல்.
    உமக்கு விளக்கம் நான் என் தளத்தில் தருகிறேன் வாரும் ஐயா அங்கே .
    பயமாய் இருந்தால் வரவேண்டாம் .

    ReplyDelete
  126. காரிகன்
    ஆஅ ,,,ஆஅ , மெல்ல மெல்ல தொடுங்கள் ....இது என்ன எம் எஸ் வீ அவர்களுக்கு ராஜா போட்டுக்க் கொடுத்த மெட்டா..?

    உதட்டுக்கனிக்குள் இருக்கும் சிவப்பூ.....ஆ ..ஆஅ ,,,,ஆஅ இதுவும் ராஜா சொல்லிக் கொடுத்தாரா ?

    அந்த இரண்டு படுக்கையறை காட்சிகளுக்கு ஆட்டம் போட்டது எம் ஜி ஆறும் , சிவாஜியும் தான்.இசையமைப்பாளர்களின் வேலை படக்காட்சிக்கு இசையமைப்பது தான்.

    இதில் நாம் எம் எஸ் வீயை குற்றம் சொல்ல முடியாது என்கிறோம் ,ஆனால் சுவாமிகளான நீங்கள் ராஜாவை மட்டும் குற்றம் சொல்லும் பாமரத்தனத்தை தான் கேள்விக்குறி ஆக்குகிறோம்.

    இந்த படுக்கையறை காட்சிகளுக்கான இசையில் கூட ராஜாவுக்கு வழி காட்டியவர்கள் முன்னவர்கள் தான் !

    இதை சொன்னால் புல்லாங் குழல் கொடுத்த கண்ணன் என்ற பாலகனையும் களத்தில் இறக்கியுள்ளீர்களே! பாவம் அவரை வெளியில் நின்று ஆட்டத்தை ரசிக்க சொல்லுங்கள் !

    சுயபுத்தி உள்ள மானிடனாக இருந்தால் நேரடியான பதில் சொல்லும் !இல்லை என்றால் ஓடும் !

    விமல்

    ReplyDelete
  127. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  128. >>தமிழ்த் திரையிசையில் படுக்கையறை இசையை விரக ஓசையை அந்த நரகல் இசை பாணியை அறிமுகம் செய்து அதன் மூலம் தன் புகழின் அடர்த்தியை மேருகேற்றிக்கொண்டவர் இளையராஜா//>> காரிகன்

    என்ன அருமையான கிணற்றுதவளைத்தனம் ! 1960 களில் வந்த பாடல்களை யாரைய்யா இசையமைத்தார்கள் ?

    மெதுவா மெதுவா தொடலாமா - பாடல் முனகவில்லையா ...? அது கே வீ எம் இசை

    ஒ , ஓகோ ,, ஓகோ கோ ஹ்ஹோய் ..,,இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா = எம் எஸ் வீ

    ஹா ,,,ஹ்ஹா ,,,ஹஹாஹ் ,, என்ன சொல்ல என்ன சொல்லா ஹா ,,,ஹ்ஹா ,,,ஹஹாஹ்= எம் எஸ் வீ இசை ,

    எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது - [ உதட்டுகனிக்குள் இருக்கும் சிவப்பு ஹ்ஹா ,,,ஆஅ - எம் எஸ் வீ

    இதழே இதழே தேன் வேண்டும் [ஆஅ ,,,ஆஅ , மெல்ல மெல்ல தொடுங்கள் ..ஆஅ ,,,ஆஅ , ] .. எம் எஸ் வீ

    இவைகள் எல்லாம் பக்திப்பாடல்களா ...?

    இவை எல்லாம் ராஜா அறிமுகம் செய்யவில்லை ,,,சுவாமிகளே ! அவரது முன்னோர்கள் அறிமுகம் செய்தது.அவர்கள் பெரிய இசையமைப்பாளர்கள் !

    இதெல்லாம் பொய் என்றால் தலைதெறிக்க ஓடிப்போனாரே ஒருவர் [ திரைக்குப்பின்னால் நடந்த மர்மங்கள் அதிகம் அறிந்த எழுத்தர்]அவரைக் கேட்டுப் பார்த்து அறியாமையைப் போக்கி கொள்ளுங்கள் !


    விமல்

    ReplyDelete
    Replies
    1. கைய புடுச்சு இழுத்தியா! என்ன கைய புடுச்சு இழுத்தியா! _______ புடுச்சு இழுத்தியா! என்ன ______ புடுச்சு இழுத்தியா! ஏற்கனவே எங்களுக்கு வாய்க்கா தகராறு!
      சுரேஷ் .

      Delete
  129. விமல்,

    நீங்கள் எதிர்பார்ப்பது வீண். நான் தெளிவாகவே எனது கருத்தை சொல்லிவிட்டேன். இளையராஜாவே நமது இசைச் சீரழிவிற்க்கு முதல் காரணம் என்று. நீங்கள் அதை விரும்பாவிட்டாலும் அதுதான் எனது முடிவு. நீங்கள் உங்களுக்கு வேண்டிய பதிலை நான் சொல்லவேண்டும் என்று என்னை நிர்பந்தித்ததால் அது நடக்காத காரியம்.

    மேலே உள்ள அனானி பேசிய பேச்சுகள் என்னுடையதாக தோற்றமளிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. எனவே என் பெயரை வைத்துகொண்டு படம் காட்டுகிறீர்கள். என் எழுத்து எப்படி இருக்கும் என்று படிப்பவர்களுக்குத் தெரியும்.

    ReplyDelete
  130. நல்லது காரிகன்

    நீங்கள் நான் பிடித்த முயலுக்கு நாலு கால் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

    >>>>/// "நான் தெளிவாகவே எனது கருத்தை சொல்லிவிட்டேன். இளையராஜாவே நமது இசைச் சீரழிவிற்க்கு முதல் காரணம் என்று. நீங்கள் அதை விரும்பாவிட்டாலும் அதுதான் எனது முடிவு.-<<<<<//// -காரிகன்

    உங்கள் முடிவு வெறும் பச்சை பொய்யை ஆதாரமாகக் கொண்டது.எள்ளளவும் உண்மை இல்லை.

    உங்களுக்கும் அமுதவனுக்கும் இளையராஜா மீதான வன்மம் வேறு எங்கோ இருக்கிறது.அது எங்கே என்று சொன்னால் விஷயம் முடிந்து விடும்.

    இதை விடுத்து இசைவிமர்சனம் என்ற போர்வையில் அவரை அசிங்கப்படுத்த வேண்டாம்

    இன்னும் நிறைய பதில் வரவேண்டி இருக்கிறது .பல கேள்விகள் நிலுவையில் உள்ளன ராசா ! அவற்றுக்கு பதில் சொல்லி விட்டு ஓடுங்கள் !


    விமல்

    ReplyDelete
  131. நீங்கள் நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

    vimal

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லு தம்பி

      Delete
  132. நீங்கள் நான் பிடித்த முயலுக்கு நாலு கால் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.
    நீங்கள் நான் பிடித்த முயலுக்கு நாலு கால் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.
    நீங்கள் நான் பிடித்த முயலுக்கு நாலு கால் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.
    நீங்கள் நான் பிடித்த முயலுக்கு நாலு கால் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

    முயலுக்கு நாலு கால்
    முயலுக்கு நாலு கால்
    முயலுக்கு நாலு கால்
    முயலுக்கு நாலு கால்

    சுத்தம்! நீ முட்டாளா அல்லது ஒங்கூட பேசிக்கிட்டிருக்கிற காரிகன் முட்டாளான்னே தெரியல.

    ReplyDelete
  133. அருமையாய் பெருமை பேசி ஊர் சுற்றும் பெரியவரே நமக்குத்தான் தெம்பில்லையே.
    பிறகு எதற்கு வீண் விவாதம் செய்துவிட்டு புறமுதுகு காட்டி ஓடவேண்டும். பீ கூல் ....

    ReplyDelete
  134. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  135. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  136. காரிகன்

    உங்களிடம் இருந்து என் கேள்விக்கான பதில் இன்னும் வரவில்லை.அனானி பின்னூட்டம் இடுவதில் நீர் சூரப்புலி ! உம்முடைய தளத்திலேயே நாம் அதைக் கண்டோம்.புனை பெயரில் நீங்களே உங்களைப் புகழும் பின்னூட்டங்களை ரசித்து சிரித்தவர்கள்
    ராஜா ரசிகர்கள் !

    சினிமா இசை பற்றி உங்களுடைய உளறல்கள் அம்பலத்திற்கு வந்து விட்டன ! நடுநிலை நாடகம் போடாமல் விடையை சொல்லும்.

    உங்களுடைய இந்த வசவுகள் நமக்கு புதிதல்லவே ! இப்படி ஆத்திரமூட்டலகளால் கதையை திருப்பிவிடும் உங்களதும் ,அமுதவனதும் கைங்கரியங்கள் இங்கே பலிக்காது !


    இளையராஜா தனக்கு முன்னைய இசையமைப்பாளர்களை திறமையாலும் புகழாலும் பலமடங்கு தாண்டி விட்டார் ! என்பதை ஒத்துக்கொள்ள முடியாத படு தோல்வி அடைந்து விட்டார் !

    இளையராஜா ரசிகர்களுடன் விதண்டா வாதம் செய்து காரிகன் பதிலளிக்க முடியாமல் தோற்று விட்டார் !

    திரை உலகின் ,திரைமறைவில் நடந்த மர்மங்கள் பல தெரிந்த கலைஞர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்த அமுதவனும் தலை தெறிக்க ஓடிவிட்டார் !இனி அரைகுறை தகவல்களை காரிகனுக்கு சொல்லிக் கொடுக்கவும் ஆளில்லை !

    இப்படி நான் போட்ட தடத்தில் " பூச்சாண்டி இசை எழுத்தர் " மாட்டியதில்மிக்க மகிழ்ச்சி !


    நன்றி அனைத்தும் சார்ல்ஸ் அவர்களுக்கே !

    விமல்

    ReplyDelete
  137. காரிகன்

    உங்கள் தோல்வியை தாங்க முடியாத உங்கள் மற்றும் உங்கள் அடியாட்களின் வசை மொழிகளை கேட்க தயாராய் உள்ளோம் .

    பொழிந்து தள்ளுங்கள் !

    என் கேள்விகளுக்கு 5 வருடங்கள் அவகாசம் தருகிறேன் , முடித்தால் பதிலை தயார் செய்து வரவும்! தயாரித்து முடிந்ததும் அழையுங்கள் . வருகிறோம்.

    மீதியை பிறகு பார்க்கலாம்.

    சரீங்களா !?

    விமல்

    ReplyDelete
  138. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  139. This comment has been removed by the author.

    ReplyDelete
  140. காரிகன்

    நீங்கள் வசைக்கு பெயர் போன ஆள் என்பதை பலமுறை நிரூபித்தவர்.என் பெயரில் உங்கள் வசைகளை நீங்களே எழுதி உங்களை அநாகாரீகன் என்று மீண்டும் நிரூபித்தமைக்கு நன்றிகள்.!

    நீங்கள் தான் காரிகன் ஸ்வாமிகள் ஆயிற்றே ! புது புது வடிவங்களில் நீங்கள் தோன்றுவீர்கள்! தோன்றி இசைராசாவின் ரசிகர்களை சன்னதம் ஆடுவீர்கள் !

    போயும் போயும் விமலிடம் தோற்று துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளித்துக் கொண்டு கல்லை வீசுகிறீர்களே ! அதை எண்ணித் தான் வருந்துகிறேன்.

    நாம் தான் சொல்லி விட்டேனே இன்று போய் நாளை வா என்று , பிறகென்ன தூசணங்கள் ..!

    முடிந்தால் அமுதவனுக்கு E-mail பண்ணி அழைத்து வாரும் ! ok-

    உங்கள் ஆங்கில நாகரீகத்திற்கே இழுக்கல்லவா ...?

    விமல்

    ReplyDelete
  141. அண்னே! வணக்கம்,
    எதையுமே நடுநிலைய பார்க்க தெரியாத - கரி கண் - இப்போ கரி பூசுன மூஞ்சி கண் ஆனார். அவருடைய சின்ன சின்ன கட்டுரை (நீண்ட கட்டுரை என்று பிதற்ற நான் என்ன "அவனா") எதை சொல்ல வருகிறது என்று எல்லாம் தெரிந்த(!!!!!)(சும்ம ல்லொல்ல) அவருக்கே தெரியாது என்பது திண்ணம்.

    விமல் போடற பௌன்செர்ஸ் அவர் மூஞ்சியை பதம் பார்த்தாலும், மூஞ்சில ரத்தம் சொட்ட சொட்ட நான் இன்னும் அவுட் இல்ல என்று பரிதாபமாக கூறும் அவரை பார்த்து இந்த மரமண்டைக்கு (சொல் courtesey- கரி gun) உண்மை புரியவே புரியாத என்று பாவமாக பார்க்க தோன்றுகிறது!

    என்னதான் நடுத்தெருவுல நாலு பேர் காரி மூஞ்சில துப்பினாலும் அத தொடைச்சிட்டு வெக்கமே இல்லாம hero மதிரி பல்ல காட்டிட்டு நிப்போம்ல என்று கூறும் வடிவேலுவின் ஞாபகம் வருகிறது!

    பின் குறிப்பு :-
    இந்த பதிவு யார்(தனி மனிதர்) மனதையும் புண் படுத்தும் நோக்கத்தோடு பதிவு செய்யபட்டது அல்ல.

    இப்படிக்கு

    "இந்தியாவிலிருந்து பணக்காரன்"

    நன்றி

    ReplyDelete
  142. காரிகனோடு,,,,,,,,,, good fun!!

    ReplyDelete
  143. சில “விற்பன்னர்களுக்கு” திரு சேதுபதி அவர்களின் பதில் :-- http://idlyvadai.blogspot.in/2010/09/blog-post_10.html

    ReplyDelete

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்